- Advertisement -

நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு நாள், திதி, நட்சத்திரம் என தனித்தனியாக பிரித்து அதை ஒவ்வொரு தெய்வங்களுக்காக வகுத்து வைத்திருக்கிறோம். அந்தந்த நாட்களில் அவர்களை வணங்கும் போது நமக்கான வேண்டுதல் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அப்படி இருக்கையில் ஒரே நாளில் சகல தெய்வங்களின் அனுகிரகத்தையும் பெற முடியும் என்றால் அது அற்புதமான நாள் தானே. அந்த வகையில் நாளைய தினம் இப்படி ஒரு அற்புதமான நாளாக நமக்கு அமைந்திருக்கிறது. நாளை தினம் வெள்ளிக்கிழமை,சதுர்த்தி திதி, விசாக நட்சத்திரம், பஞ்சமி திதி என அனைத்தும் ஒரு சேர வந்தருக்கிறது.

- Advertisement -

இது நம்முடைய வேண்டுதல்களை விரைவில் நிறைவேற்றிக் கொள்ள நமக்கு ஒரு வரம் என்றே சொல்லலாம். அந்த நாளில் நாம் எந்தெந்த தெய்வங்களை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சகல தெய்வங்களின் அனுகிரகத்தையும் பெற

நாளைய தினம் சதுர்த்தி திதி இருப்பதால் விநாயகருக்கு உகந்த வழிபாட்டை முதலில் செய்யலாம். இதற்கு உங்கள் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்று அருகம்புல் வைத்து வழிபடுங்கள். அதே போல் உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகர் படத்திற்கு அல்லது சிலை இருந்தால் அவற்றிற்கு அருகம்புல் வைத்து வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -

நாளைய தினம் மகாலட்சுமி தாயார் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள் அன்னைக்கு வாசம் மிக்க மல்லிகை மலரை சூட்டி நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். இது உங்களுடைய செல்வ வளத்தை அதிகரித்துக் கொடுக்கும். அத்துடன் நாளைய தினத்தில் குலதெய்வ வழிபாடு செய்ய முடிந்தவர்கள் செய்யுங்கள். இது உங்கள் குடும்பத்தை மேலும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும்.

அதே போல் நாளைய தினத்தில் அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்கு சிகப்பு நிறத்திலான மலர்களை வாங்கிக் கொடுங்கள். இது உங்களுடைய எண்ணங்களை ஈடேற்றி கொடுக்கும். நாளை யாரேனும் ஒருவருக்காவது அன்னதானம் கொடுங்கள் இது உங்கள் வறுமை இல்லாத வாழ்க்கை உதவி புரியும்.

- Advertisement -

அதே போல் நாளைய தினத்தில் காலை அல்லது மாலை ஏதேனும் ஒரு வேளையாவது வீட்டில் சாம்பிராணி தூபம் போடுங்கள் இது வீட்டில் செல்வ நிலையை அதிகரிக்கும். நாளை மாலையில் பஞ்சமி திதி துவங்குவதால் வாராகி அன்னைக்கு கிழங்கு வகைகளை வைத்து வழிபாடு செய்யுங்கள். இது உங்கள் வீட்டில் நோய் நொடி இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ வடிவமைக்கும்.

அதே போல் நாளைய தினத்தில் வீட்டில் நிலை வாசலுக்கு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து நிலை வாசல் பூஜை செய்யுங்கள். இதுவும் உங்கள் குடும்பம் சுபிட்சமாக வாழ வழிவகுக்கும். இவற்றுடன் நாளை மாலை வேளையில் சஷ்டி கவசம் கேளுங்கள் அல்லது தெரிந்தால் சொல்லுங்கள். இது உங்களுக்கு சகல சௌபாக்கியத்தையும் தேடித் தரும் வழிபாடாக அமையும்.

இதையும் படிக்கலாமே: கணவன் மனைவி ஒற்றுமையுடனும் அன்புடனும் இருக்க வழிபாடு

இத்தனை சிறப்பம்சங்கள் நிறைந்த நாளைய நாளை தவிர விடாமல் இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது செய்து உங்கள் வாழ்க்கை வளமானதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -