1330 திருக்குறள் விளக்கத்துடன் | Thirukkural with meaning in Tamil

திருக்குறள் பொருளுடன்

தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மேல் கிளிக் செய்து அந்த அதிகாரத்திற்கான குறளை படிக்கலாம்.
- Advertisement -

திருக்குறள் அதிகாரம் | Thirukkural adhikaram with meaning in Tamil

அறத்துப்பால்

திருக்குறள் அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு

திருக்குறள் அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

திருக்குறள் அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்

திருக்குறள் அதிகாரம் 5 – இல்வாழ்க்கை

திருக்குறள் அதிகாரம் 6 – வாழ்க்கைத் துணைநலம்

திருக்குறள் அதிகாரம் 7 – மக்கட்பேறு

திருக்குறள் அதிகாரம் 8 – அன்புடைமை

திருக்குறள் அதிகாரம் 9 – விருந்தோம்பல்

திருக்குறள் அதிகாரம் 10 – இனியவை கூறல்

திருக்குறள் அதிகாரம் 11 – செய்ந்நன்றியறிதல்

திருக்குறள் அதிகாரம் 12 – நடுவு நிலைமை

திருக்குறள் அதிகாரம் 13 – அடக்கம் உடைமை

திருக்குறள் அதிகாரம் 14 – ஒழுக்கம் உடைமை

திருக்குறள் அதிகாரம் 15 – பிறனில் விழையாமை

திருக்குறள் அதிகாரம் 16 – பொறையுடைமை

திருக்குறள் அதிகாரம் 17 – அழுக்காறாமை

திருக்குறள் அதிகாரம் 18 – வெஃகாமை

திருக்குறள் அதிகாரம் 19 – புறங்கூறாமை

திருக்குறள் அதிகாரம் 20 – பயனில சொல்லாமை

திருக்குறள் அதிகாரம் 21 – தீவினையச்சம்

திருக்குறள் அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்

திருக்குறள் அதிகாரம் 23 – ஈ.கை

திருக்குறள் அதிகாரம் 24 – புகழ்

திருக்குறள் அதிகாரம் 25 – அருளுடைமை

திருக்குறள் அதிகாரம் 26 – புலால் மறுத்தல்

திருக்குறள் அதிகாரம் 27 – தவம்

திருக்குறள் அதிகாரம் 28 – கூடா ஒழுக்கம்

திருக்குறள் அதிகாரம் 29 – கள்ளாமை

திருக்குறள் அதிகாரம் 30 – வாய்மை

திருக்குறள் அதிகாரம் 31 – வெகுளாமை

திருக்குறள் அதிகாரம் 32 – இன்னா செய்யாமை

திருக்குறள் அதிகாரம் 33 – கொல்லாமை

திருக்குறள் அதிகாரம் 34 – நிலையாமை

திருக்குறள் அதிகாரம் 35 – துறவு

திருக்குறள் அதிகாரம் 36 – மெய்யுணர்தல்

திருக்குறள் அதிகாரம் 37 – அவா அறுத்தல்

திருக்குறள் அதிகாரம் 38 – ஊழ்

- Advertisement -

பொருட்பால்

திருக்குறள் அதிகாரம் 39 – இறைமாட்சி

திருக்குறள் அதிகாரம் 40 – கல்வி

திருக்குறள் அதிகாரம் 41 – கல்லாமை

திருக்குறள் அதிகாரம் 42 – கேள்வி

திருக்குறள் அதிகாரம் 43 – அறிவுடைமை

திருக்குறள் அதிகாரம் 44- குற்றங்கடிதல்

திருக்குறள் அதிகாரம் 45 – பெரியாரைத் துணைக்கோடல்

திருக்குறள் அதிகாரம் 46 – சிற்றினம் சேராமை

திருக்குறள் அதிகாரம் 47 – தெரிந்து செயல்வகை

திருக்குறள் அதிகாரம் 48 – வலியறிதல்

திருக்குறள் அதிகாரம் 49 – காலமறிதல்

திருக்குறள் அதிகாரம் 50 – இடனறிதல்

திருக்குறள் அதிகாரம் 51 – தெரிந்து தெளிதல்

திருக்குறள் அதிகாரம் 52 – தெரிந்து வினையாடல்

திருக்குறள் அதிகாரம் 53 – சுற்றந் தழால்

திருக்குறள் அதிகாரம் 54 – பொச்சாவாமை

திருக்குறள் அதிகாரம் 55 – செங்கோன்மை

திருக்குறள் அதிகாரம் 56 – கொடுங்கோன்மை

திருக்குறள் அதிகாரம் 57 – வெருவந்த செய்யாமை

திருக்குறள் அதிகாரம் 58 – கண்ணோட்டம்

திருக்குறள் அதிகாரம் 59 – ஒற்றாடல்

திருக்குறள் அதிகாரம் 60 – ஊக்கம் உடைமை

திருக்குறள் அதிகாரம் 61 – மடி இன்மை

திருக்குறள் அதிகாரம் 62 – ஆள்வினை உடைமை

திருக்குறள் அதிகாரம் 63 – இடுக்கண் அழியாமை

திருக்குறள் அதிகாரம் 64 – அமைச்சு

திருக்குறள் அதிகாரம் 65 – சொல்வன்மை

திருக்குறள் அதிகாரம் 66- வினைத் தூய்மை

திருக்குறள் அதிகாரம் 67 – வினைத்திட்பம்

திருக்குறள் அதிகாரம் 68 – வினை செயல்வகை

திருக்குறள் அதிகாரம் 69 – தூது

திருக்குறள் அதிகாரம் 70 – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

திருக்குறள் அதிகாரம் 71- குறிப்பறிதல்

திருக்குறள் அதிகாரம் 72 – அவை அறிதல்

திருக்குறள் அதிகாரம் 73 – அவை அஞ்சாமை

திருக்குறள் அதிகாரம் 74 – நாடு

திருக்குறள் அதிகாரம் 75 – அரண்்

திருக்குறள் அதிகாரம் 76- பொருள் செயல்வகை

திருக்குறள் அதிகாரம் 77 – படை மாட்சி

திருக்குறள் அதிகாரம் 78 – படைச் செருக்கு

திருக்குறள் அதிகாரம் 79 – நட்பு

திருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்

திருக்குறள் அதிகாரம் 81- பழைமை

திருக்குறள் அதிகாரம் 82 – தீ நட்பு

திருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு

திருக்குறள் அதிகாரம் 84 – பேதைமை

திருக்குறள் அதிகாரம் 85 – புல்லறிவாண்மை

திருக்குறள் அதிகாரம் 86- இகல்

திருக்குறள் அதிகாரம் 87 – பகை மாட்சி

திருக்குறள் அதிகாரம் 88 – பகைத்திறம் தெரிதல்

திருக்குறள் அதிகாரம் 89 – உட்பகை

திருக்குறள் அதிகாரம் 90 – பெரியாரைப் பிழையாமை

திருக்குறள் அதிகாரம் 91- பெண்வழிச் சேறல்

திருக்குறள் அதிகாரம் 92 – வரைவின் மகளிர்

திருக்குறள் அதிகாரம் 93 – கள்ளுண்ணாமை

திருக்குறள் அதிகாரம் 94 – சூது

திருக்குறள் அதிகாரம் 95 – மருந்து

திருக்குறள் அதிகாரம் 96- குடிமை

திருக்குறள் அதிகாரம் 97 – மானம்

திருக்குறள் அதிகாரம் 98 – பெருமை

திருக்குறள் அதிகாரம் 99 – சான்றாண்மை

திருக்குறள் அதிகாரம் 100 – பண்புடைமை

திருக்குறள் அதிகாரம் 101- நன்றியில் செல்வம்

திருக்குறள் அதிகாரம் 102 – நாணுடைமை

திருக்குறள் அதிகாரம் 103 – குடிசெயல் வகை

திருக்குறள் அதிகாரம் 104 – உழவு

திருக்குறள் அதிகாரம் 105 – நல்குரவு

திருக்குறள் அதிகாரம் 106- இரவு

திருக்குறள் அதிகாரம் 107 – இரவச்சம்

திருக்குறள் அதிகாரம் 108 – கயமை

- Advertisement -

காமத்துப்பால்

திருக்குறள் அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல்

திருக்குறள் அதிகாரம் 110 – குறிப்பறிதல்

திருக்குறள் அதிகாரம் 111- புணர்ச்சி மகிழ்தல்

திருக்குறள் அதிகாரம் 112 – நலம் புனைந்து உரைத்தல்

திருக்குறள் அதிகாரம் 113 – காதற் சிறப்புரைத்தல்

திருக்குறள் அதிகாரம் 114 – நாணுத் துறவுரைத்தல்

திருக்குறள் அதிகாரம் 115 – அலர் அறிவுறுத்தல்

திருக்குறள் அதிகாரம் 116- பிரிவு ஆற்றாமை

திருக்குறள் அதிகாரம் 117 – படர்மெலிந் திரங்கல்

திருக்குறள் அதிகாரம் 118 – கண் விதுப்பழிதல்

திருக்குறள் அதிகாரம் 119 – பசப்புறு பருவரல்

திருக்குறள் அதிகாரம் 120 – தனிப்படர் மிகுதி

திருக்குறள் அதிகாரம் 121- நினைந்தவர் புலம்பல்

திருக்குறள் அதிகாரம் 122 – கனவுநிலை உரைத்தல்

திருக்குறள் அதிகாரம் 123 – பொழுதுகண்டு இரங்கல்

திருக்குறள் அதிகாரம் 124 – உறுப்புநலன் அழிதல்

திருக்குறள் அதிகாரம் 125 – நெஞ்சொடு கிளத்தல்

திருக்குறள் அதிகாரம் 126- நிறையழிதல்

திருக்குறள் அதிகாரம் 127 – அவர்வயின் விதும்பல்

திருக்குறள் அதிகாரம் 128 – குறிப்பறிவுறுத்தல்

திருக்குறள் அதிகாரம் 129 – புணர்ச்சி விதும்பல்

திருக்குறள் அதிகாரம் 130 – நெஞ்சொடு புலத்தல்

திருக்குறள் அதிகாரம் 131- புலவி

திருக்குறள் அதிகாரம் 132 – புலவி நுணுக்கம்

திருக்குறள் அதிகாரம் 133 – ஊடலுவகை

தமிழ் மொழி இலக்கியங்களில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக விளங்குகிறது திருக்குறள். வாழ்வியல் நூலான திருக்குறளிற்கு பொய்யாமொழி, முப்பால், உலகப்பொதுமறை, தெய்வநூல் , வாயுறைவாழ்த்து, உத்தரவேதம் இப்படி பல பெயர்கள் உண்டு. கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த நூல் இயற்றப்பட்டிருக்க கூடும் என்று ஆவாளர்கள் கருதுகின்றனர். அத்தகைய காலகட்டத்திலேயே யுகங்களை கடந்த பல சிந்தனையியோடு இந்த நூலை இயற்றியுள்ளார் திருவள்ளுவர்.

Thiruvalluvar

திருக்குறள் ஆசிரியர் குறிப்பு

திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை பற்றிய முழுமையான விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் இவரை பற்றிய செய்திகள் செவி வழியாக பல நூற்றாண்டுகளை கடந்து இன்றும் நமது காதுகளில் ஒலிக்கின்றன. அதன் படி, இவர் சென்னையில் உள்ள மைலாப்பூர் பகுதியில் வாழ்ந்ததாகும், இவரின் மனைவி பெயர் வாசுகி என்றும் கூறப்படுகிறது. கற்பிற்கு ஒரு மிக சிறந்த இலக்கணமாக வாசுகி விளங்கினார் என்று கூறப்படுகிறது.

இன்று உலகமே திருக்குறளை போற்றி புகழ்ந்தாலும் அந்நூல் இயற்றப்பட்ட காலகட்டத்தில் அதை தமிழ் சங்கத்தில் அரங்கேற்றுவதற்காக திருவள்ளூர் மிகுந்த சிரமப்பட்டார் என்றும், தமிழ் மூதாட்டி ஒளவையாரின் துணையோடு திருக்குறள் தமிழ் சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது என்றும் செவி வழி செய்திகள் கூறுகின்றன. இந்த நூலின் ஆசிரியரான திருவள்ளுவருக்கு தெய்வப்புலவர், பொய்யில் புலவர், பெருநாவலர் என்று பல பெயர்கள் உள்ளன.

Thiruvalluvar

நூல் குறிப்பு

ஒரு மனிதனின் வாழ்விற்கு தேவையான அனைத்தையும் மூன்று பால்களாக பிரித்து அதை 1330 குறள்களாக இயற்றியுள்ளார் வள்ளுவ பெருந்தகை. திருக்குறளில் மொத்தம் மூன்று பால்கள் உள்ளன. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் அல்லது இன்பத்துப்பால். இப்படி மூன்று பால்களையும் ஒன்றிணைத்து அழகுற இயற்றப்பட்டதால் திருக்குறளிற்கு முப்பால் என்றொரு பெயர் உண்டு. இந்த முப்பாலும் மேலும் ‘இயல்’ என்று பகுக்கப்பட்டு ஒவ்வொரு இயலிற்கு கீழ் சில அதிகாரங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அதிகாரத்திற்கு கீழும் 10 குறள்கள் என்று தொகுக்கப்பட்டு, மொத்தம் 1330 குறள்களோடு இந்த நூல் உலகபுகழ்பெற்று விளங்குகிறது. இதில் உள்ள ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளை கொண்டுள்ளது. முதல் அடியில் நான்கும் சீரும் இரண்டாம் அடியில் மூன்று சீரும் என மொத்தம் ஏழு சீர்கள் உள்ளது.

அறத்துப்பால்

அறத்துப்பாலில் மொத்தம் 4 இயல்கள் உள்ளன. இதில் முதலாவது இயல் “பாயிரவியல்”. பாயிரவியலில் மொத்தம் 4 அதிகாரங்கள் உள்ளன. இதனை தொடர்ந்து இரண்டாவது இயலாக “இல்லறவியல்” உள்ளது. இல்லறவியலில் மொத்தம் 20 அதிகாரங்கள் உள்ளன. அதனை தொடர்ந்து “துறவறவியல்” உள்ளது. அதில் மொத்தம் 13 அதிகாரங்கள் உள்ளன. அதற்கடுத்து வருவது “ஊழியல்”. இதில் ஒரே ஒரு அதிகாரம் மட்டுமே உள்ளது. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் ஊழியல் மட்டுமே.

பாயிரவியல் – 4 அதிகாரங்கள்
இல்லறவியல் – 20 அதிகாரங்கள்
துறவறவியல் – 13 அதிகாரங்கள்
ஊழியல் – 1 அதிகாரம்
ஆக அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்களும் 380 பாடல்களும் உள்ளன.

Thiruvalluvar

பொருட்பால்

பொருட்பாலில் மொத்தம் மூன்று இயல்கள் உள்ளன. இதில் முதலில் வருவது “அரசு இயல்”. இதில் 25 அதிகாரங்கள் உள்ளன. அதற்கடுத்து வருவது “அமைச்சு இயல்”. இதில் 32 அதிகாரங்கள் உள்ளன. அதற்கடுத்து வருவது “ஒழிபு இயல்”. இதில்13 அதிகாரங்கள் உள்ளன. ஆக பொருட்பாலில் மொத்தம் மூன்று இயல்களும் 70 அதிகாரங்களும், 700 பாடல்களும் உள்ளன.

காமத்துப்பால்

முப்பலில் இறுதியாக வரும் காமத்துப்பால் அல்லது இன்பத்துப்பாலில் மொத்தம் இரண்டு இயல்கள் உள்ளன. ஒன்று களவியல் மற்றொன்று கற்பியல். இதில் களவியலில் 7 அதிகாரங்கள் உள்ளன. கற்பியலில் 18 அதிகாரங்கள் உள்ளன. ஆக காமத்துப்பாலில் மொத்தம் 25 அதிகாரங்களும் 250 பாடல்களும் உள்ளன.

மொத்தம் 9 இயல்கள், 133 அதிகாரங்கள், 1330 பாடல்கள் திருக்குறளில் உள்ளன.

Thiruvalluvar

திருவள்ளுவர் குறித்த சில ரகசியங்கள்

சிறுவயது முதல் நாம் திருவள்ளுவரின் வரலாற்றை பற்றி எவ்வளவோ படித்துள்ளோம். ஆனால் நாம் படித்ததில் பெரும்பாலானவை ஒரு சாரார் எழுதியே வரலாறே தவிர அது முழுமையான வரலாறு கிடையாது. உண்மை என்ன வென்றால் இன்றுவரை திருவள்ளுவர் யார் ? அவர் எக்காலத்தில் வாழ்ந்தார் ? அவரின் உண்மையான பெயர் என்ன ? அவர் எப்படி இருந்தார் ? இப்படி எந்த விதமான தகவலையும் யாரும் உறுதியாக கூறியது கிடையாது.

திருவள்ளுவர் மைலாப்பூரில் வாழ்ந்தார் என்று சில நூல்கள் கூறுகின்றன. வேறு சில நூல்களோ அவர் கன்யா குமரியில் வாழ்ந்தார் என்றும், இன்னும் வேறு சில நூல்களோ அவர் மதுரையில் வாழ்ந்தார் என்றும் கூறுகிறது. திருவள்ளுவர் எக்காலத்தில் வாழ்ந்தவர் என்று அனைவரும் கிழம்பி இருந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து ஆய்வு செய்து, திருவள்ளுவர் கீ மு 31 ஆம் ஆண்டு வாழ்ந்திருக்கலாம், அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு இவர் வாழ்ந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். அதேபோல நமது பழங்கால நூலிகளில் உள்ள சில குறிப்பின்படி பார்த்தால் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் வாழ்ந்திருக்க கூடும் என்று நம்பப்படுகிறது. ஆனால் எதுவும் உறுதியான தகவல் கிடையாது.

Thiruvalluvarதிருவள்ளுவர் எங்கு பிறந்தார் என்ற குழப்பம் நிலவிக்கொண்டிருக்க அது குறித்து வரலாற்று ஆசிரியர்கள் சில குறிப்புகளை கூறுகின்றனர். அதன் படி, இன்றைய கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள திருநயினார்குறிச்சி என்னும் ஊரில் தான் திருவள்ளுவர் பிறந்தார் என்றும் , அக்காலத்தில் அப்பகுதியில் மலை வாழ் மக்கள் வாழ்ந்தார்கள் என்றும் அவர்கள் காணி என்று அழைக்கப்பட்டார்கள் என்றும். அந்த பகுதியை ஆண்ட அரசனுக்கு பிறந்தவர் தான் திருவள்ளுவர் என்றும், தந்தைக்கு பிறகு திருவள்ளுவரே அரசாட்சி புரிந்ததாகும். அவர் ஆண்ட அந்த பகுதியின் பெயர் வள்ளுவ நாடு என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கூறுகின்றனர்.

திருவள்ளுவர் ஒரு புலவர் ஆயிற்றே அவர் எப்படி ஒரு அரசனாக இருக்க கூடும் என்ற கேள்விக்கும் அவர்கள் பதிலளிக்கின்றனர். அதன் படி, நமது நாட்டில் வாழ்ந்த எத்தனையோ அரசர்கள் புலவர்களாகவும் இருந்ததுண்டு, உதாரணத்திற்கு, சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள், திருவிசைப்பா எழுதிய கண்டராதித்ய சோழன் இப்படி பலரை கூறலாம். ஆகையால் வள்ளுவன் என்னும் மன்னன் திருவள்ளுவராக இருக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பது வரலாற்று ஆசிரியர்கள் சிலரின் கூற்றாக உள்ளது.

Thiruvalluvarஇதற்க்கு மேலும் வலு சேர்க்கு விதத்தில் அவர்கள் கூறும் ஆதாரம் என்ன வென்றால், வள்ளுவர் பிறந்ததாக கூறப்படும் திருநயினார்குறிச்சி என்ற ஊரின் பக்கத்தில் கூவைமலை என்று ஒரு மலை இருக்கிறது. அம்மலை பகுதியில் வசிக்கும் காணி என்னும் பழங்குடி மக்கள் இன்றளவும் திருவள்ளுவரை தெய்வமாக வணணுகுகின்றனர் என்றும், பருவ மழை பொய்த்துவிட்டால் கூவைமலை பகுதியில், வள்ளுவர் பெயரால் அமைந்துள்ள வள்ளுவன் கல்பொற்றை மலைக்கு சென்று அப்பகுதி மக்கள் படையலிட்டு வள்ளுவரை இன்றளவும் வணங்குவதாக கூறுகின்றனர். அதோடு திருவள்ளுவர் நிச்சயம் ஒரு அரசனாக இருந்திருக்க கூடும் இல்லையேல் அவரால் அரசாட்சி பற்றிய அதனை நுணுக்கங்களையும் திருக்குறளில் எழுதி இருக்க முடியாது என்றும் கூறுகின்றனர். அதோடு இதை வெறும் பேச்சோடு நிறுத்தி விடாமல் கடந்த 1995 ஆம் ஆண்டில், அரசு ஆவணங்களில் திருவள்ளுவர் குமரி மாவட்டத்தில் பிறந்ததாகப் பதிவு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளுவர் எங்கு வாழ்ந்தார் என்பது குறித்த சர்ச்சை ஒரு புறம் இருக்க, திருவள்ளுவர் என்ற பெயரே கூட அவருடைய சொந்த பெயர் கிடையாது என்று கூறப்படுகிறது. அக்காலத்தில் மக்கள் தங்களுடைய குலப்பெயரையும் தங்களின் பெயரோடு சேர்த்துக்கொள்வது வழக்கத்தில் இருந்தது. ஆகையால் திருவள்ளுவர் வள்ளுவ குலத்தை சேர்த்திருக்கலாம் என்றும் அதனாலேயே அவருக்கு திருவள்ளுவர் என்ற பெயர் வந்திருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

Thiruvalluvarநாம் அனைவரும் பொதுவாக படித்த வரலாறு படி, திருவள்ளுவருக்கு ஒரு மனைவி உண்டு அவர் பெயர் வாசுகி. அவர், கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்து வந்தவர் என்று குறிப்புகள் பல கூறுகின்றன. ஆனால் திருவள்ளுவருக்கு உண்மையில் திருமணமானதா ? அவருடைய மனைவியின் பெயர் வாசுகி தானா போன்ற எந்த ஒரு கேள்விக்கு நம்மிடம் எந்த ஒரு வரலாற்று சான்றும் இல்லை என்பதே உண்மை. அதே போல திருக்குறள் என்ற நூலுக்கு உண்மையான பெயர் என்ன என்பதும் கூட இதுவரை யாராலும் உறுதியாக கூற முடியவில்லை.

பல அற்புதங்கள் நிறைந்த இந்த நூலை, பல மதங்கள் சொந்த கொண்டாடுகிறது. ஆனாலும் வியப்பு என்னவென்றால், 1330 குரல்களில் எந்த ஒரு குரலிலும் எந்த ஒரு மதத்தை பற்றியும் திருவள்ளுவர் குறிப்பிடவில்லை. அதற்க்கு அடுத்த படியாக அவர் எந்த ஒரு இறைவனை பற்றியும் எந்த ஒரு குரலிலும் கூறவில்லை. அதனால் தான் இன்று அந்த நூல் உலக மக்கள் அனைவருக்கும் சமமானதாக கூறப்படுகிறது.

Thiruvalluvarஇன்று உலகமே திருக்குறளை போற்றி புகழ்ந்தாலும் அந்நூல் இயற்றப்பட்ட காலகட்டத்தில் அதை தமிழ் சங்கத்தில் அரங்கேற்றுவதற்காக திருவள்ளூர் மிகுந்த சிரமப்பட்டார் என்றும், தமிழ் மூதாட்டி ஒளவையாரின் துணையோடு திருக்குறள் தமிழ் சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது என்றும் செவி வழி செய்திகள் கூறுகின்றன. ஆனால் இதுவும் ஒரு சான்றில்லா கதை தான்.

2500 வருடங்களுக்கு முன்பு இரண்டே வரிகளில் ஏழே சொற்களில் உலகையே அளந்த ஒரு நூல் வெளிவந்தது என்று சொன்னால் அது திருக்குறளாக மட்டும் தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த நூல் ஒரு சாதாரண மனிதன் முதல் மிகப்பெரிய மன்னம் வரை யார் எப்படி வாழ வேண்டும் என்பதை தெளிவாக கூறியுள்ளது. இந்த நூலை மக்கள் தெளிவாக படித்தால், ஒரு மன்னம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்கள் நன்கு அறிந்துகொள்வார்கள். அப்படி அறிந்தால் அது மன்னனுக்கே பிரச்னையை விளைவிக்கும் என்பதனால் இந்த நூலை பெரும்பாலான மன்னர்கள் போற்றி புகழாமல் இருந்தனர் என்றொரு கூற்று உண்டு.

கடந்த 1812 ஆம் ஆண்டு தான் இந்த நூல் முதன் முதலில் அச்சிடப்பட்டுள்ளது. அதன் பிறகே இதன் புகழ் உலகெங்கும் பரவி, இன்று 80 மொழிகளுக்கு மேல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டும், 40 பேர் இதை மொழிபெயர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருவள்ளுவரை எத்தனை மதங்கள் சொந்தம் கொண்டாடினாலும், அவர் ஒரு தமிழர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி பட்ட ஒரு அதிசய தமிழனின் சில குறிப்புகளை உங்களிடம் பகிர்ந்துகொண்டதில் நாங்கள் பெருமை படுகிறோம்.

திருக்குறள் சிறப்புகள்

  • தமிழ் மொழியில் இந்த நூல் இயற்றப்பட்டிருந்தாலும் இதில் தமிழ் என்ற சொல் எந்த குரலிலும் இடம் பெறவில்லை. அதே போல கடவுள் என்ற சொல்லும் இடம்பெறவில்லை.
  • திருக்குறளில் மொத்தம் 14,000 சொற்கள் உள்ளன.
  • திருக்குறளில் மொத்தம் 42,194 எழுத்துக்கள் உள்ளன.
  • முதன்முதலில் திருக்குறள் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
  • திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
  • நெருஞ்சிப்பழம் என்ற பழவகை மட்டுமே திருக்குறளில் இடம்பெற்றுள்ளது.
  • பனை, மூங்கில் ஆகிய மரங்கள் மட்டுமே திருக்குறளில் இடம்பெற்றுள்ளது.
  • ஒரு குறளில் “பற்று” என்ற சொல் ஆறு முறை இடம்பெற்றுள்ளது. இதுவே ஒரே குளிரில் அதிகப்படியாக வரும் சொல் ஆகும்.
  • குறிப்பறிதல் என்ற அதிகாரம் மட்டுமே திருக்குறளில் இருமுறை வருகிறது.

English overview:
Here we have Thirukkural in Tamil. Thirukkural adhikaram are totally 133. Here we have kural for all the athikaram in Tamil. One can get Thirukkural with meaning and Thirukkural status in Tamil here.