அமாவாசை பவுர்ணமி அன்று இதை மட்டும் செய்தாலே போதும். வீட்டில் செல்வ கடாட்சம் ஓஹோவென உயர்ந்து கொண்டே செல்லும்.

amavasai
- Advertisement -

வீட்டில் குறையாத செல்வவளம் பெருகிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் நம்முடைய எல்லோரது ஆசையாகவும் இருக்கிறது. அள்ள அள்ள குறையாத செல்வ கடாட்சத்தை பெற, குறிப்பாக நம்முடைய வீட்டில் இந்த அமாவாசை பவுர்ணமி தினங்களில் செய்ய வேண்டிய சில ஆன்மீக ரீதியான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அமாவாசை தினத்தில் மறக்காமல் நாம் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்ய வேண்டும். அது என்ன விஷயம் தெரியுமா? இரண்டு கைகளிலும் சிவக்க சிவக்க மருதாணி இட்டுக்கொள்ளுங்கள் போதும்.

amavasai

வீட்டிலிருக்கும் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அமாவாசை தினத்தன்று கையில் மருதாணி இட்டுக் கொள்ள வேண்டும். அமாவாசைக்கு முன்தினம் பௌர்ணமிக்கு முன் தினம் கையில் மருதாணி இட்டுக் கொண்டாலும் சரிதான். அல்லது அமாவாசை தினத்தன்று பவுர்ணமி தினத்தன்று கையில் மருதாணி வைத்துக் கொள்வதும் நமக்கு நன்மையைத் தரக்கூடிய ஒரு விஷயமாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

கையில் மருதாணி இட்டுக் கொள்ளும் போது நம்முடைய மன குழப்பங்கள் தீரும்‌. அமாவாசை தினத்தில் சந்திரனின் ஆதிக்கம் சுத்தமாக இருக்காது. பௌர்ணமி தினங்களில் முழுநிலவு பிரகாசமாக இருக்கும். சந்திர பகவானால் கிரக நிலைகளில் ஏற்படக் கூடிய மாறுதலால் நமக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. மனது சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு காரகத்துவமாக சொல்லப்படுவது இந்த சந்திர பகவானை தான். ஆகவே மனதை தெளிவுபடுத்தக் கூடிய மருதாணியை உங்களுடைய கையிலும் இட்டுக் கொள்ள மறவாதீர்கள். எந்த சூழ்நிலையிலும் நாம் குழப்பமில்லாமல் தெளிவான மனதோடு இருக்கும்போது அந்த இடத்தில் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயமும் வெற்றியைத் தரும். வெற்றி நம் பக்கம் வந்து விட்டால், பணம் தானாக நம்மை தேடி வரும்.

maruthani2

அடுத்தபடியாக வீட்டில் பணப்பிரச்சனை, தொழில் செய்யும் இடத்தில் பணப்பிரச்சனை, கடன் பிரச்சினை என்று தவித்து வருபவர்களுக்கு ஒரு சுலபமான தீர்வு தாந்திரீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. மருதாணியில் வெறும் தண்ணீரை மட்டும் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். அந்த விழுதில் மஞ்சள் பிள்ளையார் போல ஒரு பிள்ளையாரை பிடித்து வெற்றிலையின் மேல் வைத்து, அந்த மருதாணி பிள்ளையாருக்கு முன்பாக ஒரு வெள்ளி நாணயத்தை வைத்து மனதார இறைவனை வழிபாடு செய்தால் உங்களுடைய பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சீக்கிரத்தில் ஒரு தீர்வு கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த மருதாணி பிடித்து வைத்து செய்யக்கூடிய பூஜையை வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம். பௌர்ணமி நாளில் செய்யலாம். அமாவாசை தினத்தில் செய்யலாம். உங்களுக்கு எந்த நாள் சவுகர்யமாக இருக்கிறதோ அந்தக் நாளை தேர்ந்தெடுத்து செய்யுங்கள்.

mehandhi1

தொழில் செய்யும் ஸ்தாபனங்களிலும் இந்த பூஜையை செய்து பயன்பெறலாம். வீட்டிலும் இந்த பூஜையை செய்து பயன்பெறலாம். அது அவரவர் விருப்பம் தான். நீங்கள் பிடித்து வைத்த மருதாணி பிள்ளையாரை மூன்று நாள் உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இருக்க வேண்டும். மூன்றாவது நாள் அந்த மருதாணியை எடுத்து தண்ணீரில் கரைத்து விட்டு அந்த தண்ணீரை மண் பாங்கான இடத்தில் ஊற்றி விடலாம். நல்லதே நடக்கும்.

- Advertisement -