வெறும் 10 ரூபாய் நோட்டு இருந்தால் போதும். பல வகையான பண கஷ்டத்திற்கு சுலபமான தீர்வு கிடைத்துவிடும். எங்கிருக்கும் பணமும் உங்களை நோக்கி வரும்.

mahalashmi
- Advertisement -

நமக்கு அதிர்ஷ்டமும் யோகமும் இருந்தால் போதும். பத்து ரூபாயை வைத்துக் கொண்டு 10 லட்ச ரூபாயை சுலபமாக சம்பாதித்து விடலாம். இதற்காக அதிர்ஷ்டமும் யோகமும் நம்மை தேடி வரவேண்டும் என்பதற்காக, நாம் எந்த வேலையையும் செய்யாமல் சும்மா இருந்தால் எதுவுமே நடக்காது. நாம் செய்யக்கூடிய வேலையோடு சேர்த்து, நாம் செய்யும் முயற்சிகளில் சீக்கிரமே வெற்றி பெற, சில தாந்திரிக தந்திர முறைகளை கையாண்டு பார்க்க வேண்டும். அதில் ஏதாவது ஒரு பரிகாரத்தின் மூலம் நமக்கு அதிர்ஷ்டக் காற்று வீசுவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு தாந்திரிக பரிகாரத்தை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.

cash

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருட்கள். பத்து ரூபாய் நோட்டு, ஏலக்காய் 3, நெல் ஒரு கைப்பிடி அளவு, பச்சை கற்பூரம் சிறிய துண்டு. நெல் மணிகளில் இருந்து எண்ணி 27 நெல்லை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பரிகாரத்திற்கு நமக்கு அது மட்டும் போதும்.

- Advertisement -

ஒரு பத்து ரூபாய் நோட்டின் மேலே 27 நெல்மணிகள், 3 ஏலக்காய், பச்சை கற்பூரம் சிறிய துண்டு, இந்த 3 பொருட்களையும் வைத்து பத்து ரூபாய் நோட்டை நான்காக மடித்து விடுங்கள். நோட்டுக்குள் வைத்திருக்கும் இந்த பொருள் கீழே விழாமல் இருக்க வேண்டும் அந்த அளவிற்கு நோட்டு கிழியாத அளவிற்கும் பார்த்து பத்திரமாக மடித்து கொள்ள வேண்டும்.

nel1

பூஜை அறையில் மகாலட்சுமியின் படத்திற்கு முன்பு தீபமொன்று ஏற்றி வைத்து விடுங்கள். அதன்பின்பு மகாலட்சுமியின் பாதங்களில் நீங்கள் தயார் செய்திருக்கும் இந்த பத்து ரூபாய் நோட்டை வைத்து விடுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனை தீர வேண்டும், பண வரவு அதிகரிக்க வேண்டும், பண கஷ்டத்திற்கு விமோசனம் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள் போதும். இது ஒரு சுலபமான தாந்திரிக முறை இதை செய்து வைத்தால் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து விடுமா என்ற சந்தேகம் நிச்சயம் எல்லோருக்கும் வரும்.

- Advertisement -

பணக் கஷ்டம் தீரும். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பரிகாரத்தை நீங்கள் நம்பிக்கையோடு செய்தால். சரி, இந்த பரிகாரத்திற்க்கு பின்னால் நமக்கு என்ன விஷயம் மறைமுகமாக சொல்லப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு என்பது மகாலட்சுமி அம்சத்தோடு இருக்கக்கூடிய ஒரு பொருள். காசு பணம் இல்லை என்றால் நம்முடைய வாழ்வில் எதுவுமே இருக்காது.

குழப்பமான சூழ்நிலையில் நாம் எதை செய்தாலும் அது நமக்கு வெற்றியை கொடுக்காது. நாம் முன்னேற வேண்டும் என்றால் நம்முடைய மனது முதலில் தெளிவாக இருக்க வேண்டும். மனது சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு உண்டான கிரகம் சந்திரன். சந்திரனுக்கு உண்டான தானியம் நெல். வாசனை மிகுந்த, வசிய தன்மை கொண்ட பொருள் என்றால் அது ஏலக்காய். இது பெருமாளுக்கு உகந்த பொருளாகவும் மகாலட்சுமிக்கு உகந்த ஒரு பொருளாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதை ஏன் மூன்று என்ற கணக்கில் வைக்க வேண்டும். எந்த வேலையை செய்வதாக இருந்தாலும் குருவின் ஆசிர்வாதம் நமக்கு தேவை. மூன்று என்ற எண்ணிக்கையை குறிப்பது குரு.

- Advertisement -

pachai-karpooram1

அடுத்தபடியாக பச்சை கற்பூரம். நேர்மறை ஆற்றலை பரப்பி தரக்கூடிய தன்மை இந்த பச்சை கற்பூரத்தில் உள்ளது. எதிர்மறை ஆற்றலை அருகில் கூட நெருங்க விடாது. ஆக குருபகவானின் ஆசீர்வாதம், மகாலட்சுமியின் ஆசீர்வாதம், பெருமாளின் ஆசீர்வாதம், சந்திர பகவானின் ஆசிர்வாதம் இப்படி எல்லாருடைய ஆசீர்வாதத்தையும் நாம் பெற்று நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்கி படிப்படியாக முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் இந்த பொருட்களை வைத்து வழிபாடு செய்தாலே போதும்.

mahalakshmi

இதில் இருக்கும் பொருட்களை எப்போது மாற்றுவது. மாதம் ஒரு நாள் நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமையை தவிர்த்துவிட்டு மற்ற ஏதாவது ஒரு கிழமையில் மகாலட்சுமியின் பாதங்களில் இருக்கும் பழைய பொருட்களை எல்லாம் எடுத்து விடுங்கள். அந்த பத்து ரூபாய் நோட்டை தான தர்ம காரியத்திற்கு பயன்படுத்தினாலும் சரி, கோவில் உண்டியலில் போட்டாலும் சரி, அது உங்களுடைய இஷ்டம்.

cash

ஏலக்காய் களையும் நெல்மணிகளையும் காக்கை குருவிகளுக்கு இறையாக போட்டுவிடுங்கள். மீண்டும் புதியதாக இந்தப் பொருட்களையெல்லாம் மகாலட்சுமியை வேண்டி வைத்து மறுபடியும் பூஜை செய்ய தொடங்குங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்வில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -