இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான இஞ்சி சட்னி மற்றும் கத்தரிக்காய் சட்னி

inji-thuvayal
- Advertisement -

இஞ்சி சட்னி ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற சட்னி வகை. இஞ்சி மருத்துவ குணங்கள் நிறைந்தது இஞ்சி சட்னி அஜீரண கோளாறு, உடல் வலி, போன்றவற்றிற்கு ஏற்றதாகும். இஞ்சி சட்னி இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சுவையாக இருக்கும்.  அதேபோல் இந்த கத்திரிக்காய் சட்னியும் அனணத்து விதமான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். வாருங்கள் இந்த இரண்டு சட்னிகளையும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவு மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
நறுக்கிய இஞ்சி – 1/2 கப், கடலை பருப்பு – 2 ஸ்பூன், வரமிளகாய் – 5, கறிவேப்பிலை – சில இலைகள், புளி – சிறிய கோலி குண்டு அளவு, பொடித்த வெல்லம் – 1/2 ஸ்பூன், சமையல் எண்ணெய் – 2 ஸ்பூன், உப்பு – 3/4 ஸ்பூன், கடுகு – 1/2.ஸ்பூன்,

- Advertisement -

செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும் பின்னர் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் கடலை பருப்பு வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். ஊற வைத்த புளியை சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய இஞ்சி கடலைப்பருப்பு வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து அதனுடன் புளிக் கரைசலையும் சேர்த்து மறைத்து வைத்துக் கொள்ளவும். சிறிய பாத்திரத்தில் கடுகு கருவேப்பிலை தாளித்து அதனை சட்னியுடன் சேர்க்கவும். சுவையான இஞ்சி சட்னி தயாராகிவிடும்.

- Advertisement -

கத்தரிக்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – 6, உருளைக்கிழங்கு – 1, சமையல் எண்ணெய் – 2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – சிறிதளவு, பச்சை மிளகாய் – 3, சின்ன வெங்காயம் – 15, பூண்டு பற்கள் – 20, கதக்காளி – 1, உப்பு – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்,  கொத்தமல்லி தழை – சிறிதளவு.

செய்முறை:
ஒரு பிரஷர் குக்கரில் 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.எண்ணெய்  சூடானதும் ½  தேக்கரண்டி கடுகு, ½  தேக்கரண்டி சீரகம்,  சிறிதளவு கறிவேப்பிலை, 3  பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.அதனுடன் 15  சின்ன வெங்காயம், 20  பல் பூண்டு ஆகியவற்றை சேர்த்து மென்மையாக வதக்கவும். அதனுடன் 1  தக்காளியை நறுக்கி சேர்த்து கொள்ளவும்,  தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.பின்னர் ½ தேக்கரண்டி மஞ்சள்தூள், 1  தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

மிளகாய் தூள் பச்சை வாசனை போக வதக்கி பின்னர், 1   உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.6 கத்தரிக்காய்களை நீளவாக்கில் நறுக்கி சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் சேர்த்துக் கொள்ளவும்ஓரளவு வதங்கிய பின்னர்,  தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரை மூடி 2 விசில் வேக வைக்கவும். பிரஷர் ரிலீஸ் ஆனதும்,  குக்கரை திறந்து கரண்டி அல்லது மத்து வைத்து மசித்து விடவும்கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கவும்.

- Advertisement -