இன்று செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வந்திருக்கும் ஆடிப்பெருக்கு! தண்ணீரில் கரைத்த உப்பு போல உங்களுடைய கடனும் கரைந்து காணாமல் போக, இதை மட்டும் செய்யுங்கள் போதும்.

mahalashmi2
- Advertisement -

அதிகப்படியான கடன் சுமையால் கஷ்டப்பட்டு வருபவர்கள் கடன் தொகையை இந்த செவ்வாய்க்கிழமைகளில் திருப்பிக் கொடுத்தால் கடன் சீக்கிரம் தீர்ந்து விடும். இது செவ்வாய் கிழமைக்கு, செவ்வாய் ஓரைக்கே உண்டான தனி சிறப்பு. அதிலும் இன்று வந்திருக்கும் செவ்வாய்க்கிழமை, ஆடிப்பெருக்குடன் சேர்ந்து வந்து இருக்கின்றது. இன்றைய தினத்தை யாரும் தவற விட வேண்டாம். தீராத கடன் சுமை தண்ணீரில் கரைத்த உப்பு போல கரைந்து போக, இன்றைய தினத்தில் என்ன பரிகாரம் செய்ய வேண்டும், எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

tuesday

செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணியில் இருந்து 7.00 மணிவரை செவ்வாய் ஹோரை. இதேபோல் செவ்வாய்க்கிழமை மதியம் 1.00 மணியிலிருந்து 2.00 மணி வரை செவ்வாய் ஓரை. இதில் காலை வரக்கூடிய செவ்வாய் ஓரையை நாம் தவற விட்டிருப்போம். பரவாயில்லை, மதியம் வரக்கூடிய செவ்வாய் ஓரையில் இந்த பரிகாரத்தை செய்து அனைவரும் பயன் அடையலாம்.

- Advertisement -

மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட வேண்டும். உங்கள் வீட்டு பூஜையறையில் மகாலட்சுமியையும் குல தெய்வத்தையும் நினைத்து தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பின்பு 3 கை பிடி அளவு கல்லுப்பு தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். சமையலுக்குப் பயன்படுத்தாத எச்சில் படாத புதிய கல்லுப்பாக இருக்கட்டும். பூஜை அறையில் அமர்ந்து ஒரு மஞ்சள் நிறத் துணியில் 3 முறை உங்களுடைய உள்ளங்கை நிரம்ப கல்லுப்பைக் கிண்ணத்திலிருந்து எடுத்து அந்த மஞ்சள் துணியில் வைக்க வேண்டும்.

kadan

மூன்று கைப்பிடி கல் உப்பை, உங்கள் கைகளால் எடுக்கும்போதும் ‘கடன் சுமை கரைந்து போக வேண்டும் பணப்பிரச்சனை தீர வேண்டும்.’ இவ்வாறாக மனதார பிரார்த்தனை செய்துகொண்டு, அந்த மஞ்சள் துணியில் உப்பை வைத்து, ஒரு முடிச்சுப் போட்டு கட்டி இந்த முடிச்சை மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் வைத்து விடவேண்டும். அடுத்த வாரம் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை வரை அந்த கல்லுப்பு அப்படியே உங்கள் வீட்டு பூஜையறையில் இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்த வாரம் வரக்கூடிய செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில், அதாவது உங்களால் முடிந்தால் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள், அப்படி இல்லை என்றால் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் பூஜை அறையில் இருக்கக்கூடிய கல் உப்பை எடுத்து சுத்தமான தண்ணீரில் போட்டு கரைக்க வேண்டும்.

salt-uppu

குறிப்பாக மஞ்சள் துணியில் கட்டி இருக்கும் கல் உப்பை உங்களுடைய உள்ளங்கைகளால் எடுத்து மூன்று முறை தண்ணீரில் போட்டு உங்கள் கடன் கரைய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே கரையுங்கள். உப்பை கரைத்து இந்த தண்ணீரை கால்படாத மண் பாங்கான இடத்தில் போட்டு விடுங்கள். சீக்கிரமே எவ்வளவு பெரிய கடனும் தண்ணீரில் கரைத்த உப்பு போல கரைந்து போகும். அதே சமயம் உங்களுக்கு இருக்கக்கூடிய பண பிரச்சனைகளுக்கு நிரந்தரமாக நல்ல தீர்வை அந்த ஆண்டவன் காட்டிக் கொடுப்பான் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -