நாளை(20/7/2020) ஆடி அமாவாசை விரதம் மேற்கொள்வது எப்படி? என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

amman
- Advertisement -

மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் ஆடி அமாவாசை என்பது தனி சிறப்பிற்குரியது. ஆடி மாதம் முழுவதும் தெய்வ வழிபாடுகளுக்கு உகந்த மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த மாதத்தில் வரும் அமாவாசை பித்ருக்களுக்கு மிகவும் விசேஷமானது. அன்றைய நாளில் நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பது நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களையும், நல்லனவைகளையும் தரவல்லது. இத்தகைய சிறப்பு மிகுந்த இந்த நாளை தவற விட்டு விடாதீர்கள். ஆடி அமாவாசை விரதத்தை எப்படி மேற்கொள்வது? அன்றைய நாளில் என்ன செய்ய வேண்டும்? செய்யக் கூடாது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

aadi

ஆடி அமாவாசை அன்று அதிகாலையிலேயே எழவேண்டும். காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு விரதம் மேற்கொள்பவர்கள் உபவாசம் இருக்க வேண்டும். உங்கள் முன்னோர்களை நினைத்து நீங்கள் இந்த விரதம் மேற்கொள்வதால் அவர்களின் ஆசி உங்களது குடும்பத்திற்கும் சேர்த்து நிச்சயம் கிடைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். நம் முன்னோர்களின் ஆசி நம்முடன் இருந்தால்தான் நம்மால் சுபிட்சமான வாழ்க்கை வாழ முடியும். மாதம் தவறாமல் அமாவாசை விரதத்தை மேற்கொள்பவர்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தை எப்பொழுதும் சந்தித்து கொண்டே இருப்பார்கள்.

- Advertisement -

அமாவாசை தினத்தில் தலைக்கு எண்ணெய் தேய்த்து கட்டாயம் குளிக்கக்கூடாது. விரதம் இருப்பவர்கள் சாதாரணமாக தலைக்கு குளித்தாலே போதுமானது. உங்கள் வீட்டில் எத்தனை பேர் இறந்து போய் இருக்கிறார்களோ அத்தனை இலைபோட்டு அவர்களின் படம் வைத்து அவர்களுக்கு பிடித்த பொருட்களை சமைத்து படையல் போட வேண்டும். ஒரு சொம்பில் தண்ணீரில் கருப்பு எள் கலந்து வைக்க வேண்டும். பசு மாட்டிற்கு கட்டாயம் அகத்திக்கீரை, வாழைப்பழம், வெல்லம் கலந்த அரிசி இவற்றில் உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும்.

mariyamman

அதன் பின் விளக்கேற்றி, தூப தீபம் காட்டி முன்னோர்களை வழிபட்ட பிறகு ஒரு தாம்பூலம் வைத்து எள் கலந்த தண்ணீரை உங்களது வலது கைகளில் ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் சேர்த்து பிடித்துக்கொண்டு மூன்று முறை நீரை இரைக்க வேண்டும். எள்ளும் தண்ணீரும் கலந்த கலவை இரைக்கும் பொழுது பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி அவ்வளவு தொலைவில் இருக்கும் பித்ரு லோகத்திற்கு நம்முடைய வேண்டுதல்கள் சென்றடைகின்றன என்பது ஐதீகம்.

- Advertisement -

பித்ரு லோகத்தில் மூலிகையாக புடலங்காய் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதற்கு அடியில் தான் பித்ருக்கள் இளைப்பாறுவதாக கூறப்படுகிறது. அதே போல் பசுந்தயிர் பித்ருக்களுக்கு இஷ்டமாக இருக்குமாம். அதனால் நீங்கள் படைக்கும் படையலில் புடலங்காய், பசுந்தயிர் இருப்பது தனிச்சிறப்புடையது. பூஜைகள் முடிந்த பின்னர் காக்கைக்கு இலையில் உணவு வைக்க வேண்டும். காக்கை உணவு உண்டபின் நீங்கள் உணவருந்தலாம்.

AmmanAad

அமாவாசை தினத்தில் கோவில்களில் நெய் தீபம் ஏற்றுவது நல்லது. அன்றைய தினத்தில் காய்கறிகள், வஸ்திரம், அரிசி போன்றவற்றை தானம் அளிப்பதால் பெறற்கரிய பேறு கிட்டும் என்கிறது சாஸ்திரங்கள். உங்களால் என்ன முடியுமோ அதை மற்றவர்களுக்கு தானமாக அளித்து உங்களின் முன்னோர்களின் ஆசியை முழுமையாக பெற்றுக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் எப்பேற்பட்ட கர்ம வினைகளும் நிச்சயம் தீரும்.

- Advertisement -