ஐப்பசி மாத ராசி பலன் 2023 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

aipasi maatha palan
- Advertisement -

சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் மாதமே ஐப்பசி மாதம் என்று கூறப்படுகிறது. ஐப்பசி மாத அமாவாசை அன்று தீபாவளியும் ஐப்பசி மாத பௌர்ணமி அன்று அன்னாபிஷேகமும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி விரதமும் இந்த மாதத்தில் தான் அனுசரிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த ஐப்பசி மாதத்தில் 12 ராசிகளுக்குரிய பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய மாதமாக திகழப் போகிறது. ஒரு பக்கம் அதிகாரமும் ஆளுமையும் இருந்தாலும் மறுபக்கம் பொறுமையுடன் செயலாற்றினால் காரியத்தில் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இதுவரை இருந்த எதிரிகள் செய்த சூழ்ச்சியை முறியடிப்பீர்கள். சுப காரியங்கள் நடைபெறுவதில் சில தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குழந்தை பாக்கியத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

- Advertisement -

புதிதாக முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது நன்றாக யோசித்து அதில் ஈடுபட வேண்டும். பண வரவை பொருத்தவரை எதிர் பார்த்ததைவிட அதிகமாகவே இருக்கும். அதனால் புதிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் நபர்களை அனுசரித்து விட்டு கொடுத்து செல்வதன் மூலம் குடும்பப் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

வேலையை பொருத்தவரை பணி சுமை சற்று அதிகமாகவே இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வேலையில் அதிக கவனம் செலுத்தி செய்வதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை புத்திசாலித்தனமாக செயல்பட்டு தொழிலில் இருந்து வந்த போட்டிகளை சமாளித்து விடுவீர்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக திகழப்போகிறது. தொழில் வியாபாரம் விறுவிறுப்பாக தான் இருக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சூரிய பகவானையும் முருகப்பெருமானையும் வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசி காரர்களுக்கு இந்த மாதம் நிதானத்துடன் செயல்பட வேண்டிய மாதமாக திகழப் போகிறது. தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிப்பீர்கள். பொருள் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. உடல் ஆரோக்கியம் மேன்மையடையும். பயணங்களின் போது கவனமாக இருக்க வேண்டும். எந்த விஷயத்திலும் கவனத்துடனும் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி உற்சாகமும் காணப்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உறவினர்களால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமையிடனும் அன்போடும் வாழ்வார்கள். பொருள் சேர்க்கை ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எந்த செயலை செய்வதாக இருந்தாலும் பெரியவர்களின் அறிவுரைப்படி கேட்டு நடந்து கொண்டால் அந்த செயலில் வெற்றியை காண முடியும்.

- Advertisement -

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே தென்படுகிறது. வேலை சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் அதை சக ஊழியர்களின் ஒத்துழைப்போடு வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரை பெரிய மனிதர்களின் சந்திப்பால் வியாபாரத்திற்கு தேவையான உதவிகளை பெரும் வாய்ப்புகள் உள்ளது. வெளியூர் பயணங்கள் மூலம் தொழில் துறை முன்னேற்றமடையும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தை விரிவாக்கும் எண்ணம் இருப்பவர்கள் இந்த மாதத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு திருவண்ணாமலை அண்ணாமலையாரை வணங்க வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சேமிப்பு உயரக்கூடிய மாதமாக திகழப் போகிறது. எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருக்கும் நபர்களுடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். அப்படி சென்றால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமான வாழ்க்கையாக அமையும்.

திடீர் அதிர்ஷ்டம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். பொருளாதார வரவு அதிகமாகவே தென்படும். அதனால் சேமிப்புகள் உயர்வதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. சிலருக்கு புதிய வீடு வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருப்பதால் கவனத்துடன் இருப்பது நன்மை தரும்.

வேலையை பொருத்தவரை அதிக வேலை சுமை ஏற்படும். அதனால் உடலளவிலும் மனதளவிலும் சோர்வு உண்டாகும். சிலருக்கு திடீரென வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இடமாற்றம் அல்லது பணி மாற்றம் ஏற்பட கூட வாய்ப்புகள் இருக்கிறது. அதே சமயம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை நல்ல முன்னேற்றமான சூழ்நிலையை தென்படும். உழைப்பிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஸ்ரீ ராமபிரானை வழிபட வேண்டும். மேலும் காளமேகப் பெருமாளை பெருமாளையும் வழிபட வேண்டும்.

கடகம்

கடக ராசி காரர்களுக்கு இந்த மாதம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய மாதமாக திகழப் போகிறது. உடல் நலனில் கவனம் தேவை. நீண்ட நாள் கனவு நினைவாவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் அல்லது தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களை கையாளும் பொழுது எச்சரிக்கை தேவை. விபத்துகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது.
சிலருக்கு போலீஸ் ஸ்டேஷன் செல்லக்கூடிய வாய்ப்புகளும் நேரிடும். எதிர்பார்த்த அளவு பண வரவு கிடைக்கும். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் தன்னம்பிக்கையுடன் சாதிக்க வேண்டும் என்ற மன உறுதியோடு செயல்படுவீர்கள். பழைய வாகனங்களை மாற்றுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும்.

வேலையை பொருத்தவரை இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் மாறி சுமுகமான சூழ்நிலை ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தை பொருத்தவரை லாபம் சுமாராகத்தான் இருக்கும். வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தை விரிவாக்க நினைப்பவர்களுக்கு தடைகளும் தாமதங்களும் ஏற்படலாம். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு தஞ்சை பிரகதீஸ்வரரை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எதிரிகளை விரட்டும் மாதமாக திகழப் போகிறது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை தைரியமாக சமாளித்து வெளிவருவீர்கள். வீட்டிற்கும் வீட்டில் இருப்பவர்களுக்கும் தேவையான அனைத்து விஷயங்களையும் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். சிலருக்கு திருமணங்கள் தள்ளி போவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. உற்றார் உறவினரிடம் கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்துவதை தவிர்த்து விடுவது நன்மை தரும். புதிதாக எடுக்கும் முயற்சிகளில் எளிதாக வெற்றி அடைவீர்கள். எதிர்பார்த்த அளவு பண வரவு கிடைக்கும். அதே சமயம் எதிர்பாராத அதிர்ஷ்டமும் தேடி வரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நன்மை தரும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே தென்படும். வேலையில் அதிக அளவு கவனம் செலுத்தி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். அதனால் உயர் அதிகாரிகளின் அங்கீகாரத்தை பெறுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே தென்படுகிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாகவே கிடைக்கும். தொழிலை விரிவாக்குவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாகவே நடைபெறும். என்றோ செய்த முதலீட்டிற்கு இந்த மாதத்தில் பலன் உங்களை தேடி வரும். இருப்பினும் வியாபாரத்தில் கணக்கு எழுதும் பொழுது கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஞாயிற்றுக்கிழமை அன்று காளஹஸ்திநாதரை வழிபட்டு வர வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் நிறைந்த மாதமாக திகழப்போகிறது. சமுதாயத்தில் செல்வாக்கு உயர்வதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தேவையான உதவிகள் உங்களை தேடி வரும். அறிமுகம் இல்லாத நபர்களுடன் பேச்சை குறைத்துக் கொள்வது நன்மை தரும். வருமானம் அதிகரித்து. வாங்கிய கடனை அடைத்து விடுவீர்கள். மேலும் புதிதாக வீடு மனை வாங்கும் யோகமும் இருக்கிறது. கோபத்தை தவித்தால் பல நல்ல வாய்ப்புகள் உங்களை நழுவி செல்வதையும் தவிர்க்க முடியும்.

குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால், பொறுமையை கடைப்பிடித்தால் நன்மை தரும் எந்த செயலையும் போராடி தான் முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மனம் தளராமல் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றி அடையலாம். கணவன் மனைவிக்குள் அன்னோனியம் அதிகரிக்கும். கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனமாக செயல்பட வேண்டும். கடன் வாங்குவதை தவிர்த்துக் கொள்வது மிகவும் நன்மை தரும்.

வேலையை பொருத்தவரை அரசாங்க வேலை பார்ப்பவர்களுக்கு இடம் மாற்றம் ஏற்படுவதற்கும் பதவி உயர்வு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. பணி சுமை சற்று அதிகமாகவே தான் இருக்கும். வேலையை சிரமப்பட்டு முடிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் தான் உங்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தை பொருத்தவரை சிக்கல்களை சாமர்த்தேமாக சமாளித்து விடுவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. உழைப்பிற்கு ஏற்ற ஆதாயம் என்ற பெயரில் தான் லாபமும் இருக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு மாரியம்மனை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சுயமரியாதை அதிகரிக்கும் மாதமாக திகழப்போகிறது. எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதனால் சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகமும் ஏற்படும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் தேடி வருவதற்குரிய வாய்ப்புகள் உண்டு. புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தடைப்பட்ட வேலையை செய்து முடிக்கவும் முதலீடு செய்யவும் முயல்வீர்கள்.

உடல் நலனில் அக்கறை காட்டுவது நன்மை தரும். வங்கி கடனை அடைக்க கடுமையாக முயற்சிப்பீர்கள். இதுவரை விற்காமல் இருந்து வந்த இடம் விற்று பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். எதிர்பார்த்த பண வரவு கிடைப்பது சற்று காலதாமதம் ஆகும். கணவன் மனைவிக்கு இடையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். நண்பர்களால் நல்ல திருப்பம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை சாமர்த்தியமாக செய்து முடிப்பதன் மூலம் பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. சிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டு. தொழிலை பொருத்தவரை லாபம் படிப்படியாக உயர ஆரம்பிக்கும். முன் பின் தெரியாதவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதை தவிர்த்து விட வேண்டும். பங்குகள் வாங்குவதன் மூலம் ஆதாயம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் இருக்கிறது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நாராயண பெருமாளை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உற்சாகம் நிறைந்த மாதமாக திகழப் போகிறது. இந்த மாதத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப செலவுகளும் அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான வழிகள் பிறக்கும். பொருள் சேர்க்கை ஏற்படும். பிரிந்திருந்த கணவன் மனைவிகள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புகளும் சிலருக்கு உண்டு. புதிதாக வீடு வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும்.

திருமண முயற்சிகளில் சாதகமான பேச்சுவார்த்தை ஏற்படும். வாராக்கடன் என்று இருந்த கடன் தொகையும் திரும்ப வருவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. கடன் சுமை குறையும் வாய்ப்புகளும் இதனால் உண்டாகும். அதிகமான வருமானம் கிடைக்கும் என்று ஆசைப்பட்டு தவறான காரியங்களை செய்வதை தவிர்த்து விட வேண்டும். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் பிறரிடம் ஆலோசனை கேட்பதோடு மட்டுமல்லாமல் சுய புத்தியையும் உபயோகப்படுத்தி சொந்தமாக முடிவெடுக்க வேண்டும்.

வேலையை பொருத்தவரை இடமாற்றம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அரசாங்க பணியில் இருப்பவர்கள் வேலையை கவனமாக செய்ய வேண்டும். வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உயர் அதிகாரிகளுடன் பழகும் பொழுது நிதானத்துடனும் பொறுமையுடன் பழக வேண்டும். தொழிலைப் பொருத்தவரை புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் அதற்குரிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். லாபம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. அதனால் எதிர்காலத்தை கருதி முதலீடு சேமிப்பும் செய்ய ஆர்வம் காட்டுவீர்கள். இருப்பினும் சிலருக்கு எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று கடினமாகவே இருக்கும். உழைப்பிற்கேற்ற ஆதாயமே கிடைக்கும். மறைமுக எதிரிகளால் சில பிரச்சனைகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டு. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றிகளை அள்ளி குவிக்கும் மாதமாக திகழப்போகிறது. தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகளை குவிப்பீர்கள். அதனால் பணவரவு என்பது அதிகரிக்கும். பிறருக்கு பண உதவி செய்யக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும். வீட்டிற்கு தேவையான அனைத்து விதமான பொருள் சேர்க்கையும் உண்டாகும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே தென்படும்.

எந்த செயலை செய்தாலும் அதில் நல்ல ஆதாயங்களை பெறுவீர்கள். இழந்த மதிப்பையும் மரியாதையும் திரும்ப கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் சுமூகமாக நடைபெறும். சிலருக்கு சொந்தமாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த தொல்லைகள் அனைத்தும் நீங்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் தொல்லை நீங்கும் வாய்ப்புகளும் உண்டு. தொலைதூரப் பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நன்மை தரும்.

வேலையை பொருத்தவரை உங்கள் திறமைக்கு ஏற்ற சலுகைகள் உங்களைத் தேடி வரும். இதுவரை தடைபட்டிருந்த பதவி உயர்வு ஊதிய உயர்வு இடமாற்றம் போன்றவை கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வியாபாரத்தை பொருத்தவரை வருமானம் பெருகும். தொழிலில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார ரீதியாக வெளிநாடு செல்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தை விரிவாக்க எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு தக்ஷிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக திகழப்போகிறது. இடத்திற்கு ஏற்றவாறு தக்க சமயத்தில் சரியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். இதுவரை தடைகளும் தடங்களும் ஆக இருந்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக வெற்றிகரமாக நடைபெறும். பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு திருப்திகரமாகவே இருக்கும். எனினும் திடீர் செலவு ஏற்பட்டு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். எந்த விஷயத்திலும் கவனமாக செயல்பட வேண்டும். பிறரின் விஷயங்களில் மூக்கை நுழைத்து தலையிடுவதை தவிர்த்து விட வேண்டும்.

வாழ்க்கைத் தரம் உயர தேவைப்படும் வாய்ப்புகள் வீடு தேடி வரும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான அனைத்து விதமான வசதி வாய்ப்புகளையும் செய்து தருவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி அன்பும் அரவணைப்பும் அதிகரிக்கும். திருமணத்தில் சில தடைகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. சிலருக்கு தடைப்பட்ட திருமணங்கள் கைகூடும். பயணங்களின் பொழுது கவனமாக இருக்க வேண்டும். காணாமல் போன பொருட்கள் திரும்ப கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

வேலையை பொருத்தவரை முன்னேற்றமான நிலையே நிலவும். பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. உயர் அதிகாரிகளுடன் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையேல் சிலருக்கு தங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்வதற்கு கடுமையாக போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை பிரகாசமான சூழ்நிலை ஏற்படும். எதிர்பார்த்ததை விட அதிகமான லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த எதிர்ப்புகள் அனைத்தையும் முறியடிப்பீர்கள். இருப்பினும் புதிய முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சனீஸ்வர பகவானை சனிக்கிழமை தோறும் வழிபட வேண்டும். இயன்றவர்கள் திருநள்ளாறு சென்று வழிபடலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் காரிய வெற்றி பெரும் மாதமாக திகழப் போகிறது. புதிய வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதற்காக தேவையற்ற கடன்களை வாங்குவதை தவிர்த்து விட வேண்டும். மேலும் வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் அவசியம் வேண்டும். வெறுப்பாக எந்த காரியத்தையும் செய்யக்கூடாது. அதையும் மீறி செய்தால் அதனால் பிரச்சனைகளே உண்டாகும். பயணங்களால் நல்ல பலன் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் நலனில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு அகலும். பழைய கடன்களை அடைப்பதன் மூலம் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும் என்றாலும் உற்சாகமாக செயல்பட்டு முடித்து விடுவீர்கள். அதனால் மேல் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகளும் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை ஏற்ற இறக்கம் நிறைந்த தாகவே இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மறைமுகப் போட்டியாளர்களை எதிர்த்து சமாளித்து வெற்றி அடைவீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு யோக நரசிம்மரை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் செல்வாக்கு உயரக்கூடிய மாதமாக திகழப்போகிறது. எந்த காரியத்தை செய்வதாக இருந்தாலும் ஒரு தடவைக்கு பலமுறை யோசித்து செய்தால் நன்மை உண்டாகும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சற்று கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். நிதானமாக செயல்பட்டால் குடும்ப பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்த்து விடலாம். இயல்பான திறமைகள் வெளியே வருவதற்கு இந்த காலம் ஒரு சிறந்த காலமாக திகழப்போகிறது.

செல்வாக்கு அதிகரிக்கும். வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளும் பெருகும். உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். எதிரிகள் பணிந்து போவார்கள். எதிர்பாராத பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக கையாள வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சிகள் உண்டாகும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். உடன் பணி புரிபவர்களின் உதவியால் எளிதில் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் சிறிது தாமதத்திற்கு பிறகு கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை அதிக முதலீடு செய்வதை தவிர்த்து விட வேண்டும். மேலும் பற்று வரவு கணக்கில் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு கள்ளழகரை வழிபட வேண்டும்.

- Advertisement -