இந்த மாதத்தில் பிறந்தவர்கள், இப்படி கூட இருப்பார்களா? மற்ற மாதங்களில் பிறந்தவர்களை விட, இந்த மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும்?

amman-astro
- Advertisement -

பொதுவாக 12 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் பிறக்கும் குழந்தைகள் உடைய குணாதிசியங்கள் ஒவ்வொரு விதமாக தனித்துவம் கொண்டதாக இருக்கும். அதிலும் தமிழ் மாதத்தில் பிறந்தவர்கள் உடைய குணாதிசியங்கள் ஒருமித்ததாக இருக்கும். அந்த வகையில் ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களை காட்டிலும் மிகவும் தனித்துவமானவர்கள் ஆக விளங்குகின்றார்கள். ஆடி மாதம் பிறந்தவர்களுடைய குணம் எப்படி இருக்கும்? ஆடி மாதம் பிறந்தவர்கள் உடைய விசேஷமான குணநலன்கள் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் எல்லோரையும் போல கலகலப்பானவர்களாக இருப்பார்கள். யாரிடம் எப்படி பேச வேண்டும்? என்பதும், இடம், பொருள், ஏவல் தெரிந்து நடந்து கொள்வதும் இவர்களிடம் இருக்கும் சிறப்பம்சமாக விளங்கும். எந்த இடத்தில்? எப்படி? யாரிடம் பேச வேண்டும்? என்கிற சரியான கணிப்பு இவர்களிடம் இயல்பாகவே காணப்படும். சிறுவயதிலேயே அதிக அளவிற்கு பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டிருப்பார்கள்.

- Advertisement -

ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் தெய்வாம்சம் மிகுதியாக இருக்கும் என்பார்கள். ஆடி மாதம் இறை வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். இம்மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இயற்கையாகவே இறை பக்தியின் மீது அதீத ஆர்வம் இருக்கும். இதனால் தெய்வ கடாட்சம் நிறைந்து காணப்படுவார்கள். இவர்கள் ஒரு வாக்கு கூறினால் அது உண்மையில் பலிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும். அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு நபராக இருப்பார்கள். கொடுத்த பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பார்கள். அதற்காக நிறையவே மெனக்கெட்டு முயற்சி செய்வார்கள்.

தங்களுடைய வயதினை காட்டிலும் அறிவிலும், செயல் ஆற்றலிலும் முதிர்ந்து காணப்படுவார்கள். தங்களை நம்பி வந்தவர்களை எந்த விதத்திலும் அவர்கள் ஏமாற்றுவதில்லை. சுயநலமாக இவர்கள் ஒருபோதும் செயல்படுவதில்லை. தனக்காக எதுவும் செய்து கொள்ளாமல் தன்னுடைய குடும்பம், தன்னுடைய நண்பர்கள் என்று தன்னை சார்ந்தவர்களுக்காகவே வாழும் குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். தன்னை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று மெனக்கெடுவதில்லை, இதனால் இவர்கள் தோற்றத்தில் மிகவும் எளிமையானவர்களாக இருக்கிறார்கள்.

- Advertisement -

முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும் இவர்கள், நன்கு பழகிய ஒருவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிற உள்ளுணர்வு இல்லாதவர்களாக இருப்பதால் எவரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடுவது உண்டு. இவர்களை தங்களுடைய சுயநலத்திற்காக மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வது உண்டு. தீய பழக்கங்களுக்கு எளிதில் ஆட்கொண்டு விடும் ஆபத்து இருப்பதால் கூடுமானவரை இவர்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.

எவ்வளவு கோபம் வந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டு முழுங்கி விடுவார்கள். எப்பொழுதும் ஒருவர் தவறு செய்தால் சட்டென அவர்களை இவர்கள் தவறாக நினைப்பது இல்லை. அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள்? என்று சிந்திப்பார்கள், அவர்கள் இடத்தில் நின்று யோசனை செய்து பின் முடிவெடுப்பார்கள். இவர்களை நம்பி எந்த ஒரு ரகசியத்தை கூறினாலும், அதை தன்னுள்ளே இரகசியமாகவே கடைசி வரை வைத்து காப்பாற்றுவார்கள். இத்தகைய குணாதிசயங்களைக் கொண்ட நபரை நண்பர்களாக பெறுவதற்கு கொடுத்து தான் வைத்திருக்க வேண்டும்.

- Advertisement -