5 ரூபாய் காசு இவ்வளவு வேலை செய்யுமா? ஐந்து ரூபாயும்! அதிர்ஷ்ட பரிகாரங்களும்!

5-rupee-coin-perumal
- Advertisement -

அஞ்சு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்? என்று யோசிப்பவர்களுக்கு மத்தியில் இந்த ஐந்து ரூபாய் நாணயம் இவ்வளவு வேலை செய்யுமா? என ஆச்சரியப்பட வைக்கிறது ஆன்மீக பரிகாரங்கள். ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்து செய்யப்படும் இந்த பரிகாரங்களுக்கு அற்புதமான சக்திகளும் உண்டு. ஒரு ரூபாய்க்கு இருக்கும் மதிப்பை போலவே ஐந்து ரூபாய்க்கும் மதிப்பு அதிகம். ஒரு ரூபாய் நாணயத்தில், மகாலட்சுமியும் ஐந்து ரூபாய் நாணயத்தில் நாராயணனும் வசிப்பதாக ஐதீகம் உண்டு. அந்த வகையில் இந்த ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்து நாம் என்னவெல்லாம் பரிகாரங்கள் செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

5-rupee-coin

ஐந்து ரூபாய் நாணயத்தை கல் உப்பு இருக்கும் ஜாடியில் சேகரித்து வந்தால் அள்ள அள்ள குறையாமல் செல்வம் சேரும் என்பது ஐதீகம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் உங்கள் கல்லுப்பு நிறைந்திருக்கும் ஜாடியில் 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு கொண்டே வர வேண்டும். 9 வாரங்கள் இது போல் சேமித்த பிறகு அந்த ஒன்பது 5 ரூபாய் நாணயங்களையும் எடுத்துக் கொண்டு போய் கோவில் உண்டியலில் செலுத்தி விட வேண்டும். மீண்டும் இதே போல் ஜாடியில் சேகரித்து வந்தால் செல்வமும் சேரும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

ஐந்து ரூபாய் நாணயத்தை அடியில் வைத்து காமாட்சி அம்மன் தீபம் ஏற்ற நம் வேண்டுதல்கள் யாவும் உடனே பலிக்கும் என்பது நம்பிக்கை. ஐந்து ரூபாய் நாணயத்தில் வசிக்கும் நாராயணர் அருள் பெற காமாட்சி அம்மன் விளக்கில் ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டு தீபம் ஏற்றலாம். பின்னர் அந்த நாணயங்களை சேகரித்து ஏழை எளியவருக்கு தானங்கள் செய்யலாம். இதனால் உங்கள் பாவங்கள் நீங்கி புண்ணியம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

Kadugu

இதே போல 5 ரூபாய் நாணயத்தை கடுகு டப்பாவில் போட்டு வைத்தால் கட்டுக்கட்டாக பணம் சேருமாம். கடுகு போட்டு வைத்திருக்கும் டப்பாவில் வெள்ளிக் கிழமையில் ஐந்து ரூபாய் நாணயத்தை சேகரித்து வாருங்கள். 9 வாரங்கள் கழிந்த பிறகு இந்த நாணயங்களை எடுத்து ஏழை குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் வாங்கிக் கொடுங்கள். இவ்வாறு செய்து வர நம் கர்ம வினைகள் குறைந்து பணம் சம்பாதிப்பதில் இருக்கும் தடைகளும் விலகும்.

- Advertisement -

திடீரென ஏதாவது ஒரு மன கஷ்டம் வந்துவிட்டால் இறைவனை தேடித்தான் ஓடுவீர்கள். அதுவரை இறைவன் இருப்பதே ஏனோ பாவம் நம் கண்களுக்கு தெரிவதில்லை. யாராலும் நம்மை காப்பாற்ற முடியாத நிலைமையில் இறைவனை தேடி ஓடும் சமயத்தில் ஒரு மஞ்சள் துணியை விரித்து அதில் 9 ஐந்து ரூபாய் நாணயங்களை வையுங்கள். உங்கள் பிரச்சனைகளை மனமுருக வேண்டிக் கொண்டு அந்த மஞ்சள் துணியை முடியுங்கள். முடிந்து வைத்த இந்த நாணயத்தை உங்கள் கோரிக்கை நிறைவேறியதும் இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று காணிக்கை செலுத்துங்கள். இவ்வாறு செய்ய தீராத கஷ்டங்களும் தீர்வதாக நம்பிக்கை உண்டு.

5-rupee-coin0

எந்த விஷயத்திலாவது நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் வெளியில் கிளம்புகிறீர்கள் என்றால், நெற்றியில் விபூதியை இட்டுக் கொண்டு கையில் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து கொண்டு செல்லுங்கள். செல்லும் காரியம் எப்பொழுதும் ஜெயமாகும். நீங்கள் போகிற காரியம் வெற்றி அடைந்த பின்பு, கையில் வைத்திருக்கும் ஐந்து ரூபாய் நாணயத்தை விநாயகர் கோவில் உண்டியலில் சமர்ப்பித்து விடுங்கள். இப்படி ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து செய்யக்கூடிய எளிய பரிகாரங்களை நீங்களும் செய்து பயனடையலாமே!

- Advertisement -