தமிழ் பழமொழிகள் – Proverbs in Tamil

Tamil Proverbs – தமிழ் பழமொழிகள்

Proverbs in Tamil: தமிழ் பழமொழிகள் என்பது நமது கலாச்சாரத்தோடு பல்வேறு வகையில் தொடர்புடையதாகவும் அதே சமயம் பல கருத்துக்களை கொண்டதாகவும் இருக்கும். நமது முன்னோர்கள் அழகிய பல தமிழ் சொற்களை அறிவு சார் பொருள் தரும் வகையில் கோர்த்து அதை நமக்கு பழமொழிகளாக அளித்துள்ளனர். இன்றளவும் பல கிராமங்களில் தமிழ் பழமொழிகள் புழக்கத்தில் உள்ளன. அந்த வகையில் பல நூறு தமிழ் பழமொழிகள் இங்கே கொடுக்கப்பட்டுளளது.

1) பந்திக்கு முந்து, படைக்கு பிந்து
பொருள்: சாப்பிடுவதற்க்கு நம் கை (வலது கை) முந்தும். படைக்குச் செல்லும் சமயத்தில்(போர் புரியும் நேரம்) இடக்கையில் வில்லை ஏந்தி வலக்கையால் பின்நோக்கி இழுத்து அம்பை எய்வோம். எவ்வளவு தூரம் பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அவ்வளவிற்கு அம்பு வேகமாகச் செல்லும். இதுவே பந்திக்கு முந்து,படைக்கு பிந்து என்ற பழமொழியின் அர்த்தம்.

2) சோறு கண்ட இடம் சொர்க்கம்.
பொருள்: இந்த பழமொழியானது தற்காலத்தில் உழைக்காமல் சாப்பிடுபவர்களை கேலி செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதன் உண்மை பொருள் யாதெனில், ஐப்பசி பௌர்ணமியில் சிவன் கோவில்களில் பச்சரிசி சாதத்தால் சிவனுக்கு அபிஷேகம் நடக்கும். அதை காண்பவருக்கு சொர்கம் கிட்டும் என்பதே இதன் பொருள்.

- Advertisement -

3) ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி
பொருள்: தற்காலத்தில் இந்த பழமொழி, 5 பெண்பிள்ளைகளை பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான் என்பதை உணர்த்தும் வகையில் கூறப்படுகிறது. ஆனால் இதன் உண்மை பொருள் யார்தெனில், ஆடம்பரமான தாய், பொறுப்பற்ற தந்தை, ஒழுக்கமற்ற மனைவி, துரோகம் செய்யும் உடன்பிறந்தார், சொல்பேச்சு கேளாத பிள்ளை. இவை ஐந்தையும் பெற்றால் எப்படிப்பட்ட செல்வந்தனும் ஆண்டி ஆவான் என்பதே இதன் பொருள்.

4) நல்ல மாட்டிற்கு ஒரு சூடு
பொருள்: நல்ல மாட்டிற்கு ஒரு சுவடு என்பதே உண்மையான பழமொழி. இதில் சுவடு என்ற வார்த்தை மருவி சூடு ஆகி விட்டது. சுவடு என்றால் கால் தடம் என்று பொருள். அந்த காலத்தில் சந்தையில் மாடு வாங்கும்பொழுது எந்த மாட்டின் கால் தடம் நன்றாக(அழுத்தமாக) இருக்கிறதோ அதுவே பலம் பொருந்திய மாடு என்பதை அறிந்து அதை வாங்குவது வழக்கம்.

5) கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
பொருள்: இதன் உண்மையான பழமொழி, “கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை” அதாவது கழு என்பது ஒருவகை கோரைப்புல்லாகும். இந்த வகை புல்லை கொண்டு பாய் தைத்து படுத்தால் அந்த பாயில் கற்பூர வாசனை வீசுமாம்.

Proverbs in Tamil
Proverbs in Tamil

6) அரசனை நம்பி புருஷனை கைவிட்டது போல
விளக்கம்: உண்மையான பழமொழி என்னவென்றால் “அரசினை நம்பி புருசனை கைவிட்டது போல” என்பதே. அதாவது அந்த காலத்தில் பெண்கள் பிள்ளை பேரு வேண்டி அரச மரத்தினை சுற்றுவது வழக்கம். அப்படி அரச மரத்தினை மட்டும் சுற்றிவிட்டு புருசனை கவனிக்காமல் விட்டால் பிள்ளை எப்படி பிறக்கும் என்பதை கூறுவதற்காக சொல்லப்படுவதே இந்த பழமொழி.

7) ஆயிரம் பேரை கொன்றவன் அரைவைத்தியன் ஆவான்.
விளக்கம்: உண்மையான பழமொழி – “ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்”. ஆதாவது 1000 வேர்களை கொண்டு நோய்க்கு மருந்து தயாரித்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான் என்பதே இந்த பழமொழியின் பொருள்.

8) அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்
பொருள்: அடி எனப்படும் இறைவனின் திருவடியில் சரண் புகுபவர்களுக்கு, அந்த இறைவன் உதவுவது போல அவனின் சொந்த அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்பதே இதன் உண்மையான பொருளாகும்.

9) நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.
பொருள்: பொதுவாக நண்டிற்கு தேவையான உணவு கிடைத்துவிட்டது என்றால் அவற்றை அது உண்டு நல்ல பலம் பெற்ற பிறகு இணைசேர்க்கைக்காக எதிர்பாலினத்தை தேடி வெளியில் வரும். அப்போது தான் பெரும்பாலும் அவை மற்ற பெரிய விலங்குகளிடம் சிக்கி மாண்டு போகும். இந்த பழமொயை பெரும்பாலும் வீண்வம்பில் ஈடுபடுபவர்களை நோக்கி கூறும் ஒன்றாக தற்காலத்தில் வழக்கில் உள்ளது.

10) ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.
பொருள்: ஒரு குடும்பத்தில் நன்மை நடப்பதும், தீமை நடப்பதும் அந்த குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்ணின் கையில் தான் உள்ளது.

- Advertisement -

11) இருகினால் களி இளகினால் கூழ்
பொருள்: எந்த ஒரு விடயத்திலும் எவ்வகையிலாவது நமக்கு நன்மை உண்டு.

12) உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது
பொருள்: என்னதான் பணம் சம்பாதித்து பெரும் செல்வந்தன் ஆனாலும் அவனிடம் படிப்பு இல்லை என்றால் அவனிடம் ஞானம் இருக்காது என்பதே பொருள்.

13) ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க
பொருள்: தாசில் என்ற வார்த்தையும் பொருள் அதிகாரம். எந்த ஒரு விடயத்தின் மீதும் அதிகாரம் செலுத்த ஆசைப்டுவதற்கு முன்பாக அதற்கான உழைப்பை போடவேண்டும். அதிஷ்டத்தை நம்பி இருந்தால் எதுவும் ஆகாது என்பதே இதன் பொருள்.

14) இட்டு கெட்டாருமில்லை ஈயாமல் வாழ்ந்தாருமில்லை
பொருள்: பிறருக்கு தான தர்மங்களை வழங்கி அழிந்தவருமில்லை, அவற்றை வழங்காமல் வாழ்ந்தவருமில்லை.

15) செக்கை வளைய வரும் எருதுகள் போல
பொருள்: செக்கு மாடு எப்படி ஒரே மாதிரி வளைந்து செல்கிறதோ அதே போல எந்த ஒரு உத்வேகமும் இல்லாமல் ஒரே மாதிரியான செயல்களை செய்பவர்களை குறிப்பதே இந்த பழமொழி.

Proverbs in Tamil
Proverbs in Tamil

16) சேர இருந்தால் செடியும் பகை
பொருள்: எப்போதும் பிறருடன் அளவாக பழக வேண்டும். யாருடனும் அதிக நெருக்கத்துடன் இருந்தால் அங்கே பகை உண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

17) தழைத்த மரத்திற்கு நிழல் உண்டு
பொருள்: பக்குவம் பெற்ற ஒருவரால் எல்லோருக்கும் நன்மை ஏற்படும்.

18) துணை போனாலும் பிணை போகாதே
பொருள்: பிறருக்கு துணையாக இருப்பது நல்ல விடயம் என்றாலும் அதற்காக பிறரிடம் அவருக்காகப் பிணையாளியாக இருக்கக்கூடாது. உதரணமாக சொல்ல வேண்டும் என்றால்: யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம் என்று சொல்லுவார்கள் அல்லவா அது போல.

19) கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
பொருள்: கடுகு என்னதான் அளவில் சிறியதாக இருந்தாலும் அதன் வீரியம்(காரம்) என்பது போகாது. அதே போலவே யாரையும், எதையும் சிறியவை என எண்ணி ஒதுக்கிவிடாமல் இருந்தால் அதனால் பல நேரங்களில் மிகுந்த பலன் கிடைக்கும்.

20) கோழையான வீரன் ஆயுதத்தின் மீது குறை சொல்வான்
பொருள்: தனது திறமையின்மையை மறைக்க பிறவற்றை சிலர் குறை கூறுவர். இதை கூறுவதே இந்த பழமொழியின் பொருள்.

Proverbs in Tamil

21) உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது
பொருள்: உறவினர்கள் வீட்டிற்கு செல்லாமல் இருந்தால் உறவு நீடிக்காது. கொடுத்த கடனை கேட்காமல் விட்டுவிட்டால் அதை திரும்ப பெற முடியாது.

22) ஊதாரிக்கு பொன்னும் துரும்பு
பொருள்: சேமிக்காமல் செலவு செய்பவர்களுக்கு எவ்வளவு பெரிய செல்வமும் சிறு துரும்பாகவே தெரியும்.

- Advertisement -

23) ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
பொருள்: ஒரு செயலை செய்யுமுன் அதை நன்கு ஆராய்ந்த பின்பே தொடங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் துவங்கினால் அது மிகத்துயரத்தை கொடுத்துவிடும்.

24) ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
பொருள்: பலமுடையவர்கள் தங்கள் பலத்தால் ஒரு ஏழைக்கு தீங்கு இழைக்கும் போது அவரால் எதிர்க்க முடியாமல் இயலாமையால் மனம் நோக அழ நேரிடும். அவ்வாறான மனம் நொந்து அழுத கண்ணீர் தீங்கிழைத்தவர் எப்படிப்பட்டவர் ஆயினும் அவரை அழித்து விடும்.

25) கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்
பொருள்: வைக்கோல் போன்றவற்றை ஒரு சேர கூட்டி வைத்தால் அவை ‘வைக்கோல் போர்’ என்றும் போர் என்றும் அழைக்கப்படும். அதில் சிறு நெருப்பு பட்டுவிட்டாலும் காய்ந்து இருக்கும் போரானது எளிதில் தீ பற்றி முழுமையாக எறிந்துவிடும்.

Proverbs in Tamil
Proverbs in Tamil

26) ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
பொருள்: பண்டைய காலத்தில் பலரும் கூடி பேசும் இடத்திற்கு அம்பலம் என்று பெயர். அங்கே பணம் உள்ளவர்களின் பேச்சு மட்டுமே எடுபடுமே தவிர ஏழைகளில் பேச்சு எடுபடாது. ஒருவேளை ஏழையாக இருந்தும் அவர் பேச்சு எடுபட வேண்டுமானால் அவர் மெத்த படித்த அறிஞ்சராக இருக்க வேண்டும்.

27) சருகைக் கண்டு தணலஞ்சுமா
பொருள்: உலர்ந்த இலையைச் சருகு என்பர். தணல் என்றால் தீ, உலர்ந்த இலைச் சருகை தீக்கணல் எளிதில் எரித்து விடும். எனவே சருகைக் தணல் அஞ்சப்போவதில்லை. அதே போலவே எளியவரைக்கண்டு வீரன் அஞ்சி ஓடமாட்டான் என்பதை விளக்கவே இப்பழமொழி கையாளப்படுகிறது.

28) எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்
பொருள்: இப்பழமொழி மருத்துவம் சார்ந்த பழமொழி ஆகும். எரு கெட்டார் என்பது மலச்சிக்கல் கொண்டவர்களை குறிக்கிறது. கடுக்காய் மலச்சிக்கலுக்கு மிகவும் சிறந்த மலமிழக்கியாக பயன்படும். அதே போலவே பிள்ளை பெற்ற தாய்க்கும் பயன்படும்.

29) சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.
பொருள்: பேறு பார்க்கும் மருத்துவ மகளிருக்கு (மருத்துவச்சி) கண்டிப்பாக கூலி கிடைத்தே தீரும். ஒருவேளை பிள்ளை இறந்தே பிறந்தாலும் பேரு பார்த்ததற்கான கூலி கிடைக்கும்.

30) அடாது செய்தவன் படாது படுவான்
பொருள்: பல அநியாய செயல்களை செய்பவன், ஒரு கட்டத்தில் தனது செயல்களுக்கான பலனை அனுபவிப்பான்.

31) அப்பன் அருமை செத்தால் தெரியும்
பொருள்: ஒரு குடும்பத்தில் தந்தை என்பவர் இறந்த பின்பு அக்குடும்பம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும். அதுபோல ஒரு விடயத்தை நாம் இழக்கும் வரை அதன் அருமையை நாம் அறிவதில்லை.

32) கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம்
பொருள்: எவ்விடயத்திலும் சிறிய அளவிலான முயற்சி கூட செய்யாதவர் மிகப்பெரும் முயற்சியில் வெற்றியடைவேன் என்று கூறுவது சாத்தியப்படாத ஒன்று.

- Advertisement -

33) அடிநாக்கில் நஞ்சு நுனிநாக்கில் அமிர்தம்
பொருள்: குணத்தால் தீயவர்களாக இருப்பவர்கள் வெளிப்புறத்தில் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்வதை உணர்த்துகிறது.

34) அடுக்கிற அருமை உடைக்கிற நாய்க்கு தெரியுமா
பொருள்: ஒன்றை கடினப்பட்டு உருவாக்குகின்ற அருமை, அதை துச்சமாக நினைப்பவர்களுக்கு தெரியாது.

35) இலங்கையில் பிறந்தவனெல்லாம் ராவணனில்லை
பொருள்: ஒரு விடயத்தை பற்றி நன்கு அறியாமல் அது இப்படி தான் என்று முன்கூட்டியே ஒரு தீர்மானத்திற்கு வந்துவிடுவது தவறு.

Proverbs in Tamil
Proverbs in Tamil

36) குடிப்பதோ கூழ் கொப்பளிப்பதோ பன்னீர்
பொருள்: ஒரு சிலர் வறட்டு கௌரவத்திற்காக தாங்கள் செய்யும் சில செய்கைகளை குறிக்கிறது.

37) அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் ஆயிரம் கதிர் அரிவாள்
பொருள்: ஒரு விடயத்தை பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் அதை தெரிந்தவர் போல் காட்டிக்கொள்பவர்களை குறிக்கிறது.

38) கெட்டவனுக்கு உற்றார் கிளையிலும் இல்லை
பொருள்: தீய குணம் மற்றும் நடத்தை கொண்டவனின் சொந்தம் என அவனது உறவுகள் கூட கூறிக்கொள்ள மாட்டார்கள்.

39) ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்
பொருள்: எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு

40) சங்கரா சங்கர என்றால் சாதம் வாயில் வந்து விழுமா?
பொருள்: ஒரு செயலுக்குரிய முயற்சியில்லாமல் வெறும் வாய்ப்பேச்சு பயன் தராது.

Tamil proverbs

41) ஊசியின் கண்ணிலே ஆகாயத்தை பார்த்தது போல
பொருள்: வறட்டு பிடிவாதம் கொண்டவர்கள் தாங்கள் அறிந்ததே உண்மை தாங்கள் செய்வதே சரி என எண்ணுவர்.

42) உண்டவன் பாய் தேடுவான் உண்ணாதவன் இலை தேடுவான்
பொருள்: ஒருவனுக்கு தன் காரியம் வெற்றி பெற்று விட்டால் அதற்கு அடுத்தகட்ட காரியங்களை மேற்கொள்வான். அந்த காரியம் நடக்காத ஒருவன் அதற்காக தொடர்ந்து முயற்சிப்பான்.

- Advertisement -

43) யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
பொருள்: ஒரு விடயம் நடப்பதற்கு முன்பாகவே அதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே நமக்கு தெரியும். உதாரணமாக தேர்தல் வருகிறது என்றால் உடனே சாலை போடுவது போல.

44) பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
பொருள்: பணத்தின் சக்தியின் முன் மனிதனின் உயர்வான குணங்களுக்கு மதிப்பிருக்காது.

45) தேரை இழுத்து தெருவில் விட்டது போல
பொருள்: மிக உயர்வானவற்றை தரம் தாழ்த்தி விட கூடாது.

Proverbs in Tamil
Proverbs in Tamil

46) ஏணி கழிக்கு கோணல் கொம்பு வெட்டலாமா
பொருள்: ஒரு விடயத்தை செய்வதற்கு தெளிவான திட்டமிடல் அவசியம்.

47) நெடும்பகலுக்கும் உண்டு அஸ்தமனம்
பொருள்: எல்லாவற்றிற்கும் ஒரு முடிவுண்டு. அதற்கான நேரம் வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.

48) கரும்பும் எள்ளும் கசக்கினால் தான் பலன்.
பொருள்: எந்த ஒன்றையையும் எப்படி பயன்படுத்துகிறோமோ அதற்கு ஏற்றார் போலவே அதன் பயன் இருக்கும்.

49) கர்மத்தினால் வந்தது தர்மத்தினால் தொலைய வேண்டும்.
பொருள்: நாம் செய்த தீவினையை ஒரு நற்செயல் புரிவதன் மூலம் ஈடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: விடுகதைகள் தமிழில்

50) கழுதைக்கு வாக்கப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?
பொருள்: ஒரு விடயத்தால் பயனில்லை எனத் தெரிந்த பின்பும் அதில் ஈடுபட்ட பிறகு பின்விளைவுகளுக்கு வருந்த கூடாது.

51) மிதித்தாரை கடியாத பாம்புண்டோ
பொருள்: ஒரு செயலுக்கான எதிர்வினையை அனுபவிக்காதவர் என்று எவரும் இல்லை.

Proverbs in Tamil
Proverbs in Tamil

52) சொல் அம்போ வில் அம்போ?
பொருள்: வில்லிலிருந்து புறப்பட்ட அம்பின் தாக்கத்தை விட நமது நாவில் இருந்து வரும் வார்த்தையின் தாக்கம் அதிகம். எனவே வார்த்தைகளை மிக கவனமாக கையாள வேண்டும்.

53) அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
பொருள்: பயத்தில் உள்ளவருக்கு இருட்டில் எதை கண்டாலும் பேய் போலவே தெரியும் என்பது இதன் பொருள்.

Proverbs in Tamil

  • அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
  • காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
  • சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
  • உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
  • பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
  • கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
  • காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.
  • மத்தளத்திற்கு இரு புறமும் இடி.
  • அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
  • கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
  • முளையில் கிள்ளாதது முற்றினால், கோடாலிகொண்டு வெட்ட வேண்டும் .
  • கேட்டதெல்லாம் நம்பாதே? நம்பியதெல்லாம் சொல்லாதே?
  • சொல்வல்லவனை வெல்லல் அரிது.
  • எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
  • இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்!
  • நுணலும் தன் வாயால் கெடும்.
  • கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
  • கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
  • உழக்கு மிளகு கொடுப்பானேன் , ஒளிந்திருந்து மிளகு சாரு குடிப்பானேன் ?
  • கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்.
  • அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
  • இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
  • கீறி ஆற்றினால் புண் ஆறும்.
  • எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
  • எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
  • நித்திய கண்டம் பூரண ஆயிசு.
  • மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
  • எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
  • சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
  • நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
  • மவுனம் கலக நாசம்.
  • பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
  • ஓடுகிற கழுதை வாலைப் பிடித்தால் , உடனே கொடுக்கும் பலன் (உதய்).
  • பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது .
  • இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
  • கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
  • பசியுள்ளவன் ருசி அறியான்.
  • ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
  • கீர்த்தியால் பசி தீருமா?
  • ஆரால் கேடு, வாயால் கேடு.
  • வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
  • சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.
  • தனி மரம் தோப்பாகாது.
  • வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
  • கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
  • செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
  • வளவனாயினும் அளவறிந் தளித்துண்.
  • ஐந்திலே வளையாதது, ஐம்பதிலே வளையுமா?
  • எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
- Advertisement -

Tamil pazhamozhigal

  • தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
  • குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
  • சாரத்தை உட்கொண்டு சக்கையை உமிழ்ந்துவிடுவதுபோல்.
  • வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
  • தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா?
  • எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
  • அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
  • கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
  • வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.
  • அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
  • மாரடித்த கூலி மடி மேலே.
  • ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
  • இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
  • நாய் விற்ற காசு குரைக்குமா?
  • மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
  • நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக.
  • பல துளி பெருவெள்ளம்.
  • பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
  • குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்.
  • கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
  • சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
  • கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
  • நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
  • சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
  • நூற்றுக்கு மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
  • நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்.
  • குரங்கின் கைப் பூமாலை.
  • நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
  • ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
  • பூனை கொன்ற பாவம் உன்னோடு , வெல்லம் தின்ற பாவம் என்னோடு.
  • கொல்லைக்குப் பல்லி , குடிக்குச் சகுனி
  • அஞ்சும் மூன்றும் உண்டானால் , அறியாப்பெண்ணும் சமைக்கும்.
  • நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
  • எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
  • உடல் ஒருவனுக்கு பிறந்தது , நாக்கு பலருக்கு பிறந்தது .
  • கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
  • கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
  • அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
  • கொடுக்கிறது உழக்குப்பால், உதைக்கிறது பல்லுப்போக.
  • இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா ?
  • கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்.
  • உண்பான் தின்பான் பைராகி, குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி.
  • கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
  • இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
  • தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
  • எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
  • கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
  • காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
  • ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
  • கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
Proverbs in Tamil
Proverbs in Tamil

பழமொழிகள் தமிழில்

  • களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
  • தேன் ஒழுக பேசி , தெருவழியே விடுகிறது.
  • முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
  • சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும்.
  • தன் வினை தன்னைச் சுடும் , ஓட்டப்பம் வீட்டை  சுடும் .
  • நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும்.
  • அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
  • சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி.
  • ஆடு கொழுக்கிறதெல்லாம், இடையனுக்கு லாபம் .
  • கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
  • நாவு அசைய , நாடு அசையும்.
  • சாகிற வரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
  • இட்டவர்கள், தொட்டவர்கள் கெட்டவர்கள், இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்.
  • பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது.
  • எழுதுகிறது பெரிதல்ல , இன்னும் அறிந்து சேர்க்கிறது பெரிது
  • மனம் போல வாழ்வு.
  • கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்.
  • அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
  • ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
  • விளையும் பயிர் முளையிலே தெரியும்.
  • உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
  • ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
  • பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.
  • இனம் இனத்தோடே, வெள்ளாடு தன்னோடே.
  • ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
  • கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
  • காற்றில்லாமல் தூசி பறக்குமா?
  • ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
  • ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
  • இடித்தவள் புடைத்தவள் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாள்.
  • அறிய அறியக் கெடுவார் உண்டா?
  • மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா?
  • தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
  • குலத்துக்கு ஈனம் கோடாலிக்காம்பு.
  • மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
  • மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
  • புண்ணியத்துக்கு உழுத குண்டையை பல்லைப் பிடித்துப் பதம் பார்த்ததுபோல.
  • நாலாறு கூடினால் பாலாறு.
  • தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
  • கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.
  • நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.
  • மீதூண் விரும்பேல்.
  • நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
  • நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமும் இல்லை.
  • தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.
  • கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
  • தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
  • ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை.
  • கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
  • மன்னன் எப்படியோ, மன்னுயிர் அப்படி.
Proverbs in Tamil
Proverbs in Tamil

Simple proverbs in Tamil

  • எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
  • பக்கச் சொல் பதினாயிரம்.
  • ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
  • ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
  • சர்க்கரை என்றால் தித்திக்குமா?
  • நன்மை கடைப்பிடி.
  • எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
  • முருங்கை பருத்தால் தூணாகுமா?
  • கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
  • அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
  • போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
  • கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
  • கூழானாலும் குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
  • பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
  • தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
  • சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
  • சுடினும் செம்பொன் தன்னொலி கெடாது.
  • நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
  • அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
  • மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.
  • நாற்பது வயதுக்கு மேல் நாய்க் குணம்.
  • அறுப்புக்காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி .
  • கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
  • அறமுறுக்கினால் அற்றும் போகும்.
  • வெளவாலுக்கு யார் தாம்பூலம் வைத்தார்கள் ?
  • வீட்டுக்கு செல்வம் மாடு , தோட்டச் செல்வம் முருங்கை.
  • இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
  • கனிந்த பழம் தானே விழும்.
  • கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
  • தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.
  • நோய்க்கு இடம் கொடேல்.
  • உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
  • கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
  • கடல் திடலாகும், திடல் கடலாகும்.
  • ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
  • உளை (அல்லது சேறு) வழியும், அடை மழையும், பொதி எருதும் தனியுமாய் அலைகிறதுபோல்.
  • அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்
  • எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
  • ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
  • இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
  • கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
  • வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.
  • வானம் சுரக்க , தானம் சிறக்கும்.
  • குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
  • ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.
  • புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
  • கல்லாதவரே கண்ணில்லாதவர்.
  • கைய பிடித்து கள்ளை வார்த்து , மயிரை பிடித்து பணம் வாங்குறதா ?
  • காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
  • உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.
Proverbs in Tamil
Proverbs in Tamil

Tamil proverbs in Tamil

  • நாய் வாலை நிமிர்த்த முடியாது.
  • அரைக்கிறவன் ஒன்று நினைத்து அரைக்கிறான், குடிகிறவன் ஒன்று நினைதுக்க் குடிக்கிறான்.
  • மனம் உண்டானால் மார்க்கம் உண்டு.
  • ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை.
  • கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
  • குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
  • சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
  • தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.
  • வெறும் வாய் மெல்லுகிற அம்மையாருக்கு அவல் அகப்பட்டது போல.
  • ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
  • தொடையில் புண்ணை நடையில் காட்டுகிறதா ?
  • சோம்பித் திரியேல்.
  • புத்திமான் பலவான்.
  • இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை; இராச திசையில் கெட்டவணுமில்லை.
  • காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
  • காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.
  • பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
  • பொங்கியும் பால் புறம் போகவில்லை.
  • சுக துக்கம் சுழல் சக்கரம்.
  • இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
  • எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
  • சைகை அறியாதவன் சற்றும் அறியான்.
  • இறைக்கிற ஊற்றே சுரக்கும்.
  • கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
  • பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டாதே.
  • மாடம் இடிந்தால் கூடம்.
  • செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
  • எடுப்பார் மழுவை, தடுப்பார் புலியை, கொடுப்பார் அருமை.
  • கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
  • இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
  • காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
  • வெளுத்ததெல்லாம் பாலல்ல.
  • வருந்தினால் வாராதது இல்லை.
  • காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
  • நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.
  • பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
  • விதி எப்படியோ மதி அப்படி.
  • கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
  • சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
  • நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.
  • நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
  • அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
  • படையிருந்தால் அரணில்லை.
  • எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
  • உளவு இல்லாமல் களவு இல்லை.
  • ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
  • பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
  • கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா.
  • மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
  • தாழ்ந்து நின்றால் , வாழ்ந்து நிற்பாய்.
Proverbs in Tamil
Proverbs in Tamil

Tamil proverbs – தமிழ் பழமொழிகள்

  • ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
  • தவளை தன் வாயாற் கெடும்.
  • தேரோட போச்சு திருநாளு , தாயோட போச்சு பிறந்த அகம்
  • அற்ப அறிவு அல்லற் கிடம்.
  • மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
  • குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
  • வெள்ளம் வரும் முன் அணைகோல வேண்டும்.
  • நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
  • தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
  • தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
  • அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
  • சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்கமாட்டாதவன் ஞானத்தை எப்படி அறிவான்?
  • வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
  • துட்டு வந்து போட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொடியிலே விழுந்ததோ?
  • சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
  • கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
  • கெண்டையைப் போட்டு வராலை இழு.
  • மலிந்த சரக்கு கடைத் தெருவுக்கு வரும்.
  • உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
  • படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
  • ஒரு நாளுமில்லாமல் திருநாளுக்குப் போனால் , திருநாளும் வேரு நாளாச்சுது.
  • செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
  • எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்.
  • அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
  • ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.
  • இரும்பு அடிக்கிற இடத்தில நாய்க்கு என்ன வேலை ?
  • தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
  • காணி ஆசை கோடி கேடு.
  • கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
  • பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்.
  • அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
  • உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
  • எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?
  • அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
  • தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
  • காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
  • உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
  • இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
  • புயலுக்குப் பின்னே அமைதி.
  • மாற்றானுக்கு இடங் கொடேல்.
  • கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
  • கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
  • ஆழமறியாமல் காலை இடாதே.
  • இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
  • எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
  • காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
  • மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே.
  • நிறை குடம் நீர் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும்.
  • தானாடா விட்டாலும் சதையாடும்.
  • குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
Tamil Palamoligal
Tamil Palamoligal

Proverbs in Tamil – தமிழ் பழமொழிகள்

  • மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.
  • ஏரி நிறைந்தால் கரை கசியும்.
  • கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
  • ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
  • கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
  • குணத்தை மாற்றக் குருவில்லை.
  • சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி.
  • எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா.
  • மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.
  • கோள் சொல்பவனைக் கொடுந்தேள் என நினை.
  • அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
  • மெளனம் மலையைச் சாதிக்கும்.
  • ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
  • கள்ள மனம் துள்ளும்.
  • கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம்.
  • சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
  • தருமம் தலைகாக்கும்.
  • சேற்றிலே செந்தாமரை போல.
  • எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
  • காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
  • ஒட்டைக்கூதன் பாட்டைக் கேட்டு இரட்டை தாழ்பாள் போட்டது போல.
  • அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.
  • இரண்டு போன்சாதிக்காரனுக்குக் கொண்டை என்னத்திற்கு ?
  • கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
  • முன் கை நீண்டால் , முழங்கை நீளும்.
  • ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
  • படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
  • வீட்டில் எலி வெளியில் புலி.
  • மேய்த்தால் கழுதை மேய்ப்பேன், இல்லாதேபோனால் பரதேசம் போவேன்.
  • முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
  • பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
  • ஒற்றைக் காலில் நிற்கிறான்.
  • தலையை தடவி மூளையை உரிவான்
  • சாது மிரண்டால் காடு கொள்ளாது.
  • அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
  • குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
  • கெடுவான் கேடு நினைப்பான்.
  • நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு.
  • அகல் வட்டம் பகல் மழை.
  • கல்லாடம் படித்தவனோடு மல் ஆடாதே.
  • தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
  • அரைக்காசை ஆயிரம் பொன்னக்குகிறவளும் பெண்சாதி , ஆயிரம் பொன்னை அறைக்காசு ஆக்கு கிறவளும் பெண்சாதி.
  • கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
  • கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
  • கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
  • காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
  • சாண் ஏற முழம் சறுக்கிறது.
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
  • குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
  • சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
Tamil Palamoligal
Tamil Palamoligal

Tamil proverbs – தமிழ் பழமொழிகள்

  • எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
  • பகுத்தறியாமல் துணியாதே, படபடப்பாகச் செய்யாதே.
  • நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.
  • வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
  • பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்
  • அடியாத மாடு படியாது.
  • பொறுமை கடலினும் பெரிது.
  • மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.
  • குமரிக்கு ஒரு பிள்ளை , கோடிக்கு ஒரு வெள்ளை .
  • வெட்டு ஒன்று துண்டிரண்டு.
  • இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
  • ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
  • மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
  • இறுகினால் களி , இளகினால் கூழ்.
  • சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
  • உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?
  • மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
  • பூவுடன் கூடின நாரும் மனம் பெற்றற்போல்.
  • கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
  • சதை உள்ள இடத்தில கத்தி நாடும்
  • இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை?
  • கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
  • உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
  • குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
  • படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
  • அறச் செட்டு முழு நட்டம்.
  • செய்வன திருந்தச் செய்.
  • மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.
  • அறிவு இல்லார்தமக்கு ஆண்மையுமில்லை.
  • மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.
  • மாவுக்குத் தக்க பணியாரம்.
  • பேச்சுப் பேச்சு என்னும் ; பெரும் பூனை வந்தால் கீச்சுக் கேச் சென்னும் கிளி .
  • நொறுங்கத் தின்றால் நூறு வயது.
  • உட்சுவர் இருக்க, புறச்சுவர் பூசலாமா ?
  • பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
  • ஏருழுகிறவன் இளப்பமானால், எருது மச்சான் முறை கொண்டாடும்.
  • பொறுத்தார் பூமி ஆள்வார்.
  • குப்பை உயரும் கோபுரம் தாழும்.
  • தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
  • கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
  • கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.
  • நல்லவன் உறவை நாலு பணம் கொடுத்துச் சம்பாதிக்கவேண்டும் , கேட்டவன் உறவை பத்துப் பணம் கொடுத்து நீக்கவேண்டும்.
  • கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
  • சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.
  • நயத்திலாகிறது பயத்திலாகாது.
  • குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
  • சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.
  • அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
  • ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
  • கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
Tamil Palamoligal
Tamil Palamoligal

50 proverbs in Tamil

  • சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
  • காய்ந்தும் கெடுத்தது, பெய்தும் கெடுத்தது.
  • பந்தியிலே வேண்டாம் வேண்டாம் என்றாலும் , இலை போத்தல் இலை போத்தல் என்கிறான்.
  • பூனைக்குக் கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
  • மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.
  • போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.
  • கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்.
  • ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்.
  • அகல உழுகிறதை விட ஆழ உழு.
  • உயிரோடு இருக்கும்போது ஒரு கரண்டி நெய்க்கு வழி இல்லை, ஓமத்துக்கு ஒன்பது கரண்டி நெய் விட்டது போல.
  • சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
  • பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
  • நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
  • மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.
  • வடக்கே கருத்தால் மழை வரும்.
  • கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம்.
  • கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
  • குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
  • செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
  • உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
  • குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
  • காலைச் சுற்றின பாம்பு கடிக்காமல் விடாது.
  • விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
  • ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச்சொன்னால்  நோன்டிக்குக் கோபம் .
  • கெட்டாலும் கெட்டி கெட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
  • கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
  • சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
  • பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
  • அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
  • அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
  • ஆனைக்கும் அடிசறுக்கும்.
  • கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
  • ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
  • பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
  • ஆற்றிலே போகுது தண்ணீரை , அப்பா குடி , ஆத்தாள் குடி.
  • உள்ளது போகாது இல்லது வாராது.
  • பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி.
  • அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
  • கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
  • சிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவெண்பாவைக் கற்றுக்கொடுக்க வேண்டுமா?
  • அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
  • ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
  • எண்ணிச் செய்கிறவன் கெட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
  • பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு, பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
  • புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
  • சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.
  • வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
  • மண்னுயிரைத் தன்னுயிர்போல் நினை.
  • சித்திரமும் கைப்பழக்கம்.
  • எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
Tamil Palamoligal
Tamil Palamoligal

Tamil pazhamozhigal – தமிழ் பழமொழிகள்

  • கடையச்சே வராத வெண்ணெய், குடையச்சே வரப்போகிறதோ?
  • நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.
  • கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
  • குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
  • கல்வி அழகே அழகு.
  • ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.
  • அடி நாக்கிலே நஞ்சும் , நுனி நாக்கிலே அமிர்தமா ?
  • ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
  • கெடுக்கினும் கல்வி கேடுபடாது.
  • கன்னி இருக்க காளை மணம் ஏறலாமா ?
  • தன் கையே தனக்குதவி.
  • பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
  • கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
  • காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்.
  • ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
  • எரிகிற விட்டிலே பிடுங்கிறது லாபம்.
  • கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்.
  • கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
  • கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
  • ஈர நாவிற்கு எலும்பில்லை.
  • சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
  • ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.
  • பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்.
  • எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.சருகைக் கண்டு
  • ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க.
  • ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
  • உழுகிற நாளில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தது போல.
  • தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
  • எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
  • முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?
  • கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
  • இளங்கன்று பயமறியாது.
  • முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா
  • பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
  • கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.
  • மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.
  • மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
  • எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
  • மனம் உண்டானால் வழி உண்டு.
  • பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
  • மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
  • சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.
  • வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவு என்ன ?
  • கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
  • கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.
  • விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
  • சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
  • தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?
  • ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
  • முதல் கோணல் முற்றுங் கோணல்
Tamil Palamoligal
Tamil Palamoligal

Proverbs in Tamil – தமிழ் பழமொழிகள்

  • கல்விக்கு அழகு கசடர மொழிதல்.
  • வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்.
  • நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
  • மண்டையுள்ள வரை சளி போகாது.
  • அடக்கமே பெண்ணுக்கு அழகு.
  • காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
  • வாழு, வாழ விடு.
  • அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
  • பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுதானும் பேசாதே.
  • கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
  • யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.
  • நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
  • தாயும் பிள்ளையுமானாலும், வாயும் வயிறும் வேறு.
  • எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
  • பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
  • நோய் கொண்டார் பேய் கொண்டார்.
  • கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
  • மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
  • பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
  • ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
  • உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
  • பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
  • தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
  • எறும்புந் தன் கையால் எண் சாண்.
  • வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
  • துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
  • ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
  • மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்.
  • இளமையில் கல்.
  • வியாதிக்கு மருந்துண்டு, விதிக்கு மருந்துண்டா?
  • எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
  • முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
  • நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
  • உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
  • உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
  • வெறுங்கை முழம் போடுமா?
  • ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைபபூ சக்கரை.
  • பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
  • இஞ்சி இலாபம் மஞ்சளில்.
  • குதிரை நல்லதுதான், சுழி கெட்டது.
  • தூக்குனங்குருவி குரங்குக்கு புத்தி சொன்னது போல
  • தாய் முகம் காணாத பிள்ளையும் , மழை முகம் காணாத பயிரும் உருபடாது.
  • கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
  • குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும்.
  • குறையச் சொல்லி , நிறைய அள.
  • செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
  • காய்த்த மரம் கல் அடிபடும்.
  • கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
  • நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
  • கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
Tamil Pazhamozhigal
Tamil Pazhamozhigal

Tamil proverbs – தமிழ் பழமொழிகள்

  • பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.
  • பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
  • இருவர் நட்பு ஒருவர் பொறை.
  • நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
  • எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்.
  • தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
  • பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
  • முடி வைத்த தலைக்குச் சுழிக் குற்றம் பார்க்கிறதா?
  • முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
  • மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.
  • பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
  • நெருப்பில்லாமல் புகையாது.
  • எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
  • குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
  • ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
  • மன்னவர்கள் ஆண்டது எல்லாம் மந்திரிகள் ஆண்மை
  • வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
  • மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
  • இளமையில் கல்வி சிலையில் எழுத்து.
  • குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
  • நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.
  • நேற்று உள்ளார் இன்று இல்லை.
  • பெண்ணின் கோணல் , பொன்னிலே நிமிரும்
  • உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
  • ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
  • சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.
  • கெட்டும் பட்டணம் சேர்.
  • அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
  • இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
  • கோபம் சண்டாளம்.
  • பணம் பத்தும் செய்யும்.
  • கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
  • கிட்டாதாயின் வெட்டென மற.
  • தந்தை தாய் பேண்.
  • செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
  • கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
  • கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
  • அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
  • குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
  • மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
  • கெண்டையைப் போட்டு விராலை இழுக்கிறது.
  • கொடுத்ததைக் கேட்டால் அடுத்ததாம் பகை.
  • கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
  • பாம்பின் கால் பாம்பு அறியும்.
  • கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது.
  • யானைக்கும் அடி சறுக்கும்.
  • பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
  • உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
  • பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
  • தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.
Tamil Pazhamozhigal
Tamil Pazhamozhigal

Proverbs in Tamil – தமிழ் பழமொழிகள்

  • விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
  • கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
  • முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.
  • மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கர்பூரம்.
  • ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
  • கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
  • மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
  • இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
  • பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
  • கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
  • உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்.
  • அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
  • சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
  • சுட்ட சட்டி அறியுமா சுவை?
  • தலை இருக்க வால் ஆடலாமா ?
  • பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
  • மனமுரண்டிற்கு மருந்தில்லை.
  • நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்.
  • பேராசை பெருநட்டம்.
  • நூற்றைக் கெடுத்தது குறுணி.
  • சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே.
  • கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
  • பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
  • நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.
  • ஆடையில்லாதவன் அரை மனிதன்.
  • கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம்.
  • கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
  • உலகத்துக்கு ஞானம் பேய் , ஞானத்திற்கு உலகம் பேய்.
  • விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
  • இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
  • பங்குனி என்று பருக்கிறதுமில்லை, சித்திரை என்றும் சிறுக்கிறுதுமில்லை.
  • கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
  • குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
  • கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா?
  • கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
  • ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
  • அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
  • பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்.
  • மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்.
  • நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.
  • உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
  • கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
  • எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே.
  • பால் சட்டிக்கு பூனை காவல் வைக்கிறதுபோல்.
  • ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
  • பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
  • நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுவதா?
  • கையாளாத ஆயுதம் துருப்பிடிக்கும்.
  • சுண்டைக்காய் காற்பணம், சுமை கூலி முக்காற்பணம்.
  • அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்கவேண்டும்.
Tamil Pazhamozhigal
Tamil Pazhamozhigal

Tamil proverbs – தமிழ் பழமொழிகள்

  • மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
  • நைடதம் புலவர்க்கு ஒளடதம்.
  • கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குறுணி மோர் குரு தக்ஷணையா?
  • தனக்கு மிஞ்சித் தான் தருமம்
  • பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.
  • கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
  • மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
  • புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
  • அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
  • நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.
  • ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்.
  • சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
  • பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப்படும்.
  • காடுப்பூனைகுச் சிவராத்ரி விரதமா ?
  • தொன்மை நாடி , நன்மை விடாதே.
  • இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
  • பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
  • விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
  • வரவு எட்டணா செலவு பத்தணா.
  • கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
  • முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா?
  • ஊரார் வீட்டு நெய்யே , என் பொண்சாதி கையே.
  • ஈர வெங்காயத்திற்கு இருபத்து நாலு புரை எடுக்கிறது.
  • தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
  • கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
  • பூ விற்ற காசு மணக்குமா?
  • சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.
  • முன் ஏர் போன வழிப் பின் ஏர்.
  • கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
  • ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
  • எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் தூக்குகிறவர் யார்?
  • எறும்பு ஊர கல்லுந் தேயும்.
  • பட்டும் பாழ், நட்டும் சாவி.
  • எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்.
  • காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும், காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
  • ஊணுக்கு முந்துவான் வேலைக்குப் பிந்துவான்.
  • அள்ளாது குறையாது , சொல்லாது பிறவாது.
  • மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.
  • நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.
  • ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
  • நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.
  • யானைகொரு காலம் வந்தால், பூனைக்கொரு காலம் வரும்.
  • மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
  • இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
  • கோல் ஆட, குரங்கு ஆடும்.
  • கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
  • ஊசி கொள்ளப்போய்த் துலாக் கணக்கு பார்த்ததுபோல.
  • கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
  • கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
  • இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
Tamil Pazhamozhigal
Tamil Pazhamozhigal

Proverbs in Tamil – தமிழ் பழமொழிகள்

  • மாரி யல்லது காரியம் இல்லை.
  • சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
  • எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
  • மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
  • மனம் கொண்டது மாளிகை.
  • வருமுன் காப்பதறிவு.
  • ஏதென்று கேட்பாருமில்லை, எடுத்துப் பிடிப்பாருமில்லை.
  • சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
  • கையிலே காசு வாயிலே தோசை.
  • மாவு இருக்கிற மனதைப்போல், கூழில் இருக்கும் குணம்.
  • இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
  • அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
  • எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.
  • எதார்த்தவாதி வெகுசன விரோதி.
  • நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?
  • மதில் மேல் பூனை போல.
  • ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
  • குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
  • நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா!
  • கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
  • பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
  • மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்.
  • அப்பாசுவாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு, கொட்டுமேளம் கோவிலிலே, வெற்றிலை பாக்கு கடையிலே, சுண்ணாம்பு சூளையிலே.
  • ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல்.
  • பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார்.
  • ஆனையை (அல்லது மலையை) முழுங்கின அம்மையாருக்குப் பூனை சுண்டாங்கி.
  • சர்க்கரை என்று சொன்னால் தித்திக்குமா?
  • கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
  • எண்ணை முந்துதோ திரி முந்துதோ?
  • நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு.
  • கடுகு களவும் களவுதான் , கற்புரம் களவும் களவு தான்.
  • ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
  • ருநாள் கூத்துக்கு மீசை சிரைக்கவா?
  • ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம்.
  • ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள் , தொண்ணூறு நாளும் போனால் துடைப்பக்கட்டை
  • கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
  • செல்லும் செல்லாததுக்கும் செட்டியார் இருக்கிறார்.
  • பல்லக்கு ஏய யோகம் உண்டு, உன்னி ஏறச் சீவன் இல்லை.
  • காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
  • ஆம்புடையான் செத்து அவதி படும் போது, அண்டை வீட்டுக்காரன் அக்குளிலே பாய்ச்சுகிறான் !
  • மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.
  • குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
  • காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
  • பிள்ளை பெறப் பெறப் ஆசை , பணம் சேரச் சேர ஆசை.
  • அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  • பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
  • ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
  • வாழ்வும் தாழ்வும் சில காலம்.
  • இன்பமும் துன்பமும் எடுத்த உடலுக்கு இயல்பு.
Tamil Pazhamozhigal
Tamil Pazhamozhigal

Tamil proverbs – தமிழ் பழமொழிகள்

  • கரணம் தப்பினால் மரணம்.
  • நா அசைய நாடு அசையும்.
  • உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
  • காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
  • கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
  • மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
  • கட்டி வைத்த பணத்தைத் தட்டிப் பறித்தார்போல.
  • இறங்கு பொழுதில் மருந்து குடி.
  • குரைக்கிற நாய் கடிக்காது.
  • பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
  • மொழி தப்பினவன் வழி தப்பினவன்.
  • சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
  • ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
  • முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.
  • முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
  • பள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி , மேட்டிலே இருந்தா அக்கா !
  • பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்.
  • காப்பு சொல்லும் கை மெலிவை.
  • கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
  • ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.
  • பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
  • குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
  • ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுக்கவா?
  • தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.
  • வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
  • எங்கே திருடினாலும் கன்னக்கோல் வைக்க ஒரு இடம் வேண்டும்.
  • அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
  • குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
  • இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
  • வணங்கின முள் பிழைக்கும்.
  • எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
  • உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே.
  • பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
  • மின்னுவது எல்லாம் பொன்னல்ல.
  • பணம் உண்டானால் மணம் உண்டு.
  • எருமை வாங்கும் முன் நெய் விலை கூறுகிறதா ?
  • உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்?
  • உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
  • எள்ளுதான் எண்ணைக்குக் காய்கிறது. எலிப் புழுக்கை என்னத்துக்கு காய்கிறது?
  • உலோபிக்கு இரட்டை செலவு.
  • துலுக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்.
  • நித்தியங் கிடைக்குமா அமாவாசைச் சோறு?
  • அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
  • ஒன்று ஒன்றாய் நூறா? ஒருமிக்க நூறா?
  • எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
  • பதறாத காரியம் சிதறாது.
  • இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
  • கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.
  • சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
  • நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.

Proverbs in Tamil – தமிழ் பழமொழிகள்

  • அம்மணத்தேசத்தில் கோமணம் கட்டினவன் பைத்தியக்காரன்.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
  • ஒரு அடி அடித்தாலும் பட்டுக்கொள்ளலாம், ஒரு சொல் கேட்க முடியாது.
  • பெண் என்றால் பேயும் இரங்கும்.
  • உங்கள் உறவிலே வேகிறதைவிட, ஒருகட்டு விறகிலே வேகிறது மேல்.
  • முள்ளை முள்ளால் எடு.
  • பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
  • அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
  • வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா?
  • நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?
  • சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது .
  • எலி அழுதால் பூனை விடுமா?
  • சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
  • கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
  • வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்.
  • குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
  • பருவத்தே பயிர் செய்.
  • உதட்டில் உறவு உள்ளத்தில் பகை.
  • ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
  • பொங்கின பால் போயப்பால்
  • வட்டி ஆசை முதலுக்கு கேடு.
  • வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
  • நீர் மேல் எழுத்து போல்.
  • அந்தி மழை அழுதாலும் விடாது.
  • குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
  • சீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம் , அவள் இச்சம் பாயை கட்டிகொண்டு எதிரே வந்தாளாம்.
  • நெய் முந்தியோ திரி முந்தியோ.
  • ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்.
  • நாள் செய்வது நல்லார் செய்யார்.
  • பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
  • ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
  • ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
  • சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.
  • முகத்துக்கு முகம் கண்ணாடி
  • எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  • தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
  • கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
  • ஊண் அற்றபோது உடலற்றது.
  • பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
  • நூல் கற்றவனே மேலவன்.
  • எதிரிக்குச் சகுனத்தடை என்று மூக்கை அறுத்துக் கொள்ளுகிறது போல.
  • பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
  • கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
  • கண்டால் காமாச்சி நாயகர் , காணவிட்டால் காமாட்டி நாயகர்.
  • கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.
  • கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
  • சாதுரியப்பூனை மீன் இருக்க, புளியங்காயத் திங்கிறதாம்.
  • ஊர் எல்லாம் வாழ்கிறது என்று வீடு எல்லாம் அழுது புரண்டாலும் வருமா ?
  • மாதா ஊட்டாத சோறு, மாங்காய் ஊட்டும்.

Tamil proverbs – தமிழ் பழமொழிகள்

  • ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளில் சிரித்தான் , திருநாளும் வேறு நாளாச்சுது .
  • பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
  • ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்
  • அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
  • பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.
  • தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
  • போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
  • எலி வளையானாலும் தனி வலை வேண்டும்.
  • சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
  • குதிரை குருடானாலும் , கொள்ளு தின்கிறதில் குறைய ?
  • குரு இலார்க்கு வித்தையுமில்லை, முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
  • ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
  • நெருப்பு என்றால் வாய் வெந்து போமா?
  • பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
  • முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
  • குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
  • எட்டினால் குடுமியைப் பிடிக்கிறது , எட்டாவிட்டால் காலைப் பிடிகிறது.
  • ஊருடன் ஒட்டி வாழ்.
  • முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
  • ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
  • நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
  • கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
  • தூர்ந்த கிணற்றைத் தூர்வார்காதே
  • கல மாவு இடித்தவள் பாவி, கப்பி இடித்தவள் புண்ணியவதியா?
  • சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
  • கண் கண்டது கை செய்யும்.
  • உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
  • திருவாக்குக்கு எதிர்வாக்குக்கு உண்டா?
  • பேசப் பேச மாசு அறும்.
  • அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
  • நல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம்.
  • அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
  • உயிர் காப்பான் தோழன்.
  • உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
  • தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும்.
  • கொடிக்கு காய் கனமா?
  • செல்லம் செரூக்குகிறதா ? வாசல் படி வழுக்கிறதா ?
  • ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று.
  • மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.

ஏராளமான தமிழ் பழமொழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இங்கு உள்ள தமிழ் பழமொழிகள் அனைத்திற்கும் பொருள் கொடுக்கப்பட்டுள்ளன. நிச்சயம் இந்த தமிழ் பழமொழிகள் அனைத்தும் பலருக்கும் உதவும் என நம்புகிறோம்.

English Overview: Here we have many good proverbs in Tamil. We can also call it as Tamil palamoligal or Tamil pazhamozhigal. These are very simple proverbs in Tamil. Many of this Tamil proverbs are in regular use.