மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக கொண்ட 4 ராசிகள். இவர்களுக்கு பணமானது அவரவர் ராசிக்கு ஏற்ற ஒரு வழியில் வந்து கொண்டே இருக்கும்.

mahalakshmi
- Advertisement -

நமது சாஸ்திரங்களில் செல்வம் என்றாலே அது திருமாலின் பத்தினியாகிய லட்சுமி தேவியை தான் குறிக்கின்றது. நம் வாழ்வில் செல்வ வளம் உண்டாக அருள் புரியும் லட்சுமி தாயாரின் கடைக்கண் பார்வையிலேயே எப்போதும் இருக்க அனைவரும் ஆசைப்படைத்தான் செய்வார்கள். ஆனாலும் அந்த லட்சுமி தாயாரின் பிரியத்திற்குரியர்களாக மட்டுமே இருக்கின்றனர். ஜோதிட சாஸ்திர அடிப்படையில் லட்சுமி தேவிக்கு மிகவும் விருப்பமான ராசியினர் யார் என்பதை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
நவக்கிரகங்களில் சுக்கிர பகவான் மட்டுமே மனிதர்களுக்கு லட்சுமி தேவியின் அருட்கடாட்சத்தை முழுமையாக வழங்கக்கூடிய கிரகமாக திகழ்கிறார். ரிஷப ராசி என்பது சுக்கிர பகவானின் சொந்த ராசியாக திகழ்கிறது. எனவே இந்த ரிஷப ராசியில் பிறந்தவர்கள் லட்சுமி தாயாரின் முழுமையான அருளை பெற்ற ராசியினராக இருக்கின்றனர். ரிஷப ராசியினர் தாங்கள் பிறந்தது முதலே எப்பொழுதும் செல்வத்திற்கு பஞ்சம் இல்லாத வாழ்க்கையை வா ழும் அதிர்ஷ்டம் பெற்றவர்களாக திகழ்கின்றனர்.

- Advertisement -

கடகம்
கடக ராசி என்பது நவகிரகங்களில் சந்திர பகவானுக்குரிய ராசியாகும். வேத புராணங்களில் சந்திர பகவான் மகாலட்சுமி தேவியின் சகோதரர் என குறிப்பிடப்படுகிறார். எனவே இந்த ராசியில் பிறந்தவர்கள் செல்வ மகளான லட்சுமி தேவிக்கு மிகவும் விருப்பமானவர்களாக திகழ்கிறார்கள். மனோகாரகனாகிய சந்திர பகவானின் இந்த கடக ராசியில் பிறந்தவர்கள் தங்களின் உள்ளுணர்வாலும், வித்தியாசமான சிந்திக்கும் திறன் மற்றும் செயல்பாடுகளால் தொழில், வியாபாரத்தில் நல்ல நிலையை அடைகிறார்கள்.

சிம்மம்
இந்த உலகத்திற்கே ஒளி தரக்கூடிய நட்சத்திரமாக சூரிய பகவான் திகழ்கிறார். வைணவ சம்பிரதாயத்தில் சூரிய பகவானை திருமாலின் அம்சமாக பாவித்து சூரிய நாராயணராக வழிபடும் வழக்கம் உள்ளது. எனவே திருமாலின் சரிபாதியான லட்சுமி தேவியின் முழுமையான அருள் இந்த சிம்ம ராசியினருக்கு கிடைக்கின்றது. சிம்ம ராசியினர் தங்களின் கடின உழைப்பாலும், நேர்மையான அணுகுமுறையாலும் லட்சுமி தேவியின் கடாட்சம் கிடைக்கப் பெற்று, பொருளாதார ரீதியில் சிறப்பான முன்னேற்றங்களை பெறுகின்றனர்.

விருச்சிகம்
செவ்வாய் பகவானுக்குரிய வீடான விருச்சக ராசி, அலை மகளான லட்சுமி தாயாரின் முழுமையான அருளாசிகளை பெறுகின்ற ஒரு ராசியாக இருக்கின்றது. உடல் வலிமையும், மனவலிமையும் ஒருங்கே பெற்ற இந்த விருச்சக ராசியினரிடம் லட்சுமி தாயார் தானாக வந்து அருள் பாலிக்கின்றார். இந்த ராசியினர் தங்களின் ஆரம்ப கால வாழ்க்கையில் பல சிரமங்களை சந்தித்தாலும், மத்திம வயது காலங்களில் லட்சுமி கடாட்சம் கிடைக்கப் பெற்று, வாழ்வில் நல்ல நிலையை அடைகிறார்கள்.

- Advertisement -