கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் | Kantha Sasti kavasam lyrics in Tamil

kandha sasti kavasam lyrics in Tamil
- Advertisement -

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் மட்டும் | kandha sasti kavasam lyrics Tamil

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் :
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை
அமரரிடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி

Murugan

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக், கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும் மயில் வாகனனார்

- Advertisement -

கையில்வேலால் எனைக் காக்க வென்று வந்து
வரவர, வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

- Advertisement -

சரவண பவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிறநிறென

வசர ஹணபவ வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை யாளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசங் குசமும்
பரந்தவிழிகள் பன்னிரண் டிலங்க

- Advertisement -

விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரை யுங்கிலியும்
கிலியும்சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற்றென் முன் நித்தமும் ஒளிரும்

சண்முகன்நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலியாஞ்சிவ குகன் தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி யாறும்
நீறிடுநெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீராவும்
இருதொடையழகும் இணை முழந்தாளும்

திருவடியதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகு டிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்(து) உதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோத னென்(று)

உன்திருவடியை உறுதியென் றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்தின வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேல் இருதோள் வளம் பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதினாறும் பருவேல் காக்க

Lord Murugan

வெற்றிவேல், வயிற்றை விளங்குவேல் காக்க
சிற்றிடைய அழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க

முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின் கை இரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓடிட
ஆனை அடியினில் அரும் பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்
பாவைகளுடனே பல கலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்

காசும் பணமும் காவுடன் சோறும்
ஓது மஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட

murugan

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடனங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறியக்

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடிவேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலதுவாக
விடுவிடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந்தோட

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்பும் சுளுக்கும் ஒரு தலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம்

சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பரு அரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாதோட நீயெனக் கருள்வாய்
ஈரேழுலகமும் எனக்குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாள் அரசரும் மகிழ்ந்துறவாகவும்

உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொழி பவனே
அரிதிரு மருகா அமராவதியைக்

காத்துத், தேவர்கள் கடுஞ்சிறைவிடுத்தாய்
கந்தா குகனே கதிர் வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இனிய வேல் முருகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்னா விருக்க யானுனைப்பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை

நேசமுடன்யான் நெற்றியில் அணியப்
பாசவினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரட்சி அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக வேலா யுதனார்

சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்

வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன் கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரியம் அளித்து
மைந்தன் என் மீதுன் மனமகிழ்ந்தருளித்
தஞ்சமென்றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
நேசமுடன், ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறு உருக்கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய
அஷ்டதிக்குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்னர் எண்மர் சேர்ந்தங்கருளுவர்

மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்
நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்
கந்தர் கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிபொடியாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி

அறிந்தென துள்ளம் அஷ்டலெக்சுமிகளில்
வீரலட்சுமிக்கு விருந்துணவாகச்
சூரபத்மாவைத் துணித்த கையதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமுதளித்த
குருபரன் பழனிக் குன்றினில் இருக்கும்

சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத்தாட்கொள் என்றனதுள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி

திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பாயுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக் கோரரசே

மயில் நடமிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்

இதையும் அறியலாமே:
கந்தசஷ்டி கவசம் கூறுவதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல்

kantha sasti kavasam lyrics in Tamil

Thuthipporku Valvinaipom Thunbampom
Nenjil Pathipporku Selvam Palithuk Kathithongum
Nishtaiyum Kaikoodum
Nimalar Arul Kanthar Sashti Kavacham Thanai

Amarar Idar Theera Amaram Purintha
Kumaranadi Nenjeh Kuri

Sashtiyai Nokka Saravana Bavanaar
Sishtarukku Uthavum Sengkathir Velon
Paatham Irandil Panmani Sathangai
Geetham Paada Kinkini Yaada
Maiya Nadam Seiyum Mayil Vahananaar

murugan

Kaiyil Velaal Yenaik Kaakka Vendru Vanthu
Varavara Velah Yuthanaar Varuha
Varuha Varuha Mayilon Varuha
Inthiran Mudhalaa Yendisai Potra
Manthira Vadivel Varuha Varuha

Vaasavan Maruhaa Varuha Varuha
Nesak Kuramahal Ninaivon Varuha
Aarumuham Padaitha Aiyaa Varuha
Neeridum Velavan Nitham Varuha
Sirahiri Velavan Seekkiram Varuha

kantha sasti kavasam lyrics
kantha sasti kavasam lyrics

Saravana Bavanaar Saduthiyil Varuha
Rahana Bavasa Ra Ra Ra Ra Ra Ra Ra
Rihana Bavasa Ri Ri Ri Ri Ri Ri Ri
Vinabava Sarahana Veeraa Namo Nama
Nibava Sarahana Nira Nira Nirena

Vasara Hanabava Varuha Varuha
Asurar Kudi Kedutha Aiyaa Varuha
Yennai Yaalum Ilaiyon Kaiyil
Pannirendu Aayutham Paasaan Gusamum
Parantha Vizhihal Pannirandu Ilanga

murugan manthiram

Virainthu Yenaik Kaakka Velon Varuha
Aiyum Kiliyum Adaivudan Sauvum
Uyyoli Sauvum Uyiraiyum Kiliyum
Kiliyum Sauvum Kilaroli Yaiyum
Nilai Petrenmun Nithamum Olirum

Shanmuhan Neeyum Thaniyoli Yovvum
Kundaliyaam Siva Guhan Thinam Varuha
Aaru Muhamum Animudi Aarum
Neeridu Netriyum Neenda Puruvamum
Panniru Kannum Pavalach Chevvaayum

kantha sasti kavasam lyrics
Kandha sasti kavasam lyrics in Tamil

Nanneri Netriyil Navamanich Chuttiyum
Eeraaru Seviyil Ilahu Kundalamum
Aariru Thinpuyathu Azhahiya Maarbil
Palboo Shanamum Pathakkamum Tharithu
Nanmanipoonda Navarathna Maalaiyum

Muppuri Noolum Muthani Maarbum
Sepppazhahudaiya Thiruvayir Unthiyum
Thuvanda Marungil Sudaroli Pattum
Navarathnam Pathitha Nartchee Raavum
Iruthodai Azhahum Inai Muzhanthaalum

Lord Murugan

Thiruvadi Yathanil Silamboli Muzhanga
Seha Gana Seha Gana Seha Gana Segana
Moga Moga Moga Moga Moga Moga Mogana
Naha Naha Naha Naha Naha Naha Nahena
Digu Kuna Digu Digu Digu Kuna Diguna

Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra
Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri
Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du
Dagu Dagu Digu Digu Dangu Dingugu
Vinthu Vinthu Mayilon Vinthu

kantha sasti kavasam lyrics
kantha sasti kavasam lyrics

Munthu Munthu Muruhavel Munthu
Yenthanai Yaalum Yehraha Selva
Mainthan Vehndum Varamahizhnth Thuthavum
Laalaa Laalaa Laalaa Vehshamum
Leelaa Leelaa Leelaa Vinothanendru

Unthiru Vadiyai Uruthi Yendrennum
Yen Thalai Vaithun Yinaiyadi Kaaka
Yennuyirk Uyiraam Iraivan Kaaka
Panniru Vizhiyaal Baalanaik Kaaka
Adiyen Vathanam Azhahuvel Kaaka

Lord Murugan Vel

Podipunai Netriyaip Punithavel Kaaka
Kathirvel Irandu Kanninaik Kaaka
Vithisevi Irandum Velavar Kaaka
Naasihal Irandum Nalvel Kaaka
Pesiya Vaaythanai Peruvel Kaaka

Muppathirupal Munaivel Kaaka
Seppiya Naavai Sevvel Kaaka
Kannam Irandum Kathirvel Kaaka
Yennilang Kazhuthai Iniyavel Kaaka
Maarbai Irathna Vadivel Kaaka

kantha sasti kavasam lyrics
Kandha sasti kavasam lyrics in Tamil

Serila Mulaimaar Thiruvel Kaaka
Vadivel Iruthol Valamberak Kaaka
Pidarihal Irandum Peruvel Kaaka
Azhahudan Muthuhai Arulvel Kaaka
Pazhu Pathinaarum Paruvel Kaaka

Vetrivel Vayitrai Vilangave Kaaka
Sitridai Azhahura Sevvel Kaaka
Naanaam Kayitrai Nalvel Kaaka
Aan Penn Kurihalai Ayilvel Kaaka
Pittam Irandum Peruvel Kaaka

Lord Murugan

Vattak Kuthathai Valvel Kaaka
Panai Thodai Irandum Paruvel Kaaka
Kanaikaal Muzhanthaal Kathirvel Kaaka
Aiviral Adiyinai Arulvel Kaaka
Kaihal Irandum Karunaivel Kaaka

Munkai Irandum Muranvel Kaaka
Pinkai Irandum Pinnaval Irukka
Naavil Sarasvathi Natrunai Yaaha
Naabik Kamalam Nalvel Kakka
Muppaal Naadiyai Munaivel Kaaka

kantha sasti kavasam lyrics
Kandha sasti kavasam lyrics in Tamil

Yeppozhuthum Yenai Yethirvel Kaaka
Adiyen Vasanam Asaivula Neram
Kaduhave Vanthu Kanahavel Kaaka
Varum Pahal Thannil Vachravel Kaaka
Arai Irul Thannil Anaiyavel Kaaka

Yemathil Saamathil Yethirvel Kaaka
Thaamatham Neeki Chathurvel Kaaka
Kaaka Kaaka Kanahavel Kaaka
Noaka Noaka Nodiyil Noaka
Thaakka Thaakka Thadaiyara Thaakka

kantha sasti kavasam lyrics
kandha sasti kavasam lyrics in Tamil

Paarka Paarka Paavam Podipada
Billi Soonyam Perumpahai Ahala
Valla Bootham Valaashtihap Peihal
Allal Paduthum Adangaa Muniyum
Pillaihal Thinnum Puzhakadai Muniyum

Kollivaayp Peihalum Kuralaip Peihalum
Penkalai Thodarum Bramaraa Chatharum
Adiyanaik Kandaal Alari Kalangida
Irisi Kaatteri Ithunba Senaiyum
Yellilum Iruttilum Yethirpadum Mannarum

Kana Pusai Kollum Kaaliyodu Anaivarum
Vittaan Gaararum Migu Pala Peihalum
Thandiyak Kaararum Sandaalar Halum
Yen Peyar Sollavum Idi Vizhunthodida
Aanai Adiyinil Arum Paavaihalum

Poonai Mayirum Pillaihal Enpum
Nahamum Mayirum Neenmudi Mandaiyum
Paavaihal Udane Pala Kalasathudan
Manaiyil Puthaitha Vanjanai Thanaiyum
Ottiya Paavaiyum Ottiya Serukkum

Kaasum Panamum Kaavudan Sorum
Othu Manjanamum Oruvazhi Pokum
Adiyanaik Kandaal Alainthu Kulainthida
Maatran Vanjahar Vanthu Vanangida
Kaala Thoothaal Yenai Kandaal Kalangida

Anji Nadungida Arandu Purandida
Vaay Vittalari Mathi Kettoda
Padiyinil Mutta Paasak Kayitraal
Kattudan Angam Katharida Kattu
Katti Uruttu Kaal Kai Muriya

Kattu Kattu Katharida Kattu
Muttu Muttu Muzhihal Pithungida
Sekku Sekku Sethil Sethilaaha
Sokku Sokku Soorpahai Sokku
Kuthu Kuthu Koorvadi Velaal

Patru Patru Pahalavan Thanaleri
Thanaleri Thanaleri Thanalathuvaaha
Viduvidu Velai Verundathu Oda
Puliyum Nariyum Punnari Naayum
Yeliyum Karadiyum Inithodarnthu Oda

Thelum Paambum Seyyaan Pooraan
Kadivida Vishangal
Kadithuyar Angam
Yeriya Vishangal Yelithudan Iranga
Polippum Sulukkum Oruthalai Noyum
Vaatham Sayithiyam Valippu Pitham

Soolai Sayam Kunmam Sokku Sirangu
Kudaichal Silanthi Kudalvip Purithi
Pakka Pilavai Padarthodai Vaazhai
Kaduvan Paduvan Kaithaal Silanthi
Parkuthu Aranai Paru Arai Yaakkum

murugan

Yellap Piniyum Yendranaik Kandaal
Nillaa Thoda Nee Yenak Arulvaay
Eerezhula Hamum Yenak Uravaaha
Aanum Pennum Anaivarum Yenakkaa
Mannaal Arasarum Mahizhnthura Vaahavum

Unnai Thuthikka Un Thirunaamam
Saravana Bavane Sailoli Bavanee
Thirupura Bavane Thigazholi Bavane
Paripura Bavane Pavamozhi Bavane
Arithiru Maruhaa Amaraa Pathiyai

Kaathu Thevarkal Kadum Sirai Viduthaay
Kanthaa Guhane Kathir Velavane
Kaarthihai Mainthaa Kadambaa Kadambanai
Idumbanai Yazhitha Iniyavel Muruhaa
Thanihaa Salane Sangaran Puthalvaa

Kathirkaa Mathurai Kathirvel Muruhaa
Pazhani Pathivaazh Baala Kumaaraa
Aavinan Kudivaazh Azhahiya Vela
Senthil Maamalai Yurum Sengalva Raayaa
Samaraa Purivaazh Shanmuha Tharase

Kaarar Kuzhalaal Kalaimahal Nandraay
Yennaa Irukka Yaan Unai Paada
Yenai Thodarnthu Irukkum Yenthai Muruhanai
Padinen Aadinen Paravasa Maaha
Aadinen Naadinen Aavinan Poothiyey

Nesamudan Yaan Netriyil Aniya
Paasa Vinaihal Patrathu Neengi
Unpatham Perave Unnarulaaha
Anbudan Rakshi Annamum Sonnamum
Metha Methaaha Velaayu Thanaar

Sithi Petradiyen Sirappudan Vazhga
Vaazhga Vaazhga Mayilon Vaazhga
Vaazhga Vaazhga Vadivel Vaazhga
Vaazhga Vaazhga Malai Guru Vaazhga
Vaazhga Vaazhga Malai Kura Mahaludan

Vaazhga Vaazhga Vaarana Thuvasam
Vaazhga Vaazhga Yen Varumaihal Neenga
Yethanai Kuraihal Yethanai Pizhaihal
Yethanai Adiyen Ye thanai Seiyinum
Petravan Neeguru Poruppathu Unkadan

Petraval Kuramahal Petravalaame
Pillai Yendranbaay Piriya Malithu
Mainthan Yenmeethu Unmanam Mahizhntharuli
Thanjam Yendradiyaar Thazhaithida Arulsey
Kanthar Sashti Kavasam Virumbiya

Baalan Theva Raayan Paharn Thathai
Kaalaiyil Maalaiyil Karuthudan Naalum
Aasaa Rathudan Angam Thulakki
Nesamudan Oru Ninaivathu Vaahi
Kanthar Sashti Kavasam Ithanai

Sindhai Kalangaathu Thiyaani Pavarhal
Orunaal Muppathaa Ruru Kondu
Othiyeh Jebithu Uhanthu Neeraniya
Ashta Thikkullor Adangalum Vasamaay
Thisai Mannar Yenmar Seyalathu (Sernthangu) Arulvar

Maatrala Rellaam Vanthu Vananguvar
Navakol Mahizhnthu Nanmai Alithidum
Navamatha Nenavum Nallezhil Peruvar
Enthanaalum Eerettaay Vaazhvar
Kantharkai Velaam Kavasa Thadiyai

Vazhiyaay Kaana Meiyaay Vilangum
Vizhiyaal Kaana Verundidum Peigal
Pollathavarai Podi Podi Yaakkum
Nallor Ninaivil Nadanam Puriyum
Sarva Sathuru Sankaa Rathadi

Arintha Yenathullaam Ashta Letchmihalil
Veera Letchmikku Virun Thunavaaha
Soora Bathmaavaith Thunithagai Yathanaal
Iruba Thezhvarkku Uvan Thamuthalitha
Gurubaran Pazhani Kundrinil Irukkum

Chinna Kuzhanthai Sevadi Potri
Yenai Thadu Thaatkola Yendrana Thullum
Meviya Vadivurum Velava Potri
Thevargal Senaa Pathiye Potri
Kuramahal Manamahizh Kove Potri

Thiramihu Thivya Thehaa Potri
Idumbaa Yuthane Idumbaa Potri
Kadambaa Potri Kanthaa Potri
Vetchi Punaiyum Veleh Potri
Uyargiri Kanaha Sabaikor Arase

Mayilnada Miduvoy Malaradi Saranam
Saranam Saranam Saravanabava Om
Saranam Saranam Shanmuhaa Saranam
Saranam Saranam Shanmuhaa Saranam

Murugan god

Kandha sasti kavasam lyrics in Tamil: கந்த சஷ்டி கவசம் என்பது முருகப்பெருமானை போற்றி பாடும் கவசம் ஆகும். தேவார சுவாமிகள் இதை நமக்கு அருளினார். கந்த சஷ்டி கவசம் முதன் முதலில் திருச்செந்தூரில் குடிகொண்டிருக்கும் முருகப் பெருமான் மீது பாடப்பட்டது என்று கூறப்படுகிறது. கந்த சஷ்டி கவசம் அதை முருகப்பெருமான் படத்தின் முன்பு நின்றோ அல்லது முருக பெருமான் கோவில்களிலோ அல்லது அறுகோண சக்கரத்தின் முன்போ பாடலாம்.

கந்த சஷ்டி கவசம் பலன் | Kanda sasti kavasam benefits in Tamil

முருக பெருமானுக்கு உகந்த நாட்களான செவ்வாய் கிழமைகளிலும் சஷ்டி மற்றும் முருகனுக்கு உகந்த இதர நாட்களிலும் இந்த கவசத்தை பாடினால் அதிக பலன்களை பெறலாம். சஷ்டியில் விரதமிருந்து முருகப்பெருமானை வணங்கி கந்த சஷ்டி கவசம் அதை பாராயணம் செய்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

அறிவியல் ரீதியாக பார்க்கையில் கந்த சஷ்டி கவசம் மனிதர்களின் உடலிற்கு ஒரு மிக சிறந்த கவசமாக விளங்குகிறது. இதற்க்கு நாம் கந்த சஷ்டி கவசம் அதில் வரும் வரிகளை உற்று நோக்கினால் புரியும். உதாரணத்திற்கு மார்பை இரத்தின வடிவேல் காக்க என்ற வரியை எடுத்துக்கொள்வோம். இந்த வரையை நாம் உச்சரிக்கையில் நமது மனமானதும் மூளையும் மார்பை உற்று நோக்கும். இதன் காரணமாக நமது மார்பில் ஏதாவது கோளாறு தென்பட்டால் நமது மூளையானது உடனே அந்த கோளாறை சரி செய்ய முயற்சிக்கும். இப்படி கந்த சஷ்டி கவசம் அதில் நமது உடலில் உள்ள பல பாகங்களின் பெயரை கூறி அதை முருகப்பெருமான் காக்க வேண்டும் என்று கூறுகிறோம். அப்படி கூறுகையில் நமது உடலில் பல பாகங்கள் நம்மை அறியாமலே சரி செய்யப்படுகிறது. ஒருவர் தொடர்ந்து ஒருமண்டலம் தினமும் இரண்டு முறை கந்த சஷ்டி கவசம் அதை கூறி வந்தால் உடலில் உள்ள பல பிரச்சனைகள் நீங்கும். மேலே கந்த சஷ்டி கவசம் வரிகள், கந்த சஷ்டி கவசம் பாடல் மற்றும் கந்த சஷ்டி கவசம் வீடியோ வடிவில் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதை பயன்படுத்தி கந்த சஷ்டி கவசம் அதை கூறி முருக பெருமானின் அருளை பெறலாம்.

உலகில் தோன்றி இன்று வரை தங்களின் பண்பாடு மற்றும் வாழ்வியலில் பெரிய அளவில் பிற கலாச்சாரங்களின் தாக்கமில்லாமல் இன்று வரை உயிர்ப்புடன் இருப்பது தமிழர்களின் வாழ்வியல் மற்றும் பண்பாடு ஆகும். அப்படிப்பட்ட தமிழர்களின் இறைத்தன்மை கொண்ட மொழியான “தமிழ்” மொழியில் இறைவனைப் போற்றி வணங்கும் சிறந்த பாடல்கள் பல உள்ளன. அதிலும் தமிழர்களின் “காக்கும் கடவுளான” “கந்தனாகிய” “முருகப்பெருமானுக்கு” பல பாடல்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. அப்படி முருகப்பெருமானின் மீது இயற்றப்பட்டு அனைவராலும் பரவலாக அறியப்பட்ட பாடல் தான் “கந்த சஷ்டி கவசம்”

கந்த சஷ்டி கவசம் வரலாறு – Kandha sashti kavasam varalaru

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த “தேவார சுவாமிகளால்” எல்லாம் வல்ல அந்த முருகப் பெருமான் மீது இயற்றப்பட்டது தான் இந்த “கந்த சஷ்டி கவசம்”. இந்த கந்த சஷ்டி கவசப் பாடல் உண்மையிலே ஒரு மிகச் சிறந்த படைப்பாகும். ஏனெனில் சிறந்த முருகப் பெருமான் பக்தராகிய அருணகிரி நாதர் அந்த முருகனின் புகழைக் கூறும் தெய்வீகமான “திருப்புகழ்” என்ற பாடல்கள் கொண்ட தொகுப்பை இயற்றிய பிறகு அவரைப்போலவே ஒரு தெய்வீகத்தன்மை கொண்ட இந்த கந்த சஷ்டி கவசத்தை இயற்றியுள்ளார் தேவார சுவாமிகள். இந்த கந்த சஷ்டி கவசம் பாடல் முதன் முதலில் “திருச்செந்தூரின்” கடற்கரையில் அரக்கர்களை வதம், புரிந்து அங்கே “செந்திலாண்டவராக” ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் முருகப்பெருமானின் சந்நிதியில் முதன் முதலாக பாடப்பட்டு, அரங்கேற்ற பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கந்த சஷ்டி கவசம் தெய்வாம்சம் கொண்ட தமிழ் மொழியை கற்பதற்கு ஒரு சிறந்த வழியாகும். ஏனெனில் இந்த சஷ்டி கவசம் பாடல் முழுவதும் நாம் அன்றாடம் பேசுவதற்கு பயன்படும் பெரும்பாலான தமிழ் மொழியின் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில் சில “செந்தமிழ்” எனப்படும் தூய தமிழ் வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. கந்த சஷ்டி கவசம் அதை நாம் தொடர்ந்து சத்தமாக படித்து வரும் போது, நாம் பேசும்போது நமக்கு எளிதில் உச்சரிக்க வராத தமிழ் வார்த்தைகளை நாம் நன்கு உச்சரிக்க கற்றுக்கொள்ளலாம். மேலும் தமிழ் மொழியின் “இலக்கணம், எதுகை- மோனை, நடை, சந்தம்” போன்றவற்றை கற்றுக்கொள்வதற்கு ஒரு சிறந்த வழி இந்த கந்த சஷ்டி கவசம் பாடல் அதை படிப்பதாகும்.

கந்த சஷ்டி கவசம் மந்திரம் – Kandha sasti kavasam manthiram

கந்த சஷ்டி கவசம் சிறந்த ஒரு மந்திர அதிர்வுகளைக் கொண்ட பாடலாக இருக்கிறது. தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் கடவுளாகிய முருகப் பெருமானை முதன்மைக் கடவுளாகக் கொண்டு, சில சித்தர்கள் அம்முருகப்பெருமானுக்கு கோவில்களையும் அம்முருகனைப் போற்றி சில பாடல்களையும் அப்பாடல்களில் வடமொழியான சமஸ்கிருதத்திற்கு நிகரான “தெய்வீக மற்றும் நேர்மறையான” அதிர்வுகளைக் கொண்ட பல தமிழ் எழுத்துக்களை அவர்களின் பாடல் வரிகளில் பயன்படுத்தியிருப்பர். அந்த சித்தர்களின் மரபை பின்பற்றிய இந்த புலவரும் மந்திர அதிர்வுகளைக் கொண்ட பல தமிழ் எழுத்துக்களை இப்பாடலில் பயன்படுத்தியுள்ளார். காந்தி சஷ்டி கவசம் பாடலை தொடர்ந்து காலை மாலை வேளைகளில் பாடி வர நமக்கு நமது உடலில் அனைத்து பகுதிகளிலும் இப்பாடலின் மந்திர அதிர்வுகள் ஊடுருவி சென்று நமது உடலிலும் மனத்திலும் ஒரு நேர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்தும்.மேலும் நவ கோள்களின் தீய பலன்கள் நமக்கு ஏற்படாமல் காக்கும். கண்ணுக்குத் தெரியாத துஷ்ட சக்திகள், பிறரின் பொறாமை, வஞ்ஜக எண்ணங்கள், பிறர் நமக்கு செய்த பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகளிலிருந்து நம்மை காக்கும்.

கந்த சஷ்டி கவசம் அறிவியல்

கந்த சஷ்டி கவசம் அறிவியல் பூர்வமாக இயற்றப்பட்ட ஒரு பாடலாக கூடக் கூறலாம். ஏனெனில் இப்பாடலில் சில இடங்களில் தமிழ் மொழியின் சில எழுத்துக்கள் மட்டும் இரட்டைப்படை மற்றும் ஒற்றைப்படை எண்களின் வரிசையில் அமைந்துள்ளது. எனவே இந்த கந்த சஷ்டி கவசப் பாடலை 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை பாடச் செய்வதின் மூலம் அவர்களின் மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். அக்குழந்தைகளிடம் புதியவற்றை உருவாக்கும் படைப்பாற்றல் உண்டாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும் திக்கு வாய் மற்றும் பேச்சாற்றலில் குறைபாடுகள் கொண்ட குழந்தைகளை இந்த கந்த சஷ்டி கவசம் பாடலை அவ்வப்போது வாய்விட்டு படிக்க ஊக்குவிப்பதின் மூலம், அவர்களின் அத்தகைய குறைபாடுகள் நீங்குவதை நாம் காண முடியும்.

கந்த சஷ்டி கவசம் பாடலை மாதந்தோறும் வரும் வளர்பிறை சஷ்டி தினத்தன்று பாடுவதால் அந்த முருகப்பெருமானின் அருளால் நம் வாழ்வில் நமக்கு ஏற்பட்டிருக்கும் அனைத்து துன்பங்களும். நீங்கும். மேலும் முருகனுக்குரிய செவ்வாய்க்கிழமைகளில், காலையில் வீட்டிலோ அல்லது முருகனின் சந்நிதியிலோ பாராயணம் செய்வது மிகுந்த நன்மைகளைத் தரும். மேலும் “கார்த்திகை” மாதத்தில் வரும் “கந்த சஷ்டி விரத” காலத்தில் காலையில் குளித்து, முடித்து விட்டு வீட்டின் பூஜையறையில் அமர்ந்து முருகனின் படத்திற்கு பூக்கள் சூட்டி, தீபமேற்றி முருகனை மனதார தியானித்து, கந்த சஷ்டி கவசம் பாடலை பாடி வர, அவர்கள் வாழ்வில் விரும்பிய அனைத்தையும் நிறைவேற்றித் தருவார் அந்த கந்தனாகிய முருகப் பெருமான்.

English Overview:
Here we have Kandha Sasti Kavasam lyrics in Tamil. Kantha Sasti Kavasam is one of the powerful mantras of Lord Murugan. In Tamil, it is called as Kantha Sasti Kavasam Murugan padal or kandha sasti kavasam padal varigal. If one chant Kandha Sasti Kavasam on daily basis he will get good power, knowledge, health and so many other good things. This skanda sashti kavasam lyrics in tamil will be usefull to all.

- Advertisement -