தினமும் கால் பாதங்களை இப்படி கழுவினால், உங்களை பிடித்த பீடை, தரித்திரம் கஷ்டம் அனைத்துமே உங்களை விட்டு ஓடிவிடும். அதிர்ஷ்டம் அடித்து கொண்டு உங்களை தேடி ஓடோடி வரும்.

athirshta-devi
- Advertisement -

இந்த பூமியில் வாழக்கூடிய மனிதர்களில் இரண்டு ரகம் உண்டு. ஒரு சிலர் எந்த முயற்சியையும் செய்யவே மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டம் பதவி பெயர் புகழ் இவை அனைத்தும் தேடிவரும். அதிர்ஷ்ட காரர்களாக இருப்பார்கள். சாதரனமாக எந்த வேலையை அவர்கள் தொடங்கினாலும், அதன் மூலம் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இவர்களை யோகக்காரர்கள் என்று நாம் சொல்லுவோம். இவர்கள் ஒரு ரகம். இன்னும் சில பேர் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு துன்பப்பட்டு துயரப்பட்டு நிறைய முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால் அவர்களுக்கு வெற்றி என்பதே கிடைக்காது. காரணம் அவர்களுடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பதே இருக்காது. யோகம் கெட்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இரண்டாவது ரகம்.

sky-sad-man

அதிர்ஷ்டம் இல்லாதவர்களாக நீங்கள் இருந்தால், உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் வெற்றியே இதுநாள் வரை கண்டதில்லை என்றால் உங்களுக்காக சொல்லப்பட்டுள்ள ஒரு சுலபமான பரிகாரம் தான் இது. உங்களை பிடித்த கஷ்டங்கள் அனைத்தும் தீருவதற்கு நீங்கள் செய்யவேண்டிய தாந்திரிக ரீதியான ஒரு பரிகாரத்தை பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

ஒருவருக்கு கெட்ட நேரம் தொடங்குகிறது என்றால் அது கால் பாதங்களின் வழியாகத்தான் தொடங்கும் என்று சொல்லுவார்கள். காலில் ஆரம்பித்த கெடுதல் படிப்படியாக உயர்ந்து நம்முடைய தலையில் ஏறி உட்கார்ந்து கொள்ளும். அதன்பின்பு நம்மை பிடித்து ஆட்டி படைக்கும். ஆக நமக்கு கால் பாதங்களின் மூலம் வரக்கூடிய துன்பங்களை, கால் பாதங்களில் இருந்து கழட்டி விட வேண்டும். இப்படி செய்தால், உங்கள் துரதிஷ்டம் உங்கள் கால் பாதங்களில் இருந்தே உங்களை விட்டு வெளியே சென்றுவிடும்.

sucess-man

கால் பாதங்களை சுத்தம் செய்ய நமக்கு தேவையான பொருட்கள் 2. பசும் சாணம் சிறிதளவு, சாதம் வடித்த கஞ்சியும் தேவை. சாதம் வடித்த கஞ்சியில் கொஞ்சமாக பசும் சாணம் போட்டு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீரையும் ஊற்றி கரைத்துக் கொள்ளலாம். இந்த கரைசலை உங்களுடைய காலில் ஊற்றி கழுவ வேண்டும். ஒரு கைப்பிடி அளவு பசும் சாணம் கிடைத்தால் கூட போதும்.

- Advertisement -

முடிந்தால் ஒரு அகலமான பக்கெட்டில் இந்தக் கரைசலை ஊற்றி உங்களுடைய கால் பாதங்களிலை அதில் ஒரு ஐந்து நிமிடங்கள் போல ஊறவைத்துக் கொள்ளவும். அதன் பின்பு சாதாரண தண்ணீரில் பாதங்களை கழுவி விட்டால் உங்களை பிடித்த பீடை அனைத்தும் உங்கள் பாதங்களின் வழியாக வெளியே சென்று விடும் என்று சொல்லப்பட்டுள்ளது.

நிறையபேருக்கு தொழிலில் நஷ்டம். வருமானம் இருக்காது. கடன் பிரச்சனை, புதிய முயற்சிகளில் தோல்வி, திருமணம் நடக்காது. ஏதோ பிடித்த ஆட்டிப்படைக்கும். ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். இப்படி  கஷ்டங்கள் உங்களுக்கு இருந்தால் உங்களுடைய கால் பாதங்களை தொடர்ந்து 27 நாட்கள் இந்த முறையில் கவிதை பாருங்கள். நிச்சயமாக உங்களை பிடித்த பீடை உங்களை விட்டு ஓடிவிடும். பிறகு எல்லாம் நன்மையே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -