ஆபத்து இல்லாத அழகான அழகை பெற 5 குறிப்புகள். தினமும் இரவு 5 நிமிடம் இதற்காக ஒதுக்கினால், 5 மாதத்தில், 5 வயது உங்களுக்கு குறைந்துவிடும்.

face2
- Advertisement -

பின் செல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி உங்களுடைய அழகை இன்னும் மெருகேற்றி கொள்ளலாம். இதன் மூலம் எந்த ஒரு பக்க விளைவுகள் வந்துவிடுமோ என்ற எந்த பயமும் இருக்காது. இயற்கையான பொருட்களை வைத்து நம்முடைய அழகை இன்னும் அழகு படுத்திக் கொள்ள சுலபமாக சில குறிப்புகள் இந்த பதிவில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அழகு தேவை, நிரந்தரமான அழகு தேவை என்பவர்கள் இந்த குறிப்புகளை தவறாமல் படிக்க வேண்டும்.

சந்தனம்: நாட்டு மருந்து கடைகளில் சந்தனகட்டை என்று கிடைக்கும். அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த சந்தனக்கட்டையை இழைப்பதற்கு ஒரு கல்லும் அவர்களே கொடுப்பார்கள். சுத்தமான இந்த சந்தனக் கட்டையில் தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் ஊற்றி நன்றாக இழைத்து முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். 5 நிமிடத்தில் அது அப்படியே காய்ந்துவிடும்.

- Advertisement -

இரவு முழுவதும் இது உங்களுடைய முகத்தில் அப்படியே இருக்கலாம். மறுநாள் காலை முகம் கழுவி விடவேண்டும். இப்படி செய்து வந்தால் முகப்பரு கரும்புள்ளி முகத்தில் இருக்கும் கருமை படிப்படியாக குறையத் தொடங்கிவிடும். முகம் பிரகாசமாகும்.

ஜாதிக்காய்: முகத்தில் நிறையபேருக்கு தழும்புகள் கரும்புள்ளிகள் அப்படியே இருக்கும். அது சரும அழகை பாதிக்கக்கூடிய வகையில் இருக்கும். ஒரு சிறிய கல்லில், கொஞ்சமாக ரோஸ் வாட்டர் விட்டு, இந்த ஜாதிக் காயை நன்றாக குழைத்து அந்தப் பேஸ்டை கரும்புள்ளிகள் மேல் வைத்தால் கூடிய விரைவில் தழும்புகள் கண்ணுக்கு தெரியாமல் மறையும்.

- Advertisement -

பாதாம்: சிலபேருக்கு சருமம் மிகவும் வறட்சியாக இருக்கும். முகத்தில் வறட்சியின் மூலம் வெள்ளை வெள்ளையாக திட்டுகள் தெரிய தொடங்கும். ஒரே ஒரு பாதாமை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய கல்லில் கொஞ்சமாக பால் ஊற்றி, இந்த பாதாமை நன்றாக உரசி பேஸ்ட் போல தயார் செய்து இந்த பேஸ்டை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து லேசாக ஸ்கரப் செய்து முகத்தை கழுவி விட்டால், வறட்சித் தன்மை படிப்படியாக குறையும். சிறிய குழந்தைகளுக்கு கூட இந்த பேஸ்ட்டை முகத்தில் போட்டு லேசாக ஸ்கரப் செய்து கழுவி விடலாம். தவறு கிடையாது.

கடுக்காய்: முகத்தில் சிறிய சிறிய துவாரங்கள் இருப்பவர்களுக்கு இது ஒரு பெஸ்ட் ட்ரீட்மென்ட். தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு இந்த கடுக்காயில் கொஞ்சமாக ரோஸ் வாட்டர் ஊற்றி நன்றாக இழைத்து பேஸ்ட் தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை உங்களுடைய முகத்தில் அப்ளை செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விட வேண்டும். மறுநாள் காலை முகத்தை கழுவி விடவேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தாலே பிக்மெண்டேஷன் ஓபன் போர்ஸ் இரண்டுக்குமே நல்ல தீர்வு கிடைக்கும்.

- Advertisement -