எல்லோர் வீட்டிலும் இருக்கக்கூடிய இந்த 3 இலைகள் வீட்டில் இருந்தால் தலைக்கு தேய்ச்சு பாருங்க, ஒரு முடி கூட இனி உதிரவே உதிராது!

vallarai-thulasi-hair-pack
- Advertisement -

எல்லோருடைய வீட்டிலும் சர்வ சாதாரணமாக கிடைக்கக் கூடிய இந்த மூன்று இலைகளில் ஏராளமான நன்மைகள் ஒளிந்து கொண்டுள்ளன. இவை தலைமுடியின் வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருக்கக்கூடிய மூலிகை இலைகள் ஆகும். அவை என்னென்ன? அவற்றை எப்படி பயன்படுத்தி தலைமுடியை உதிராமல் தடுப்பது? என்பதை தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தலைமுடி வேகமாக வளர்வதற்கு முதலில் இந்த 4 விஷயங்களை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். தலை முடி அதிகமாக உதிர்பவர்கள் எப்பொழுதும் சுடு தண்ணீரில் குளிக்க கூடாது. சாதாரண பச்சை தண்ணீரில் தான் தலைக்கு அலச வேண்டும். வாரம் ஒரு முறை அல்லாமல் வாரம் இரு முறையாக தலைக்கு குளிக்க வேண்டும்.

- Advertisement -

தினமும் ஆயில் மசாஜ் செய்ய வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் ஆயில் பூசணிக்காய் விதை ஆயில் அல்லது ஆளி விதை ஆயில், தேங்காய் எண்ணெய் போன்றவையும் இருக்கலாம். இதில் ஆளி விதையில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெயை தினமும் அடுப்பில் மிதமான சூட்டில் காய வைத்து, பின்னர் தலைக்கு மசாஜ் செய்து வர வேண்டும். ஆளி விதை எண்ணெயில் மசாஜ் செய்த பின்பு, சுடு தண்ணீரில் நனைத்த டவல் ஒன்றை நன்கு பிழிந்து தலையில் கட்டிக் கொள்ளலாம். இதனால் தலைக்கு நல்ல ஒரு கதகதப்பு கிடைத்து ரத்த ஓட்டம் சீராகும். இதனால் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்க துவங்கும்.

தினமும் எட்டு டம்ளர் குடி தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் உடம்பில் இருந்தால் தான் மண்டை ஓட்டில் இருக்கக் கூடிய வறட்சி நீங்கும். இதனால் மண்டை ஓட்டில் இருந்து வேரோடு உதிரும் தலை முடியை உதிராமல் தடுக்க முடியும். நல்ல சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு வெளியே மட்டுமல்லாமல், உடலுக்கு உள்ளேயும் ஆரோக்கியம் இருந்தால் தான் தலைமுடி சீராக வளரும்.

- Advertisement -

சரி, இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். வீட்டில் கிடைக்கக் கூடிய மூலிகை இலைகளில் ஒன்று துளசி, இன்னொன்று வேப்பிலை, மூன்றாவதாக இருப்பது வல்லாரை. துளசி, வேப்பிலை எல்லாம் எல்லோருடைய வீட்டிலும் இருக்கக் கூடியது தான். வல்லாரையும் சாதாரணமாக கிடைக்கக் கூடிய ஒரு மூலிகை பொருள் தான். இந்த மூன்று பொருட்களையும் சம அளவில் எடுத்து அரைத்து தலைக்கு பேக் போல போட்டுக் கொள்ள வேண்டும். பின் சாதாரண தண்ணீரில் தலை முடியை அலசிக் கொள்ளுங்கள்.

ஷாம்பூ போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக வீட்டில் அரைத்த சீயக்காயை பயன்படுத்துவது நல்லது. இப்படி பயன்படுத்த முடியாமல் ஷாம்பூ பயன்படுத்துபவர்கள் அதில் நிறைய தண்ணீரை கலந்து அந்த தண்ணீரை தான் தலைக்கு தடவி பயன்படுத்த வேண்டும். ஷாம்பூவை நேரடியாக பயன்படுத்தக் கூடாது. இது போல வாரம் இரண்டு முறை நீங்கள் தாராளமாக செய்து வந்தால் விரைவாகவே உங்களுடைய தலைமுடி உதிர்வது நின்று மீண்டும் இழந்த முடியை திரும்ப பெறலாம். நீங்களும் இதே மாதிரி முயற்சி செய்து பாருங்கள், பலன் நிச்சயம் இருக்கும்.

- Advertisement -