அமாவாசை எலுமிச்சை பரிகாரம்

lemon
- Advertisement -

தேவலோக கனி, தெய்வீக கனி என்று சொல்லக்கூடிய பழம் இந்த எலுமிச்சம் பழம். இந்த எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக்கொண்டு நாம் என்ன நினைக்கின்றோமோ, அது அப்படியே நடக்கும். ஏனென்றால் இந்த எலுமிச்சை பழத்திற்கு உயிர் இருப்பதாக ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. இன்று அமாவாசை திதி.

உங்கள் மனதில் இருக்கும் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள, எலுமிச்சம் பழத்தை வைத்து இன்றைய தினம் செய்ய வேண்டிய தாந்திரீக ரீதியான ஒரு பரிகாரத்தை பற்றி இப்போது தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

அமாவாசையில் எலுமிச்சை பழ பரிகாரம்

7-5-2024 செவ்வாய்க்கிழமை இன்று காலை 11:00 மணி அளவில் அம்மாவாசை திதியானது பிறந்திருக்கின்றது. இன்று இரவு 11:00 மணிக்கு முன்பாக இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம். அது உங்களுடைய விருப்பம். முடிந்தவர்கள் இன்று மாலை 6:00 மணிக்கு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.

மாலை 6:00 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. எந்த கரும்புள்ளிகளும் இல்லாத ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த எலுமிச்சம் பழத்துக்கு மேலே 786 என்ற எண்ணை ஒரு பக்கம் எழுதி விடுங்கள். இன்னொரு பக்கம் உங்களுடைய தேவையை அந்த எலுமிச்சம் பழத்தில் எழுத வேண்டும். எலுமிச்சம் பழத்தில் பக்கம் பக்கமாக எழுத முடியாது.

- Advertisement -

தேவையை வேண்டுதலை சுருக்கி சின்ன வாக்கியத்தில் எழுதுங்கள். உதாரணத்திற்கு குடும்பத்தில் சந்தோஷம் தேவை, குடும்பம் சந்தோஷம், குடும்ப ஒற்றுமை, குழந்தை ஆரோக்கியம், இப்படி ஏதாவது உங்களுக்கு தேவையான விஷயங்களை எழுதலாம். அப்படி இல்லையா இப்போது எல்லோருக்கும் இருக்கக் கூடிய பிரச்சனை கடன் பிரச்சனை, கடன் குறைனும், இரண்டு லட்சம் பணம் தேவை, இப்படி என்ன வேணும் என்றாலும் உங்கள் விருப்பப்படி, அந்த எலுமிச்சம் பழத்தில் எழுதலாம்.

ஒரே ஒரு கோரிக்கையாக எழுதி விடுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் சாதாரண நீல நிற பேனா, ஸ்கெட்ச் எதில் வேண்டும் என்றாலும் எழுதலாம். இந்த எலுமிச்சம் பழத்தை வலது உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, கைகளை மூடிக்கொள்ளுங்கள். பூஜை அறையிலேயே 5 நிமிடம் அமர்ந்து உங்கள் கண்களை மூடி நீங்கள் எழுதிய அந்த கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.

- Advertisement -

கையில் எலுமிச்சம் பழத்தை வைத்துக்கொண்டு இந்த பரிகாரம் நடக்குமா? நடக்காதா? நாம் நினைத்தது நடக்குமா? நடக்காதா? என்று சந்தேகம் எல்லாம் படக்கூடாது. நான் நினைத்த நல்லது நடந்தே தீரும் என்று 100% உறுதியோடு இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இந்த எலுமிச்சம் பழத்தை ஒரு வெள்ளை பேப்பரில் வைத்து மடித்து பூஜை அறையில் குலதெய்வத்தின் திருவுருவப்படத்திற்கு முன்பாக வைக்கலாம் அல்லது ஏதாவது ஒரு இடத்தில் இந்த எலுமிச்சம்பழத்தை வைத்து விடுங்கள்.

நீங்கள் அதில் எழுதிய கோரிக்கை குறைந்தது மூன்று நாட்கள், அதிகபட்சம் ஐந்து நாட்கள், அதற்கும் மேலே சென்றால் ஏழு நாட்களுக்குள் பலிக்க நிறையவே வாய்ப்புகள் உள்ளது. அப்படி அந்த கோரிக்கை படிக்கவில்லை என்றாலும், அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுங்கள். ஏழு நாட்களுக்கு பிறகு அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து கால் படாத இடத்தில் தூரமாக போட்டு விடுங்கள். இவ்வளவுதான் பரிகாரம்.

இதையும் படிக்கலாமே: 10-05-2024 அட்சய திருதியையில் யோகம்பெரும் ராசிகள்.

அமாவாசை திதி, முன்னோர்களின் ஆசிர்வாதம், குலதெய்வத்தின் ஆசிர்வாதம், இந்த பிரபஞ்சம் முழுவதும் சேர்ந்தெடுக்கும் நேர்மறை ஆற்றல், உங்கள் நம்பிக்கை, எலுமிச்சம்பழம் பரிகாரம் எல்லாம் சேர்ந்து நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்லது செய்யும் எஞ இந்த தகவலுடன் ஆன்மீகம் சொல்லும் இந்த தாந்திரீக பரிகார பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -