- Advertisement -
மந்திரம்

எத்தகைய நோயையும் போக்கி உடல் பலம் பெற அனுமன் காயத்ரி மந்திரம்

உலகில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் வாழ்கின்றன. இதில் விலங்குகளுக்கு இருக்கும் உடல் வலிமையில் சிறிது கூட மனிதனுக்கு இல்லை. ஆனால் மனிதனுக்கு மட்டுமே இருக்கும் சிந்திக்கும் திறனால் அவன் ஒட்டுமொத்த உலகையே ஆளுகிறான். ஒரு மனிதனுக்கு உடல் மற்றும் மனம் இரண்டுமே சமநிலையான பலம் கொண்டிருக்க வேண்டும். அத்தகைய உடல் மனோபலத்தை தருபவர் ஸ்ரீ ஆஞ்சநேயர். அவரை வழிபடுவதற்கான மந்திரம் இது.

ஹனுமான் காயத்ரி மந்திரம்

“ஓம் அஞ்சனிசுதாய வித்மஹி
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ மாருதித் ப்ரசோதயாத்”

- Advertisement -

உடல் மற்றும் மனம் பலம் பெற வேண்டும் என நினைப்பவர்கள் தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு மற்ற மந்திரங்களை ஜெபிக்கும் வாடிக்கை இருந்தாலும் இம்மந்திரத்தையும் “ஸ்ரீ ஆஞ்சநேயரை” உளமார நினைத்து, 108 முறை இம்மந்திரத்தை கூறி வணக்க வேண்டும். மேலும் நீண்ட காலம் நோய் பாதிப்பால் அவதியுறுபவர்கள் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கோ அல்லது சந்நிதிக்கோ சென்று, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி இம்மந்திரத்தை 108 முடிந்தால் 1008 முறை கூறி ஆஞ்சநேயரை வணங்க அந்த நோய் பாதிப்புகள் நீங்கும்.

ஹனுமான் வழிபாடு

- Advertisement -

ராமாயணத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் நிழலாகவும், அன்புபிற்குரிய அடியவராகவும் இருந்தவர் ஸ்ரீ ஆஞ்சநேயர் எனப்படும் ஹனுமான். நன்மைகள் அனைத்திற்கும் சிறந்த உதாரணமாக ஸ்ரீ ஆஞ்சநேயர் இருக்கிறார். தனது பிரதி பலன் கருதாத பக்தி மற்றும் பிரம்மச்சரிய சக்தியால் சிரஞ்சீவித்துவம் எனப்படும் இறவாநிலை பெற்றவர். தொண்டருக்கு தொண்டராக இருக்கும் அந்த அனுமன் தனது பெயரை கூறி வழிபடும் பக்தர்களை விட, தனது நாதராகிய ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் ராம நாமத்திற்கு மிகவும் கட்டுப்பட்டவராக இருக்கிறார். அந்த ஆஞ்சநேய மூர்த்தியை தொடர்ந்து வரும் பக்தர்களுக்கு வாழ்வில் நன்மைகள் அதிகம் உண்டாகும்.

ஹனுமான் வழிபாட்டிற்குரிய தினங்கள்

- Advertisement -

சக்தி வாய்ந்த தெய்வமாக ஆஞ்சநேயர் எனப்படும் அனுமனை வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் சிறந்தது தான் என்றாலும் மாதந்தோறும் வருகின்ற செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனை வழிபடுவதற்கு சிறந்த தினங்களாக இருக்கிறது. இந்த தினங்களில் அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி, வெண்ணெய் நைவேத்தியம் செய்து, தீபம் ஏற்றி அனுமன் காயத்ரி மந்திரங்களை துதித்து வழிபடுவர்களின் வாழ்வில் ஸ்ரீ ஹனுமான் மிக சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்துவார்.

ஹனுமான் மந்திரங்கள்

ஆஞ்சநேயரை அவருக்குரிய காயத்ரி மந்திரங்களை ஜெபித்து வழிபடுபவர்களுக்கு நவகிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும். குறிப்பாக அஷ்டம சனி, ஜென்ம சனி, ஏழரை நாட்டு சனி போன்ற அனைத்து சனி தோஷங்களின் கடுமை தன்மை குறைந்து, நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படும். பெருமாளின் அருள் முழுமையாக கிடைக்கும். உடல் வலிமையும், மன தைரியமும் அதிகரிக்கும். துஷ்ட சக்தி பாதிப்புகள் மாந்திரீக ஏவல்கள் போன்றவை முற்றிலும் ஒழியும். எதிரிகள் தொல்லை, திடீர் ஆபத்துக்கள் உண்டாகாமல் காக்கும். கல்வியில் சிறந்த தேர்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும். தொழில், வியாபாரங்கள் போன்றவற்றில் நஷ்ட நிலை நீங்கி, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து லாபங்கள் பெருகும். தரித்திரம், வறுமை நிலை அறவே நீங்கும்.

நாம் எந்த ஒரு செயலை செய்யும் போதும் செய்யப்படும் அந்த செயலுக்கான விடயங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே எடுக்கப்பட்ட அந்த செயல் முழுமை பெரும். அது போல் தான் மனிதர்களாகிய நமது உடல் மற்றும் மனமும். இவை இரண்டும் ஆரோக்கியமாகவும் மற்றும் வலிமையாகவும் இருந்தால் மட்டுமே நாம் எப்படிப்பட்ட காரியங்களையும் சிறப்பாக செய்ய இயலும். இவை இரண்டையும் தன்னை வேண்டுபவர்களுக்கு அருள்பவர் தான் ஸ்ரீ ஆஞ்சநேயர்.

ஒரு மனிதன் உயிர் வாழ உணவும், சுவாசிக்க காற்றும் அவசியமாகும். அதிலும் இந்த காற்று ஒரு மனிதனுக்கு மிகுந்த பலத்தை தருகிறது. அப்படிப்பட்ட காற்றுக்கு அதிபதியாகிய :வாயு தேவனின்” அம்சம் தான் “ஸ்ரீ ஆஞ்சநேயர்”. பல தேவர்களின் ஆசிகளுடன் பிறந்த ஆஞ்சநேயர், வஜ்ரத்தை போன்ற உடலும், சிங்கத்தை போன்ற தைரியம் மற்றும் மனோதிடம் கொண்டவர். வாயுவான காற்றின் மிகுந்த பலத்தை பெற்றவர். அவருக்குரிய இம்மந்திரத்தை ஜெபித்து அவரை வழிபடுவதால் அவரின் அத்தகைய சக்திகளை நாமும் பெறலாம்.

இதையும் படிக்கலாமே:
காரிய தடை நீங்க விநாயகர் மந்திரம்

இது போன்று மேலும் பல காயத்திரி மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English Overview:
Here we have Hanuman Gayatri mantra in Tamil. By chanting this mantra one can get a healthy body and peaceful mind.

- Advertisement -