உங்களுடைய கழுத்தில் இதை மட்டும் எப்போதும் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். திடீர் பண கஷ்டம் உங்கள் வாழ்க்கையில் வரவே வராது.

sivan
- Advertisement -

வாழ்க்கையில் திடீர் சரிவு, திடீர் வீழ்ச்சி, திடீரென பண கஷ்டம் வருவது என்பது இயற்கை தான். போன மாதம் வரை வருமானத்திற்கு பிரச்சனை இல்லாத குடும்பம் இன்று, பணத்திற்கு கஷ்டப்படுகிறது. வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பு என்பது ரொம்பவே பெரியதாக இருக்கும். ஆனால் இந்த ஏற்ற இறக்கங்களை மனிதர்களான நம்மால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. நன்றாக காசு பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தவருக்கு திடீரென அடுத்த மாதம் வருமானத்திற்கு வழியில்லை என்றால் அந்த மனது நொந்து போக தான் செய்யும். இப்படி திடீர் வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கும், இப்படிப்பட்ட திடீர் வீழ்ச்சிகள் வாழ்க்கையில் வராமல் இருக்கவும், ஒரு சூப்பரான சுலபமான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

எப்போதுமே இந்த ஒரு பொருள் உங்களுடைய கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தால், உங்களுக்கு திடீர் வீழ்ச்சி ஏற்படாது. அது எந்த பொருள் என்று யோசிக்கிறீங்களா. ருத்ராட்சம் தான் அந்த பொருள். 8 முக ருத்ராட்சத்திற்கு அந்த சக்தி அதிகமாக உள்ளது. உங்களுக்கு ரொம்பவும் தெரிந்தவர்களிடம் சொல்லி இந்த எட்டு முக ருத்ராட்சத்தை காசு கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். கொஞ்சம் விலை அதிகமாகத்தான் இருக்கும். (போலியான ருத்ராட்சத்தை வாங்கி ஏமாறாதீங்க.)

- Advertisement -

வாங்கிய இந்த எட்டு முக ருத்ராட்சத்தை நெல்லிக்காய் சாறில் போட்டு ஊற வைக்க வேண்டும். நெல்லிக்காயை கொட்டை நீக்கி விட்டு, மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்து பிழிந்தால் சாறு நமக்கு கிடைக்கும். அந்த சாரில் இந்த எட்டு முக ருத்ராட்சத்தை போட்டு விடுங்கள். காலையில் 6 மணிக்கு குளித்துவிட்டு இப்படி ருத்ராட்சத்தை எடுத்து அந்த நெல்லிக்காய் சாறில் போட வேண்டும். குறிப்பாக இதை நீங்கள் செய்யக்கூடிய நாள் அஷ்டமி நாளாக இருக்க வேண்டும். அஷ்டமி திதி வரக்கூடிய நாளில் இதை செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. அஷ்டமி என்பது 8 குறிப்பது. ஆக இந்த எட்டு முக ருத்ராட்ச பரிகாரத்தை அஷ்டமி திதியில் செய்யுங்கள்.

அஷ்டமி திதி என்று காலை 8 முக ருத்ராட்சத்தை நெல்லிக்காய் சாறில் போட்டு வைத்துவிட்டு, அன்றைய தினமே மாலை அந்த ருத்ராட்சத்தை எடுத்து நூலில் கோர்த்து சிவபெருமானை நினைத்து உங்களுடைய கழுத்தில் கட்டிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். அது உங்களுடைய கழுத்திலேயே இருக்கட்டும். உங்களுக்கு பணத்தட்டுப்பாடு வராது. திடீர் வீழ்ச்சி ஏற்படாது. வருமானம் ஏதாவது ஒரு வகையில் வந்து கொண்டே இருக்கும். வாழ்நாள் முழுவதும் நீங்கள் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க இந்த ஒரு பரிகாரம் போதும். நம்பிக்கையோடு செய்யுங்கள்.

- Advertisement -

ருத்ராட்சம் என்றவுடன் எல்லோருக்குமே ஒரு சந்தேகம் வந்திருக்கும். இந்த ருத்ராட்சத்தை கட்டிக் கொண்டால் என்னென்ன செய்ய வேண்டும். என்னென்ன செய்யக்கூடாது என்பதில் நிறைய பேருக்கு நிறைய கேள்விகள் மனதில் எழுகிறது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எல்லா நல்லது கெட்டதையும் இந்த ருத்ராட்சம் போட்டுக் கொண்டால் செய்யலாம். தவறே கிடையாது. குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்கள் கூட ருத்ராட்சம் அணியலாம் தவறு கிடையாது.

ஆனால் ருத்ராட்சம் அணிந்து கொண்டால் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு மட்டும் இருக்கிறது. அது சில பேருக்கு கஷ்டமாக இருக்கலாம். இந்த ருத்ராட்சத்தை நீங்கள் அணிந்து கொண்டால் அந்த அசைவம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தானாகவே உங்களுடைய மனதில் இருந்து நீங்கிவிடும். விருப்பம் உள்ளவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த சின்ன பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -