இந்த தீபத்தை உங்கள் வீட்டில் தினமும் ஏற்றி வைத்தால், வீட்டிற்குள் கெட்ட சக்தி தங்காது. வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி, தீபத்திலிருந்து வரும் வாசத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடிவிடும்.

vilakku-deepam
- Advertisement -

நம்முடைய வீட்டில் இருக்கும் தரித்திரத்தையும், வறுமையையும், எதிர்மறை ஆற்றலையும், விரட்டி அடிப்பதற்காக ஆன்மீக ரீதியாக நாம் என்ன செய்யலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரு மண் அகல் விளக்கில் இந்த முறைப்படி உங்களுடைய வீட்டில் தீபம் ஏற்றி வைத்தால், வீட்டில் இருக்கக்கூடிய கெட்ட சக்திகள் வெளியேற்றப்படும். வீட்டிற்குள் மகாலட்சுமி நுழைவதற்கு எந்த தடையும் இருக்காது. அந்த தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றக் கூடிய எண்ணெயில் குறிப்பாக எந்தெந்த பொருட்களை சேர்க்க வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

nei-deepam

பொதுவாகவே அந்த காலங்களில் வீட்டில் குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஒருமுறை ஹோமங்கள் நடத்தப்படும். அந்த ஹோமங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுத்தது. ஆனால் காலப்போக்கில் பூஜை புனஸ்காரங்கள் ஹோமங்கள் எல்லாம் மறைந்து, தினம் தோறும் வீட்டில் விளக்கு ஏற்றும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது. சில வீடுகளில். ஆனால், நிறைய வீடுகளில் இன்றளவும் முறைப்படி சாஸ்திர சம்பிரதாயத்தின்படி ஆன்மீக ரீதியாக சில விஷயங்களை பின்பற்றித்தான் வருகிறார்கள். அவர்களை ஒன்றும் குறை கூறவில்லை.

- Advertisement -

நம்முடைய வீட்டிலும் நம்மால் ஹோமம் நடத்தக் கூடிய அளவிற்கு வசதி இல்லை. என்ன செய்வது. ஒரு மண் அகல்விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். நல்லெண்ணெயோடு சிறிதளவு நெய், 2 சிட்டிகை மஞ்சள் பொடி, தேன் 1 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து கலந்துவிட்டு, மஞ்சள் நிறத்தில் விளக்கு திரியை தடிமனாக போட்டுவிட்டு தீபத்தை எரியவிட வேண்டும்.

honey 3

இந்த தீபத்தை உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே ஏற்றி வைக்கலாம். இதில் இருந்து வெளிவரக்கூடிய வாசம் உங்கள் வீடு முழுவதும் பரவும். அந்த வாசத்தில் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நிச்சயமாக வெளியே விரட்டி அடிக்கப்படும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த தீபத்தை ஏற்றலாம். முடிந்தால் தினந்தோறும் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றுவதன் மூலம் எந்த ஒரு தவறும் கிடையாது.

- Advertisement -

நேர்மறை ஆற்றலை தரக்கூடிய தேன், நெய், மஞ்சள் தூள் இந்த மூன்று பொருட்களும் அக்னி பகவானுடன் சேரும்போது யாகம் நடத்திய பலனை நம் வீட்டிற்கு கொடுக்கின்றது. நிறைய பேரது வீட்டில் எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத சண்டைகள் பிரச்சனைகளின் மூலம் வீட்டில் இருக்கும் சந்தோஷம் நிலைகுலைந்து போகும். அந்த சமயத்தில் யாருடைய கண் திருஷ்டியோ நம் மேல் விழுந்தது போல, நம்மாலேயே உணர முடியும்.

vilakku2

சில பேரது வீட்டில் காசு பணம் கையில் நன்றாக புரளும். வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் நல்ல வேலைவாய்ப்புகளை செய்து நல்ல பணத்தை சம்பாதித்து கொண்டிருப்பார்கள். ஆனால் எதிர்பாராத சூழ்நிலையில் அவர்கள் வேலையை இழந்து, பணம் காசு சம்பாதிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு, அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு பண கஷ்டம் வந்து விடும்.

agal vilakku

இப்படி திடீர் திடீரென்று காரணமே தெரியாமல் வீட்டில் கஷ்டம் வருவதற்கு காரணம் ஏதோ ஒரு கெட்ட சக்தி தான். தினம்தோறும் இந்த தீபத்தை ஏற்ற முடியாதவர்கள், எதிர்பாராத சமயத்தில் உங்களுடைய வீட்டில் பூகம்பங்கள் வெடிக்கும் போது, அந்த சமயத்தில் மட்டுமாவது, உடனடியாக உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விளக்க, இந்த ஒரு தீபத்தை ஏற்றிவைத்து பரிகாரம் போல் செய்து கொண்டாலும், அது உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -