வெறும் 16 கொட்டைப் பாக்குகள் வீட்டில் இருந்தால் மட்டும் போதும். 16 வகையான மகாலட்சுமியின் அருளையும் சுலபமாக பெற்று விடலாம். வீட்டில் பல தலைமுறைகளுக்கு பண கஷ்டம் வராது.

kottai-pakku
- Advertisement -

ஒரு மனிதனுக்கு 16 வகையான செல்வங்களும் வாழ்க்கையில் நிறைவாக கிடைத்துவிட்டால் போதும். அவனுடைய வாழ்க்கை பரிபூரணமாக நிறைவடைந்து விடும். 16 வகையான செல்வங்களைக் தான், 16 வகையான லட்சுமி என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த 16 வகையான செல்வங்களையும் பெறுவதற்கு லட்சுமி கடாட்சம் ஆசிர்வாதமும் அவசியம் தேவை. ஒட்டுமொத்தமாக இந்த 16 வகையான லட்சுமிகளின் ஆசியும் பெறுவதற்கு கொட்டை பாக்கு வைத்து சுலபமான முறையில் ஒரு பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. உங்க வீட்டிலும் 16 கொட்டைப் பாக்குகளை இப்படி வைத்துப் பாருங்கள். நிச்சயமாக அள்ள அள்ள குறையாத 16 வகையான செல்வங்கள் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் வற்றாமல் ஊற்றெடுக்கும்.

selvangal

உடையாத 16 கொட்டைப்பாக்குகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு தாம்பாளத் தட்டின் மேல் மஞ்சள் துணியை விரித்து கொள்ளுங்கள். அந்த மஞ்சள் துணியில் முதல் வரிசையில் நான்கு கொட்டைப்பாக்கு, இரண்டாம் வரிசையில் நான்கு, மூன்றாம் வரிசையில் நான்கு, நான்காம் வரிசையில் நான்கு பாக்குகள் வைத்தால் 16 கொட்டைப் பாக்குகள் கணக்கில் வந்துவிடும். பாக்கை கவிழ்த்து வைக்கக்கூடாது. நிமிர்த்தி வைக்க வேண்டும். பாக்கின் குழி பகுதி மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும். அந்த பாகக்குக்கு நடுவே மஞ்சள் குங்கும பொட்டை வைக்க வேண்டும்.

- Advertisement -

தயார் செய்த இந்த கொட்டைப் பாக்கு தட்டை அப்படியே பூஜை அறையில் மகாலட்சுமியின் முன்பு வைத்துவிடவேண்டும். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, மனதார மகாலட்சுமியிடம் பதினாறு செல்வங்களும் கிடைக்க பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மனமுருகி வீட்டில் இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று இந்த பூஜையை செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்தால் மாலை வரை கொட்டை பாக்கு தட்டு மகாலட்சுமியின் பாதங்களிலேயே இருக்கட்டும். மாலை கொட்டைப் பாக்கை அப்படியே எடுத்து சிறிய முடிச்சாக கட்டி பீரோவில் வைத்து விடுங்கள்.

kottai-pakku

மறு வாரம் வெள்ளிக்கிழமை வரும்போது பீரோவிலிருந்து கொட்டைப்பாக்கு முடித்து வெளியே எடுத்து, முடிச்சை அவிழ்க்க வேண்டும். உள்ளே இருக்கக்கூடிய பாக்குகளை எடுத்து சுத்தமான வெள்ளைத் துணியில் துடைத்து விட்டு, மீண்டும் மஞ்சள் துணியில் அடுக்கி, அதில் மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து, பூஜை அறையில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை பூஜை செய்தது போலவே, இந்த வெள்ளிக்கிழமையும் பூஜை செய்து மீண்டும் இந்த முடிச்சை எடுத்து பீரோவில் வைக்க வேண்டும். (16 வாரம் பூஜை செய்யும் போதும் கொட்டைப்பாக்குகளை மாற்ற வேண்டாம். பழைய கொட்டைப்பாக்குகளை பயன்படுத்தினால் போதும். மஞ்சள் துணியையும் அப்படியே மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.)

- Advertisement -

இப்படியாக 16 வாரம் வெள்ளிக்கிழமைகள் உங்களுடைய பூஜையை செய்ய வேண்டும். 16 வது வாரம் பூஜை நிறைவடைந்த பின்பு இந்த பாக்கை உங்களுடைய வீட்டிற்கு உள் பக்கத்திலேயே செடிகளுக்கு அடியில் மண்ணில் புதைத்து விடலாம். உங்கள் வீட்டில் செடிகள் இல்லை என்றால் சாதாரண மண் பாங்கான இடத்திலும் புதைத்து வைத்து கொள்ளலாம். தொட்டியில் செடி இருந்தாலும் அந்த மண்ணில் இந்த பாக்கை புதைத்து விடுங்கள்.

manjal-mudichu

இந்த பூஜையை சோடச பூஜை என்று சொல்லுவார்கள். 16 வகையான செல்வங்களையும் பெறுவதற்கு 16 பாக்குகளையும், லட்சுமிகளாக பாவித்து நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் அனைத்தும் நீங்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியம் கிட்டும். நோய்நொடி இல்லாத வாழ்க்கையைப் பெறலாம். சந்தோஷம் நிறைந்திருக்கும். உங்களுக்கு இந்த பதிவின் மீது நம்பிக்கை இருந்தால், உங்களுடைய வீட்டில் 16 வாரங்கள் இந்த பூஜையை தொடர்ந்து செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல மாற்றங்களை உணர்வீர்கள்.

- Advertisement -