ஒல்லியாக இருக்கும் உங்கள் முடி 30 நாளில் அடர்த்தியாக வளர, இந்த ஹேர் ஆயில் ஒன்று போதுமே

hair
- Advertisement -

காய்கறி கடைகளில் காசு கொடுக்காமல் ஃபிரீயாக கொடுக்கும் இந்த கருவேப்பிலை ஒன்று போதும் அதிகப்படியான முடி வளர்ச்சிக்கு. இந்த கறிவேப்பிலையை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக உணவில் சேர்த்துக் கொள்வது முடி வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிகிறது. கருவேப்பிலையின் மருத்துவ குணங்களும் அதிகமாக இருக்கின்றன. அதே போல் ஒரு கொத்து கறிவேப்பிலையை தினமும் காலை, வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முடியின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும். ஆனால் இன்றைய தலைமுறையினர் இவற்றைத் தொடர்ந்து செய்வது என்பது சற்றும் முடியாத காரியமாகும். அவர்கள் இவற்றை விரும்பி சாப்பிட மாட்டார்கள், அதிலும் தொடர்ந்து செய்ய மாட்டார்கள். எனவே இந்த கருவேப்பிலை வைத்து ஒரு ஹேர் ஆயில் எப்படி செய்வது? என்பதையும் அதனை எவ்வாறு பயன்படுத்தி வந்தால் முடியின் வளர்ச்சி அதிகமாகும் என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் – 500 கிராம், வெந்தயம் – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கப்.

- Advertisement -

ஹேர் ஆயில் செய்முறை:
முதலில் ஒரு இரும்பு கடாயை அடுப்பின் மீது வைத்து சூடுபடுத்த வேண்டும். பிறகு அதில் 500 கிராம் தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும். ஒரு ஸ்பூன் வெந்தயத்தை மிக்ஸியில் சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொண்டு, தேங்காய் எண்ணெய் நன்றாக சூடானதும் அந்த எண்ணெயில் சேர்த்து பொறிக்க வேண்டும்.

பிறகு அதே மிக்சி ஜாரில் ஒரு கப் கறிவேப்பிலையுடன், சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய் லேசாக சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு, இந்த கருவேப்பிலை விழுதையும் சேர்த்து காய்ச்ச வேண்டும். கறிவேப்பிலை விழுது சேர்த்த உடனே எண்ணெய் மேலே பொறிய ஆரம்பிக்கும்.

- Advertisement -

பிறகு சிறிது நேரத்தில் பொங்கி வந்த நுரை அப்படியே அடங்கி விடும். அதன் பின்னர் அடுப்பை அனைத்துவிட வேண்டும். பிறகு இந்த எண்ணெயை ஒரு நாள் முழுவதும் அப்படியே கடாயில் விட்டு விட்டு, மறுநாள் வடிகட்டி ஒரு டப்பாவில் வடிகட்டி வைத்துக் கொள்ளலாம். இந்த எண்ணெய் 6 மாதங்கள் ஆனாலும் கெட்டுப்போகாது.

ஹேர் ஆயில் பயன்படுத்தும் முறை:
இந்த ஹேர் ஆயிலை தினமும் தலைக்கு எண்ணெய் வைத்து, தேய்த்து பயன்படுத்தி வரலாம். அப்படி இல்லை என்றால் வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை எண்ணெய் தடவி, 20 நிமிடத்திற்கு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு அரை மணி நேரம் தலையில் அப்படியே ஊற வைத்து, அதன் பின்னர் மைல்டான ஷாம்பு தேய்த்து குளிக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒரு முறையைத் தொடர்ந்து பின்பற்றி வர எண்ணி 30 நாட்களில் முடியின் வளர்ச்சி அதிகரிப்பதை உணர முடியும்.

- Advertisement -