- Advertisement -

பணத்தால் ஒருவருடைய வாழ்க்கையே மாறிவிடும் என்பது பலரது அனுபவபூர்வமான உண்மையாகும். அவசரத்திற்காக நம்மிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு நமக்குத் தேவைப்படும் பொழுது போய் கேட்டால் கொடுக்க முடியாமல் நம்மை அவமானப்படுத்தி கஷ்டப்படுத்தும் நபர்கள் பலர் இருக்கிறார்கள். அதே போல் நம்முடைய கஷ்டத்திற்காக பிறரிடம் இருந்து பணத்தை வாங்கிவிட்டு அதை திரும்பக் கொடுக்க முடியாமல் அவமானப்படுபவர்களும் பலர் இருக்கிறார்கள். நம் பணத்தையே வாங்கிக் கொண்டு நம்மை கஷ்டப்படுத்தும் நபர்களிடமிருந்து நாம் கொடுத்த பணத்தை திரும்ப பெற சக்கரத்தாழ்வாரை எப்படி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

கடன் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு என்றே சில குறிப்பிட்ட தெய்வங்கள் வழிபடுவோம். உதாரணமாக கால பைரவர், வாராகி ததாயார், துர்க்கை அம்மன், முருகன் என்று நாம் கூறிக்கொண்டே செல்லலாம். அனைத்து தெய்வங்களுக்கும் அந்த பலன்கள் இருந்தாலும் குறிப்பாக காவல் தெய்வங்களாக இருப்பவர்களை நாம் இந்த பிரச்சனைக்காக வழிபட்டோம் என்றால் அவர்கள் விரைவிலேயே நம்முடைய பிரச்சனையை தீர்த்து வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் சக்கரத்தாழ்வாரும் வருகிறார். அனைத்து பெருமாள் கோவில்களிலும் சக்கரத்தாழ்வார் கண்டிப்பான முறையில் வீற்றிருப்பார். நம்முடைய பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு நாம் பெருமாளிடம் முறையிடுவதற்கு முன்பாக சக்கரத்தாழ்வார் இடம் முறையிட வேண்டும் என்று கூறப்படுகிறது. எப்படி சிவபெருமானுக்கு நந்தி முக்கியமோ அதே போல் தான் மகாவிஷ்ணுவிற்கு சக்கரத்தாழ்வார் முக்கியமான ஒருத்தராக கருதப்படுகிறார். அப்படிப்பட்ட சக்கரத்தாழ்வாரை நாம் கடன் ரீதியான பிரச்சினைகள் தீர வழிபடும் முறையைப் பற்றி பார்ப்போம்.

கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட காரணம் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானுக்குரிய கிழமையாக செவ்வாய்க்கிழமை திகழ்கிறது. அதனால் செவ்வாய் கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய விஷ்ணு ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய சக்கரத்தாழ்வாருக்கு ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து 12 முறை அவரை வலம் வர வேண்டும். பிறகு அவரிடம் மனதார நிதானமாக யார் பணத்தை திரும்பத் தர வேண்டும் எவ்வளவு தர வேண்டும் என்பதை சொல்லி, அந்த பணம் விரைவில் வந்து சேர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அவ்வளவுதான் உங்களுடைய பணத்தை யார் தர வேண்டுமோ அந்த விஷயத்தை சக்கரத்தாழ்வார் இடம் சொல்லிவிட்டு அவரின் பாதங்களில் ஒப்படைத்து விட்டு கண்டிப்பான முறையில் சக்கரத்தாழ்வார் நம்முடைய பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் வீடு திரும்பினால் போதும். வேறு எதுவும் செய்ய வேண்டியது இல்லை. யாரிடம் நீங்கள் கொடுத்த பணத்தைக் கேட்டு அவமானப்பட்டு திரும்பினீர்களோ? அவர்களே உங்களை தேடி வந்து வாங்கிய பணத்தை திரும்ப கொடுப்பார்கள்.

இதையும் படிக்கலாமே: நல்லதை மட்டுமே கொடுக்கும் பிரபஞ்ச எண்.

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை முழு மனதுடனும் நம்பிக்கையுடனும் செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் அதற்குரிய பலனை நம்மால் அடைய முடியும்.

- Advertisement -