ஆடி மாதத்தில் பெண்கள் பிள்ளையாருக்கு இந்த விரதம் மேற்கொண்டால் செல்வவளம் கொழிக்கும் தெரியுமா? குடும்ப பிரச்சினைகள் தீர எளிய பரிகாரம்!

pillaiyar-prayer
- Advertisement -

ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமையிலும் விரதம் இருந்து இறைவழிபாடுகள் செய்ய நம் குடும்ப வளம் செழிப்பாக மாறும் என்பது நியதி. குடும்பத்தில் இருக்கும் எத்தகைய பிரச்சனையையும் தீர்க்கக் கூடிய சக்தி ஆடி மாதத்திற்கு உண்டு. ஆடி மாதத்தில் உண்ணா நோன்பு இருந்து முறையாக கடவுளை வழிபட்டு வந்தால் வேண்டிய வரம் வேண்டியபடி கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் ஆடி மாதத்தில் பெண்கள் இந்த விரதத்தை பிள்ளையாருக்கு மேற்கொண்டால் செல்வ வளமானது கொழிக்கும்! வறுமை நீங்கும், குடும்ப பிரச்சினைகள் தீரும், கணவன் மனைவி ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என்று ஆன்மீகம் கூறுகிறது. அத்தகைய எளிய பரிகாரத்தை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஆடி மாதத்தில் பிள்ளையாருக்கு பெண்கள் ரகசிய வழிபாடுகள் மேற்கொள்வது உண்டு. கொழுக்கட்டை பிடித்து அதிகாலையில் வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு தெரியாமல் நோன்பு இருந்து வறுமை நீங்க வழிபடும் வழக்கம் இருந்து வந்தது. இதை ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் செய்வது முறையாகும். இப்படி செய்தால் குடும்பத்தில் தன, தானியத்திற்கு குறைவில்லாமல் சேரும் என்பது பலனாகும். அது போல ஆடி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் இந்த எளிய நோன்பை கடைபிடித்தால் செல்வ வளம் பெருகும் என்பது பலனாக இருக்கிறது.

- Advertisement -

ஆடி மாதத்தில் பொதுவாக அம்மனை வழிபடுவார்கள். அதே போல பிள்ளையாரையும் வழிபட கேட்டது கிடைக்கும், நம் ஆசைகள் நிறைவேறும், வேண்டிய வேண்டுதல்கள் பலிக்கும். செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை உங்களால் முடிந்த பொழுது நீங்கள் அதிகாலையில் எழுந்து நீராடி சுத்த பத்தமாக பசுஞ்சானத்தால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். பசுஞ்சான பிள்ளையார் ரொம்பவே சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிள்ளையாரை ஒவ்வொரு பொருளில் பிடித்து வைத்து வழிபடுவது வழக்கம், அதில் இந்த சாண பிள்ளையார் நம் வேண்டுதலை உடனே நிறைவேற்றுவதாக நம்பப்படுகிறது.

பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு மலர்களால் அலங்கரித்துக் கொள்ளுங்கள். அருகம்புல், எருக்கம் பூ போன்றவற்றால் அலங்காரம் செய்யலாம். சுற்றிலும் மலர்களை, உதிரிப் பூக்களை வையுங்கள். நைவேத்தியம் படைக்க கொழுக்கட்டை தயார் செய்ய வேண்டும். கைகளால் இடித்த பச்சரிசி மாவில் உப்பு எதுவும் சேர்க்காமல் தேங்காய் துருவல், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து பிடி கொழுக்கட்டையாக பிடித்து அவித்து எடுக்க வேண்டும்.

- Advertisement -

இதை நெய் வைத்தியம் படைத்து அகல் விளக்கு ஒன்றில் சுத்தமான விளக்கெண்ணெய் ஊற்றி, 9 நூல்கள் கொண்ட திரியை திரித்து தீபத்தினுள் சேர்த்து தீபம் ஏற்ற வேண்டும். விநாயகர் மந்திரங்கள், விநாயகர் பாடல்கள், விநாயகர் புராணங்கள் படிப்பது போன்றவற்றை அந்நேரத்தில் செய்து விநாயகரை மனமுருக வேண்டி வழிபட வேண்டும். பின்னர் அந்த கொழுக்கட்டையை அன்றைய நாளுக்குள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து தீர்த்து விட வேண்டும்.

அதை மறுநாள் வரை வைத்திருக்கக் கூடாது. இதை சாப்பிடும் வரை உணவு எதுவும் உண்ணாமல் இருக்க வேண்டும். உணவு எடுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு உடல்நிலை இருந்தால் எளிதான திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இப்படி நீங்கள் ஆடி மாதத்தில் பிள்ளையாரை வழிபட்டு பாருங்கள், வறுமை நீங்கி, செல்வ வளமானது பெருக துவங்கும்.

- Advertisement -