அத்தி வரதர் தரிசனம் குறித்த முக்கிய தகவல் இதோ

athi-varadhar
- Advertisement -

பாரதத்தில் மோட்சம் எனும் முக்திபேறு வழங்கும் புண்ணிய நகரங்கள் எழில் தென்னிந்தியாவில் ஒரே ஒரு மோட்சாபுரியாக காஞ்சிபுரம் நகரம் மட்டுமே இருக்கிறது. பல புராண மற்றும் வரலாற்றுப் பெருமைகளை கொண்ட காஞ்சிபுரம் நகரம் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பல நூற்றுக்கணக்கான கோயில்களை கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட கோயில்களில் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் தான் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த அத்திவரதர் வைபவம் குறித்த ஒரு விடயத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அத்தி மரத்தில் பிரம்மதேவரின் ஆணைக்கிணங்க தேவலோக சிற்பி செதுக்கிய விக்கிரமாக அத்திவரதர் விக்கிரகம் கருதப்படுகிறது. அத்தகைய அத்திவரதர் விக்கிரகம் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் மூழ்க வைக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து அத்திவரதர் தரிசன வைபவம் நடைபெறுகிறது. பல லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபடும் ஒரு ஆன்மீக பெருவிழாவாக இது திகழ்கிறது.

- Advertisement -

பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இந்த அற்புத அத்தி வரதர் தரிசனத்தின் போது சில நாட்கள் சயன கோலத்திலும், சில நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பது ஆன்மீக நடைமுறையாகும். அந்த வகையில் ஜூலை 24ம் தேதி நின்ற கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் தருவார் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் சில காரணங்களுக்காக இங்க நின்ற கோலத்தில் அத்திவரதர் தரிசனம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது அத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசனம் செய்வதற்கு வரதரின் திருவுருவ சிலை நிலையாக நிற்பதற்கான வலுவான நிலைபீட அமைப்பு நிறுவப்பட்டு, விரையில் நின்ற கோலத்தில் அத்தி வரதர் தரிசனம் தரும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் இந்த நின்ற நிலையில் இருக்கும் அத்தி வரதர் தரிசனம் காண பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் அதற்கேற்ற முன்னேற்பாடுகளை செய்யும் பணியும் வேகமாக நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
அத்தி வரதர் தரிசனம் முக்கிய குறிப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar dharshan change in Tamil. It is also called as Athi varadar dharisanam kanchipuram in Tamil or Athi varadar valipadu in Tamil or Athi varadhar vizha in Tamil.

- Advertisement -