- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

சர்ப தோஷம் எதனால் ஏற்படுகிறது ? அதற்கான பரிகாரம் என்ன ?

இந்த காலத்தில் பலரது ஜாதகத்தில் நாக தோஷம் இருப்பதை நம்மால் காண முடிகிறது. இதற்கு என்ன காரணம்? இதை எப்படி சரி செய்வது ?என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

நாகதோஷம் எதனால் ஏற்படுகிறது?
சர்ப்ப தோஷம் வருவதற்கு சர்ப்பங்கள் ஒருவகையில் காரணம் என்றாலும் வேறு சில காரணங்களும் இருக்கதான் செய்கிறது. சர்ப்பங்களை கொன்றவர்களுக்கும், இறை தேடி செல்லும் சர்பத்தை துன்புறுத்தியவர்களுக்கும், ஆண் நாகமும், பெண் நாகமும் ஒன்றாக இணைந்திருக்கும் சமயத்தில் அதை துன்புறுத்தியவர்களுக்கும், பாம்பு தன் குட்டிகளோடு இருக்கும் சமயத்தில் அதை துன்புறுத்தியவர்களுக்கும் சர்ப்பதோஷம் வர வாய்ப்புகள் அதிகம்.

- Advertisement -

அடுத்தவரின் சொத்துக்களை அபகரித்தவர்களுக்கும், கெடுதல்கள் செய்து பிறரின் வருமானத்தை தடுப்பவர்களுக்கும், அடுத்தவர் குடும்ப பிரச்னையில் தலையிட்டு சிறிய பிரச்னையை பெரியதாக்கி குடும்பத்தையே பிரித்தவர்களுக்கும், வார்த்தையினால் அடுத்தவர்களை எப்போதும் புண்படுத்துபவர்களுக்கும் சர்ப்பதோஷம் வர வாய்ப்புகள் அதிகம்.

நாகதோஷத்திற்கான பரிகாரம்:

  • ராகு காயத்திரி மந்திரம் மற்றும் கேது காயத்திரி மந்திரம் ஆகிய இரண்டையும் தினமும் ஜெபிப்பதன் மூலம் சர்ப்ப தோஷம் அகலும்.
  • கும்பகோணத்தில் இருக்கும் திருநாகேஸ்வரம் கோவிலிற்கு சென்று வந்தாலும், திருப்பதி அருகே இருக்கும் காளஹஸ்தி கோயிலிற்கு சென்று வந்தாலும் சர்ப்ப தோஷம் அகலும்.

இதையும் படிக்கலாமே:
அனைவருக்கும் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் நாட்கள் எவை தெரியுமா?

  • தான் யார் என்பதையே அறியாமல் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களுக்கு மனதார உதவுவதன் மூலம் சர்ப்ப தோஷம் அகலும்.
  • சர்ப்பங்களை வழிபடுவதன் மூலம் சர்ப்ப தோஷம் அகலும்.
- Advertisement -