இந்த எண்ணெயை தடவினால் எலிவால் போல இருக்கும் முடியும், சீக்கிரத்தில் குதிரை வால் போல மாறிவிடும். வளராத தலையில் கூட, முடியை வளர வைக்கும் சூப்பர் எண்ணெய்.

hair4
- Advertisement -

என்னுடைய முடி எலிவால் போல ரொம்பவும் மெலிசாக இருக்கின்றது. அதை கொஞ்சம் அடர்த்தியாக குதிரைவால் போல சீக்கிரத்தில் மாற்ற வேண்டும் என்றால் இந்த எண்ணெயை தலையில் தடவி பார்கலாம். முடியை சீக்கிரத்தில் அடர்த்தியாக வளர்க்க காசு கொடுத்து வாங்கக்கூடிய எத்தனையோ எண்ணெய்கள் கடைகளில் கிடைக்கின்றது. ஒரு சிலருக்கு அதில் நல்ல பலன் கிடைக்கும். ஒரு சிலருக்கு பலன் கிடைக்காது. அது அவரவர் தலை வாகுவை பொறுத்தது. எல்லா விதமான முடி பிரச்சனைக்கும் தீர்வை கொடுக்கும் மலிவான சத்து நிறைந்த ஒரு எண்ணெயை நம் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ள போகின்றது.

இந்த எண்ணெயை தயார் செய்ய மரச்செக்கு தேங்காய் எண்ணெய் 500ml, நெல்லிமுள்ளி – 2 டேபிள் ஸ்பூன், முருங்கைக்கீரை பொடி – 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம் – 1 ஸ்பூன் தேவைப்படும். ஒரு சிறிய கிண்ணத்தில் தயாராக எடுத்து வைத்திருக்கும் 3 பொருட்களையும் போட்டு தேங்காய் எண்ணெயை ஊற்றி ஒரு முறை கலந்து கொள்ளுங்கள். இதை டபுள் பாய்லிங் மெத்தடில் சூடு செய்ய வேண்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து, நாம் தயார் செய்து வைத்திருக்கும் எண்ணெயை கிண்ணத்தை சுடு தண்ணீரின் மேல் வைத்து, 15 நிமிடங்கள் போல நன்றாக சூடு செய்தால், நாம் சேர்த்திருக்கக் கூடிய பொருட்களின் சத்து அனைத்தும் அந்த எண்ணெயில் இறங்கி விடும். அதன் பின்பு எண்ணெயை நன்றாக ஆற வைத்து ஒரு காட்டன் துணியில் வடிகட்டி பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்தால் 6 மாதங்கள் வரை கெட்டுப்போகாது.

நீங்கள் வசிக்கக்கூடிய ஊரில் நல்ல வெயில் அடிக்கும் என்றால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த எண்ணெயை வெயிலில் வைத்து சூடு செய்து கூட வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளலாம். அடுப்பில் வைத்து சூடு செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வெயில் இல்லாதவர்கள் டபுள் பாய்லிங் மெத்தடில் சூடு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த எண்ணெயை எப்போதும் போல தினம் தோறும் உங்களுடைய தலையில் மயிர் கால்களில் படும்படி தடவி வந்தாலும் முடி வளர்ச்சி அதிகரிக்கும். முடி உதிர்வு குறையும். அதேசமயம் இளநரை வருவதை தள்ளி போடுவதற்கு இதில் நெல்லிமுள்ளியை சேர்த்திருக்கின்றோம். அதனால் வெள்ளை முடி பற்றிய கவலை உங்களுக்கு கிடையாது.

தினமும் உங்களால் தலைக்கு எண்ணெய் வைக்க முடியவில்லை என்றால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள் தலைக்கு குளிப்பதற்கு முன்பாக இந்த எண்ணெயை தலை முழுவதும் மயிர்கால்களில் படும்படி நன்றாக வைத்து மசாஜ் செய்து விட்டு இரண்டு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்துக் கொள்ளலாம்.

முந்தைய நாள் இரவே இந்த எண்ணெயை தலையில் வைத்துக்கொண்டு மறுநாள் காலை தலைக்கு குளித்தாலும் எந்த பிரச்சனையும் இருக்காது. முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து முடியை அடர்த்தியாக வளர செய்யக்கூடிய வேலையை படிப்படியாக இந்த எண்ணெய் செய்ய தொடங்கிவிடும். ஒரு சில நாட்களில் முடி வளர்ச்சியில் உங்களுக்கே நல்ல வித்தியாசம் தெரியும். இந்த ரெமிடி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -