எல்லோருக்குமே தன்னுடைய தலைமுடி கொட்டுவதில் நிறையவே வருத்தம் இருக்கும். இதற்காக என்னென்னவோ செய்து பார்த்திருப்போம் ஆனால் தலைமுடி கொட்டுவது மட்டும் நிற்காமல் இருக்கிறது என்று வேதனைப்படுபவர்களுக்கு, இந்த தேங்காய் பால் கண்டிப்பாக நல்ல ஒரு ரிசல்ட்டை கொடுக்கும். தேங்காய் பாலில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு உள்ளே மட்டும் அல்லாமல், தலைமுடியின் வேர் கால்களுக்கும் நல்ல ஒரு ஊட்டசத்தை கொடுக்க வல்லதாக இருக்கிறது. இந்த தேங்காய் பாலை வைத்து எப்படி தலை முடியை ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும், மீண்டும் இழந்த இடத்தில் முடி வளரவும் வைக்க முடியும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.
ஆரோக்கியமான தலைமுடிக்கு முதலில் நல்ல ஒரு ஊட்டச்சத்து தேவை. தேங்காய் எண்ணெயை விட, தலைமுடிக்கு நல்ல ஒரு பாதுகாப்பு இருக்க முடியாது. ஆனால் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள் தான் இன்று பலரின் முடி கொட்டும் பிரச்சனைக்கு காரணமாகவும் அமைந்துவிட்டது. தேங்காய் எண்ணெயை தினமும் வடிய, வழிய தடவுபவர்களுக்கு கண்டிப்பாக முடி கொட்டும்.
ஏனென்றால் தேங்காய் எண்ணெய் தலைமுடியில் இருக்கும் பொழுது, நீங்கள் வெளியில் தூசு, மாசு போன்றவற்றில் சென்று வந்தால் விரைவாகவே முடியில் அவை படிந்து தலைமுடி அழுக்காகி விடும். வாரம் ஒரு முறை நீங்கள் தலையை சுத்தம் செய்வீர்களானால், அதற்குள் தலை முடியில் இருக்கும் இந்த அழுக்குகள் வேர் கால்களை வலுவிலக்க செய்து விடும் ஆபத்து உண்டு எனவே அடிக்கடி தேங்காய் எண்ணெயை நிறைய தடவ வேண்டிய அவசியம் இல்லை
கண்டிப்பாக வாரம் இரண்டு முறையாவது உங்களுடைய தலையை சுத்தம் செய்து விட வேண்டும். தலை முடியின் வேர்க்கால்களுக்கு ஈரப்பதம் இருந்தால் போதும், வறண்டு போகாமல் இருக்க கொஞ்சம் போல் நீங்கள் தினமும் தேங்காய் எண்ணெய் தடவி வரலாம். அதுவும் ரெண்டு நாட்களுக்கு ஒரு முறை நீங்கள் கண்டிப்பாக தலைக்கு குளித்து சுத்தம் செய்து விட வேண்டும்.
தேங்காய் எண்ணெய் மட்டும் அல்லாமல் தேங்காய் பாலும் தலை முடிக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்தை கொடுக்கிறது. தினமும் ஒரு கப் தேங்காய் பால் குடித்து வருபவர்களுக்கு தோல் சுருக்கங்களும் வரவே செய்யாதாம். அந்த அளவிற்கு தோலை மிருதுவாகவும், கண்பார்வை திறன் தெளிவடையவும் தேங்காய் பால் குடிப்பது நல்லது. தேங்காய் பால் குடித்தால் குண்டாகி விடுவார்கள் என்று கூறுவதெல்லாம் உண்மை கிடையாது. மற்ற பாலை விட தேங்காய் பாலில் கொழுப்புச்சத்து குறைவுதான்.
இதில் இருக்கும் கால்சியம், பாஸ்பரஸ் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு ரொம்பவும் நல்லது. செலினியம், மாங்கனிஸ் அதிகம் இருக்கும் தேங்காய் பால் நீரிழிவு, வாத பிரச்சனையையும் நீக்குகிறது. இந்த தேங்காய் பால் திக்காக முதல் பால் எடுத்து தலை முழுவதும் ஊற்றி ஊற வைத்து விடுங்கள். பின்னர் ஒரு டவல் கொண்டு தலையை இறுக்கமாக கட்டிக் கொள்ளுங்கள். 20 நிமிடம் நன்கு ஊறிய பிறகு தலை முடியை அலசி வந்தால் வேர்கால் முதல் நுனி வரை முடிக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்து கிடைத்து, இழந்த இடத்தில் மீண்டும் அடர்த்தியாக முடி வளர துவங்கும். முடி சார்ந்த பிரச்சினைகள் அனைத்தும் ஒரே வாரத்தில் நீங்குவதை காணலாம். தொடர்ந்து மாதம் இரு முறை இது போல விடாமல் செய்து வாருங்கள், தலைமுடி பிரச்சனைக்கு குட்பை சொல்லுங்கள்.