- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

நாளை ஆடி தேய்பிறை பிரதோஷம் தினத்தில் இவற்றை செய்து மிகுதியான பலன் பெறுங்கள்

எந்த ஒரு மனிதரும் செயலாற்றாமல் இருக்க முடியாது. அப்படி செயலாற்றும் சமயங்களில் நாம் செய்கின்ற காரியங்களை பொறுத்து புண்ணியம், பாவம் போன்றவை நமக்கு ஏற்படுகின்றன. இவை நாம் மறைந்த பிறகும் நம்முடன் தொடர்ந்து வருகின்ற ஒரு விடயமாக இருக்கிறது. மறுபிறப்பிற்கும் வழிவகுக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. பிறப்பு, இறப்பு வாழ்க்கை சுழற்சியை அறுத்து, வீடுபேறு அளிக்கும் தெய்வமாக சிவபெருமான் இருக்கிறார். அவரை வழிபடுவதற்குரிய ஒரு அற்புத தினம் தான் பிரதோஷம் தினம். ஆடி மாதத்தில் வருகின்ற ஆடி தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை எவ்வாறு வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்

ஆடி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். நாளைய ஆடி தேய்பிறை பிரதோஷம் சிவனுக்கு உகந்த திங்கட்கிழமை அன்று வருவது மிகவும் விசேஷமானதாகும். ஆடி தேய்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.

- Advertisement -

பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தருவது சிறந்தது. மேலும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த அரிசியை நந்தி பகவானுக்கு நைவேத்தியாமாக வைக்க வேண்டும். பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து வெள்ளை நிற பசுவிடமிருந்து கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, மல்லிகை பூக்கள் சாற்றி வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். .

ஆடி தேய்பிறை பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், அனைத்து விதமான தோஷங்களும் நீங்குகிறது. திங்கட்கிழமையில் வருகின்ற ஆடி பிரதோஷத்தில் சிவனை வழிபடுவதால் சந்திர கிரக தோஷங்கள் நீங்குகிறது. சித்த பிரம்மை, மன நல குறைபாடுகள் போன்றவை குணமாகும். வேலை கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
அத்தி வரதர் தரிசனம் முக்கிய தகவல்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Aadi theipirai pradosham in Tamil. It is also called as Aadi matham in Tamil or Pradosham valipadu in Tamil or Aani pradhosham in Tamil or Aadi matha pradhoshangal in Tamil.

- Advertisement -