ஆடி மாத ராசி பலன்கள் 2022 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

aadi-month
- Advertisement -

ஆடி மாதம் என்றாலே இறைவழிபாட்டிற்கு உரிய மாதமாக சிறப்பாக கடைபிடிக்கப்படுகிறது. இம்மாதத்தில் பலவிதமான மாறுதல்கள் நம் அன்றாட வாழ்க்கையில் நிகழ்வது வழக்கம். ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய மாற்றங்கள், கிரக அமைப்புகள் நமக்கு எந்தெந்த பலன்களை கொடுக்கும்? என்கிற பொதுவான கணிப்பு உண்டு. அந்த வகையில் ஜோதிட ரீதியாக சுபகிருது ஆண்டின் ஆடி மாத ராசிபலன்கள் என்னென்ன பலன்களை 12 ராசிக்காரர்களுக்கும் கொடுக்கப் போகிறது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறீர்கள்.

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்கள் ஆடி மாதம் முழுவதும் அமோகமான பலன்களை பெற இருக்கிறீர்கள். வரவுக்கு மீறிய செலவுகள் வரக்கூடும் என்பதால் முன்கூட்டியே திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. குடும்ப சூழல் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட இருக்கிறது. வெளியூர் பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பொறுப்புகள் கூடும் என்பதால் நிர்வாக ரீதியான அக்கறையுடன் இருப்பது நல்லது. பொருளாதார ரீதியான ஏற்றம் எதிர்கால நன்மைகளை கொடுக்கும். கிரக நிலைகள் மாத இறுதியில் சிரமத்தை கொடுக்கும் என்பதால் புதிய முயற்சிகளை கைவிடுவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற விஷயங்களை கவனத்தை திசை திருப்பாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் அவ்வபோது சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் பெரிதாக எதுவும் ஏற்படாது என்பதால் கவலை கொள்ள தேவையில்லை. பரிகாரமாக துர்க்கை அம்மனுக்கு ராகு கால விளக்கேற்றுங்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவி செய்யுங்கள் நன்மைகள் பெருகும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்கள் ஆடி மாதம் முழுவதும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இதுவரை இருந்து வந்த தடைகள் யாவும் விலகி நன்மைகள் நடக்கக்கூடிய இனிய மாதமாக இருக்கிறது. அடிக்கடி தொலைதூர பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வழக்குகள் தொடர்பான விஷயத்தில் அனுகூல தீர்ப்பை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பொறுப்புகளில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. மேலதிகாரிகள் நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதை அவ்வபோது பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிப்பீர்கள். சிலருக்கு விரக்தி, வெறுமை போன்றவற்றை உணரக்கூடிய அமைப்பாக இருப்பதால் நிதானத்தை கைவிட வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு உரிய லாபம் கிடைப்பதில் சிக்கல்கள் நீடிக்கும். வியாபார விருத்தி உண்டாக உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் பெரிதாக எதுவும் ஏற்படாது. பரிகாரமாக ஹயக்ரீவரை வழிபட்டு வாருங்கள். வாரம் ஒருமுறை உங்களால் முடிந்தவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த ஆடி மாதம் முழுவதும் ரொம்பவே நல்ல பலன்களை கொடுக்கப் போகிறது. உங்களை எதிர்த்தவர்கள் எவரும் பின்வாங்கக் கூடிய சூழ்நிலை நிலவுகிறது. நீங்களே ராஜா நீங்களே மந்திரி என்பது போல நீங்களே ஆளக்கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். குடும்ப தகராறுகளில் இருந்து வந்த சிக்கல்கள் மறையும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை பேசி பேசி பெரிதாகாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல் சோர்வு ஏற்படுவதால் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகலாம். இடமாற்றம் குறித்த விஷயங்களில் சாதக பலன் உண்டாகும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் தேவையற்ற அலைகளை கொடுக்கும் என்பதால் அனாவசிய பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் எதையும் குறைவாக எடை போடாமல் அதற்கு உரிய வகையில் மரியாதை கொடுத்தால் நன்மை உண்டாகும். பரிகாரமாக வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றி வாருங்கள்.

- Advertisement -

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு ஆடி மாதம் முழுவதும் உற்சாகம் தரக்கூடிய மாதமாக இருக்கிறது. இதுவரை இருந்து வந்த தொய்வு நிலை மாறி முகத்தில் ஒரு புது பொலிவு தென்படும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த நெருடல்கள் நீங்கும். தனிமையில் மனதைத் திறந்து பேசி பிரச்சனைகளை அவ்வபோது தீர்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த பொருளாதார ரீதியான பிரச்சனைகள் படிப்படியாக மாறும். சுய உழைப்பு உங்களுடைய பெருமையை நிலைநாட்டும். கஷ்டப்பட்டதற்கு பலன் கிடைக்க கூடிய தருணமாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை. எதையும் அவசரப்பட்டு முடிவெடுத்தால் பிறகு வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க சிரமம் ஆகிவிடும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் சாதக பலன் கொடுக்கும். மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றாலும் கண்காணிப்பு தேவை. ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அவ்வபோது கவனித்துக் கொள்வது உத்தமம். பரிகாரமாக திங்கட்கிழமையில் ஈசனை வழிபட்டு வாருங்கள் நன்மைகள் நடக்கும்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு ஆடி மாதம் முழுவதுமாக பல்வேறு நன்மைகள் கிடைக்கக்கூடிய இனிய மாதமாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் மனக்கசப்புகள் தீரக்கூடிய காலம் வந்துவிட்டது என்று கொள்ளுங்கள். சதா சொன்னதையே சொல்லிக்கொண்டு இல்லாமல் இனி நடக்கப் போவதை பற்றி சிந்திப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். இதனால் பணி சுமையும் கூடும் என்பதால் அவ்வபோது டென்ஷன் இருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்க செய்யும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்பு உண்டாக இருக்கிறது. பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு படிப்படியாக மாற துவங்கும். திடீர் பயணங்கள் அனுகூல பலன் கொடுக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமண தடைகள் அகன்று மனதிற்கு பிடித்த நல்ல மரண அமையும். மாணவர்களின் முயற்சிகளுக்கு பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது. ஆரோக்கியத்தில் ஏற்றம் காணும் நேரமாக இருப்பதால் கவலை வேண்டாம். பரிகாரமாக இல்லாதவர்களுக்கு திருமண உதவி செய்வது நல்லது.

- Advertisement -

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு ஆடி மாதம் முழுவதும் வெற்றி வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கக்கூடிய மாதமாக இருக்கிறது. நீங்கள் இதுவரை நடக்கவில்லையே என்று நினைத்திருந்த காரியம் ஒன்று நடக்கும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருப்பதால் வேண்டிய பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேரத்தை சரியாக கடைபிடிப்பதில் கவனம் தேவை. உங்களுடைய அலட்சியம் பல இழப்புகளை ஏற்படுத்த கூடும் என்பதால் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. வியாபார விருத்தி உண்டாக புதிய யுக்திகளை கையாளுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கணவன் மனைவி இடையே இருந்து வந்த சிறு சிறு பிணக்குகள் தீரும். ஆபத்தான விஷயத்தில் அவசியம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தீராத ஆரோக்கிய பாதிப்புகள் தீர்வுக்கு வரும். பரிகாரமாக செவ்வாய்க்கிழமையில் ஆறுமுகனுக்கு ஆறு தீபம் ஏற்று வழிபட்டு வாருங்கள்.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு ஆடி மாதம் முழுவதும் புது உற்சாகத்தை கொடுக்க இருக்கிறது. மாதம் முற்பகுதியில் ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை சுமந்தாலும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். எதையும் நினைத்து மனம் தளர்ந்து விடாமல் உங்களுடைய இலக்கை நோக்கி பயணிப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருந்து வந்த சிறு சிறு தவறான புரிதல்களை சரி செய்து கொள்வீர்கள். சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசு வழியில் நிதியுதவிகள் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அடிக்கடி சந்தை நிலவரம் மாறக்கூடுவதால் சமயோஜிதமாக இருப்பது நல்லது. சுப காரியங்களில் ஈடுபடுவீர்கள். மாணவர்களின் அடிப்படை கல்வி தேவைகளை பூர்த்தி செய்வது நல்லது. அடிக்கடி வெளியில் சென்று வர மனமும், உடலும் வலுப்பெறும். ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. பரிகாரமாக எளியவர்களுக்கு வஸ்திர தானம் செய்யுங்கள், துன்பங்கள் தொலையும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது என்பதால் கவலை கொள்ள தேவையில்லை. இதுவரை இருந்து வந்த மனநிலை மாற வாய்ப்புகள் அமையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வசதி, வாய்ப்புகள் பெருகும். எவ்வளவு கடினமான பிரச்சனைகளையும் மனதில் உற்சாகத்துடன் தினமுடன் எதிர் கொள்வீர்கள். குடும்பத்தில் சகோதர, சகோதரிகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும். பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடின உழைப்பு உற்சாகத்தை கொடுக்கும். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாடு தொடர்பான விஷயத்தில் சாதக பலன் கிடைக்க இருக்கிறது. புதிய தொழில் துவங்கும் எண்ணம் பலிதம் ஆகும். மாத இறுதியில் திடீர் அதிர்ஷ்டம் வரும். வம்பு, வழக்குகளில் சாதகமற்ற தீர்ப்பு வரக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியத்தில் சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம் கவனத்துடன் இருப்பது நல்லது. பரிகாரமாக முழுமுதல் கடவுள் ஆன விநாயகருக்கு அரச இலையில் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் கைமேல் பலன் அளிக்கக்கூடிய நல்ல மாதமாக இருக்கிறது. சுபகாரிய தடைகள் விலகி குடும்பத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பனிப்போர் அவ்வபோது வந்து செல்லும். புது இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வேலை தேடி அலைபவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை கிடைத்து செட்டில் ஆகிவிடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். அரசு வழி காரியங்களில் அனுகூல பலன்கள் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக இருக்கிறது. புதிய புதிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்வீர்கள். எந்த சூழலிலும் உங்கள் நேர்மையையும், நாணயத்தையும் கைவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. மாத பிற்பகுதியில் நஷ்டம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் முக்கிய முடிவுகளில் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகள் மேல் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியம் சீராக இயங்கும். பரிகாரமாக குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு ஆடி மாதம் முழுவதும் அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் அதை திறம்பட சமாளித்து முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டாலும் தடங்கல்களை தாண்டி உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தி அடையும். வம்பு வழக்குகளில் நம்பிக்கை ஏற்படும். தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். பழைய கடன் பாக்கிகளை படிப்படியாக செலுத்துவதற்கான பாதைகள் பிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலக பிரச்சனைகளில் மனம் நிம்மதியை இழக்க நேரலாம் என்பதால் கூடுமானவரை எதிலும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த வெறுப்புகள், மனவருத்தங்கள் மெல்ல மெல்ல மறைய ஆரம்பிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். ஆரோக்கியம் படிப்படியாக மேம்படும். பரிகாரமாக புதன் கிழமையில் புத்தி காரகனாக விளங்கும் புதபகவானை வழிபடுவது சிறப்பு!

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு ஆடி மாதம் முழுவதும் அமோகமான ஆதரவு கிடைக்கக் கூடிய மாதமாக விளங்குகிறது. பெரிய பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகள் சாதக பலன் கொடுக்கும். குடும்பத்தில் பண பிரச்சனைகள் தீரும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்கும். வராது என்று நினைத்த பணம் பல வழிகளில் இருந்து வந்து சேரும். கணவன் மனைவி இடையே இருக்கும் விரிசல் மாறுபட்ட அணுகுமுறை மூலம் மெல்ல மெல்ல மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய போட்டிகள் உருவாகும் இதனால் உற்சாகத்திற்கு குறைவிருக்காது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அபிவிருத்தி உண்டாகும். உங்களுடைய உழைப்பு பல இடங்களில் வீணடிக்கப்படும் என்றாலும் முயற்சியை மட்டும் தளரவிடாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆரோக்கியத்தில் அனுகூல பலன்கள் கிட்டும். பரிகாரமாக சுக்கிரனை வெள்ளிக்கிழமையில் வழிபட்டு வாருங்கள் சுகமாக வாழ்வு அமையும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு ஆடி மாதம் முழுவதும் நிம்மதியான மாதமாக அமைய இருக்கிறது. இதுவரை மனக்கவலையில் இருந்து வந்த நீங்கள் இனி புது பொலிவுடன் காணப்படுவீர்கள். வரக்கூடிய விரயங்கள் யாவும் சுப விரயமாக இருக்கும். பதறாத காரியம் சிதறாத என்பது போல திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். உங்கள் குடும்பத்திற்கு புதிய நபர்களின் வருகை அனுகூல பலன் கொடுக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெறுக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எடுக்கும் முயற்சியில் பன்மடங்கு லாபம் கிடைக்கப் போகிறது. பொருளாதார ரீதியான வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்பதால் பொன் பொருள் சேரும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதுரியம் தேவை இல்லை என்றால் உங்களை சிலர் ஏமாற்றி விடக்கூடும். பிள்ளைகளின் எதிர்காலம், கல்வி குறித்த விஷயத்தில் கூடுதல் அக்கறை தேவை. ஆரோக்கியத்தில் வரக்கூடிய பாதிப்புகளை உடனுக்குடன் அலட்சியப்படுத்தாமல் கவனித்துக் கொள்ளுங்கள். பரிகாரமாக சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வாருங்கள் தடைகள் விலகும்.

- Advertisement -