நல்லதை மட்டுமே கொடுக்கும் பிரபஞ்ச எண்.

numbers
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் கெட்டது நடக்கவே கூடாது என்று நினைப்பதை விட, வாழ்க்கையில் நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்று நினைப்பதுதான் நல்லதை தரும். புரிகிறதா? கெட்டது என்ற வார்த்தையை தூர தூக்கிப் போட்டு விடுங்கள். வாழ்க்கை நல்லா இருக்கணும். நல்லது நடக்கணும். நினைத்ததை சாதிக்கணும்.

என்னுடைய வாழ்க்கையில் நல்லது மட்டும்தான் நடக்கும் என்று முழு மனதோடு, நம்பி இந்த நம்பரை இடது கையில், இப்படி எழுதி வைத்தால், உங்கள் வாழ்க்கையில் நல்லது மட்டுமே நடக்கும். அது என்ன நம்பர். அதை எப்படி எழுத வேண்டும். ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

- Advertisement -

அதிஷ்டம் தரும் பிரபஞ்ச எண்

முதலில் அதிஷ்டம் தரும் அந்த நம்பர் என்ன என்று நாம் தெரிந்து கொள்வோம் ’24’. இதுக்கு பின்னாடி என்ன இருக்கு அப்படின்னு ஆராய்ச்சி பண்ணாதீங்க. இதை எழுதினால் நல்லது நடக்கும். சாதாரண நீல நிற பேனா எடுத்துக்கோங்க. வலது கையில் அந்த நீல நிற பேனாவை எடுத்து, இடது உள்ளங்கையில் இந்த நம்பர் ’24’ எழுதி விடவும். இதை எழுதும்போது அன்றைய நாளுக்கு உங்களுக்கு என்ன நல்லது தேவையோ அதை மனதில் நினைத்து எழுதுங்கள்.

இன்று வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும். நிறைய லாபம் கிடைக்க வேண்டும் என்று நினைத்து எழுதலாம். நீங்கள் வேலைக்கு செல்பவர்கள் ஆக இருந்தால் இன்றைய வேலை சுறுசுறுப்பாக முடிக்க வேண்டும் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் சம்பள உயர்வு கிடைக்க வேண்டும். டார்கெட் முடிக்கனும். புது முயற்சிகள் வெற்றியை கொடுக்க வேண்டும் என்று 24 முறை சொல்லி இந்த நம்பரை எழுதலாம். மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்க போறீங்க.

- Advertisement -

உங்கள் காதலை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் இந்த நம்பரை எழுதலாம். இன்று பரீட்சை நன்றாக எழுத வேண்டும் என்று நினைத்தும் இந்த நம்பரை எழுதலாம். இந்த பிரபஞ்சம் உங்களுக்கு என்ன நல்லது இன்று செய்ய வேண்டும். அதை நினைத்து அந்த நல்ல வார்த்தையை 24 முறை சொல்லி இந்த நம்பரை கையில் 1 முறை எழுதிக் கொள்ளுங்கள். இதை அடிக்கடி பார்க்கும்போது நீங்கள் மனதில் நினைத்த அந்த நல்லது உங்களுக்கு நடந்து விடும் என்று நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது இன்னும் சீக்கிரம் நல்லது உங்களுக்கு நடக்க தொடங்கும்.

இதே போல இந்த நம்பரை நோட்டுப் புத்தகத்தில் எழுதலாம். 24 என்ற நம்பரை ஒருமுறை எழுதிவிட்டு, அதற்கு கீழே 24 முறை உங்கள் மனதில் நிறைவேறாத ஆசை இருக்கும் அல்லவா, அதை எழுதி வையுங்கள். உதாரணத்திற்கு 24 என்ற எண் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு, அதற்கு கீழே 24 முறை சொந்த வீடு அமைய வேண்டும் என்று எழுதலாம்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் விளக்கு ஏற்றாத சமயத்திலும் இறையருள் பெற பரிகாரம்

நல்ல வாடகை வீடு கடக்க வேண்டும், நல்ல கணவன் கிடைக்க வேண்டும், நல்ல மனைவி கிடைக்க வேண்டும், ஆரோக்கியம் சரியாக வேண்டும் இப்படி எந்த தேவை உங்களுக்கு பூர்த்தியாக வேண்டுமோ அந்த தேவையை தினமும் 24 முறை, எழுதும்போது அந்த நல்லது உங்களுக்கு சீக்கிரம் நடக்கும் என்பதும் நம்பிக்கை. தேவைப்படுபவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறவும்.

- Advertisement -