இந்த இரண்டு பொருட்களை மட்டும் உங்கள் வீட்டு பூஜையறையில் தவறாமல் வைத்துவிடுங்கள். இதனை செய்வதால் தீய சக்திகள் விலகி பணவரவு அதிகரிக்கும்

solzhi
- Advertisement -

அனைவரும் வீடுகளில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை தினம் அன்று தவறாமல் பூஜை செய்து வருகின்றோம். ஒவ்வொரு வீட்டிலும் அவர்களின் வழக்கத்தின் படி ஒவ்வொரு விதத்தில் பூஜை செய்வார்கள். அவ்வாறு வீட்டின் பூஜை அறையை அமைந்திருப்பதிலும் பலவித வித்தியாசங்கள் இருக்கும். பூஜை அறை வைப்பதற்கென்று எவ்வாறு தனிப்பட்ட அமைப்பு இருக்கிறதோ அதேபோல் பூஜை அறையில் வைப்பதர்கென்று சில முக்கியமான பொருட்களும் இருக்கின்றன. இவ்வாறான பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபடுவதன் மூலம் மகாலட்சுமி தேவியின் அருளைப் பெற முடியும். அவ்வாறு நமது வீட்டுப் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டிய முக்கியமான இரண்டு பொருட்களை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

poojai arai

பூஜை அறை கிழக்கு நோக்கித்தான் இருக்க வேண்டும். தீபத்தையும் கிழக்கு முகமாகத்தான் ஏற்ற வேண்டும். இவ்வாறு பூஜை அறைக்கென்று பல வரைமுறைகள் இருக்கின்றன. இவற்றை சரியாக செய்தால் மட்டுமே அதற்கான பலன்கள் கிடைக்கின்றன. எனவே தான் அனைவரும் இன்று வரையில் நமது முன்னோர்கள் செய்து வந்த இவ்வாறான முறைகளையே பின்பற்றி வருகின்றோம். அவ்வாறு வீட்டின் பூஜை அறையில் சில முக்கியமான விஷயங்களையம் கடைப்பிடிக்க வேண்டும்.

- Advertisement -

ஒரு சில பொருட்களுக்கு நேர் மறை சக்திகளை தன்னிடம் ஈர்க்கும் திறன் இருக்கும். அவ்வாறு அனைவரது வீட்டிலும் பயன்படுத்தக்கூடிய கண்ணாடியை அது உடைந்து விட்டது என்றால் அதனை வீட்டில் வைக்காமல் உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறுவார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் கண்ணாடி எப்பொழுதும் தன்னிடம் வரும் எந்தவித சக்தியாக இருந்தாலும் அதனை பல மடங்கு பிரதிபலிக்கக் கூடியது. அவை விரிசல் விட்டிருந்தால் எதிர்மறை சக்திகளை மட்டுமே உட்கிரகிக்க முடியும். அந்த எதிர்மறை சக்திகள் பல மடங்காக நமது வீட்டில் பிரதிபலிக்க ஆரம்பிக்கும். இதுவே உடைந்த கண்ணாடியை பயன்படுத்த கூடாது என்பதற்கான காரணம் ஆகும்.

mirror

இவ்வாறு அற்புத சக்தி நிறைந்த ஒரு சிறிய துண்டு கண்ணாடியை எப்பொழுதும் பூஜை அறையில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு வீட்டின் பூஜை அறையிலும் நேர்மறை சக்திகள் அதிகமாக இருக்கிறது. இந்த நேர் மறை சக்திகளை கண்ணாடி உட்கிரகித்துக் கொண்டு அதனை நமது வீடு முழுவதும் பிரதிபலிக்கும். இதனால் நமது வீட்டில் இருக்கும் தீய சக்திகள் அனைத்தும் வெளியேறி விடுகின்றன.

- Advertisement -

அவ்வாறு கடலில் இருந்து எடுக்கப்படும் சோழிகளை இந்தக் கண்ணாடியின் முன் வைக்க வேண்டும். இந்த சோழிகள் கடலில் இருந்து கிடைப்பதால் மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மகாலட்சுமி தேவி பாற்கடலை கடையும் பொழுது எழுந்தருளியவராவார். எனவேதான் கடலில் இருந்து கிடைக்கும் எந்த ஒரு பொருட் களாக இருந்தாலும் அவை மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு சோழிகளை ஐந்து எண்ணிக்கையில் எடுத்து கொண்டு அதனை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் வைத்து அவற்றை பூஜை அறையில் வைத்து உள்ள கண்ணாடியின் முன்பு வைக்க வேண்டும். இந்த கோழிகளின் பிம்பம் கண்ணாடியில் பிரதிபலிக்குமாறு இருக்க வேண்டும்.

sozhi

இவ்வாறு இந்த இரண்டு பொருட்களையும் பூஜை அறையில் வைத்து நெய்தீபம் ஏற்றி 48 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு பூஜை செய்யும் பொழுது நாம் சொல்ல வேண்டிய ஒரு மந்திரம் “ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே போற்றி” இவ்வாறு 108 முறை சொல்ல வேண்டும். இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்த பின்னர் இந்த சோழிகளை நமது வீட்டில் உள்ள அனைவரும் அவர்களின் பணம் வைக்கும் பர்ஸில் ஒவ்வொன்றாக வைத்துக்கொள்ளவேண்டும்.

deepam2

மீதமுள்ள சோழிகளை வீட்டில் பணம் வைக்கும் டப்பா அல்லது அலமாரியில் வைத்து விட வேண்டும். இவ்வாறு பூஜையில் வைக்கப்படும் இந்த சோழிகளில் மகாலட்சுமி தேவியே எழுந்தருளுவதாக நம்பப்படுகிறது. இந்த சோழிகளை பணம் வைக்கும் இடத்தில் வைப்பதன் மூலம் அந்த பணம் பல மடங்காக பெருகுகிறது.

- Advertisement -