2 மடங்கு முடி வளர்ச்சியை வேகமாக தூண்ட இந்த 2 பொருள் போதும். இரண்டு கைகளுக்கும் அடங்காத அளவுக்கு முடி அடர்த்தியாகும்.

hair12
- Advertisement -

முடி வளர்ச்சியை அதிகரிக்க கூடிய மிக மிக எளிமையான குறிப்புகளை தான் இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று குறிப்புகளுமே, இரண்டு பொருட்களை வைத்து சொல்லப்பட்டுள்ள சுலபமான குறிப்புகள் தான். இதில் உங்களுக்கு எது சுலபமாக இருக்கிறதோ அந்த குறிப்பை பின்பற்றி பலனடையலாம். அதாவது முடி வளர்ச்சியை தூண்ட மூன்று குறிப்புகளுமே மூன்று மடங்கு விரைவாக வேலை செய்யும். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதிக செலவில்லாத குறிப்பு, அதே சமயம் கை மேல் பலனை கொடுக்கக்கூடிய குறிப்புகள். இதோ உங்களுக்காக.

ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கும் ஸ்கேல்பை ஆரோக்கியமாக மாற்ற:
தலையில் ஊட்டச்சத்து இல்லை. முடி மெல்லிசாக தான் வளரும். அப்படியே புதிய முடி வளர்ந்தாலும் கூடிய சீக்கிரத்தில் அது உதிர்ந்துவிடும் என்பவர்கள் இந்த குறிப்பை பின்பற்றுங்கள். முடி வளர்ச்சிக்கு உகந்த எண்ணெய் என்றால் அது விளக்கெண்ணெய் தான். சில பேருக்கு இந்த விளக்கெண்ணெயை அப்படியே தலையில் வைத்தால் ஜலதோஷம் பிடிக்கும்.

- Advertisement -

1/2 கப் விளக்கெண்ணெய், 1/2 கப் தேங்காய் எண்ணெயை ஒன்றாக சேர்த்து கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, இந்த எண்ணெயை தலையில் வைத்து விட்டு அதன் பின்பு தலைக்கு குளித்தால் உங்களுடைய ஸ்கேல்ப் போஷாக்கோடு இருக்கும். வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயம் இந்த எண்ணெயை தலையில் வைத்து குளிக்க வேண்டும்.

தலையில் ஆங்காங்கே தெரியும் சொட்டையை சரி செய்ய:
இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் 2 பிரியாணி இலை, 2 வெங்காயத்திற்கு மேலே இருக்கும் சிவப்புத்தோல், ஒரு பாத்திரத்தில் ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி இந்த இரண்டு பொருட்களையும் போட்டு நன்றாக 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் நிறம் மாறி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, இந்த தண்ணீரை நன்றாக ஆரவிட்டு வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் 7 நாட்கள் கெட்டுப்போகாது. தினமும் இந்த ஸ்பிரேவை தலையில் அடித்துக் கொள்ளலாம். இந்த ஸ்ப்ரேவை அடித்த பின்பு தலையை அலச வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. சீக்கிரம் சொட்டை விழுந்த இடத்தில் முடி வளரும்.

- Advertisement -

தலை ரொம்பவும் டிரை ஆக இருக்கிறது என்பவர்களுக்கு இந்த குறிப்பு:
தலைமுடி ரொம்பவும் டிரை ஆக இருக்கும் பட்சத்தில் நீங்கள் தலையில் தொடர்ந்து எண்ணெய் வைக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் இல்லாமல் முடியை விடவே கூடாது. எண்ணெய் தலையிலேயே இந்த குறிப்பை பின்பற்றுங்கள். அரிசி வடித்த கஞ்சி 1/2 கப், தேங்காய் பால் 1/2 கப், இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக கலந்து உங்களுடைய தலையில் ஸ்பிரே செய்ய வேண்டும். நன்றாக ஸ்பிரே செய்துவிட்டு 1/2 மணி நேரம் கழித்து பின்பு தலைக்கு குளித்தால் உங்களுடைய முடி ரொம்பவும் டிரை ஆகாமல் இருக்கும் வாரத்தில் இரண்டு நாட்கள் இப்படி செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: காலத்திற்கும் உங்கள் முடி கருப்பாகவே இருக்க, இந்த கரும்பச்சை எண்ணெயை தலையில் தடவி வந்தாலே போதும்.

மேலே சொன்ன குறிப்புகளில் ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு குறிப்பை பின்பற்றினாலும் தவறு கிடையாது. உங்களுடைய முடி வளமாக வளரும். தேங்காய் பால் பிரியாணி இலை, வெங்காயத்தோல் விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் இவை அனைத்தும் எல்லோருக்கும் செட்டாக கூடிய பொருட்கள் தான். பக்க விளைவுகள் வருவதற்கும் வாய்ப்பு கிடையாது. ஏனென்றால் எல்லாமே இயற்கையான பொருட்கள். தொடர்ந்து இந்த குறிப்புகளை பின்பற்றி வரும்போது உங்களுக்கே தலைமுடி வளர்வதில் நல்ல வித்தியாசம் தெரியும். பிடித்திருந்தா குறிப்பை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -