அமாவாசை தோறும் இந்த ஒரு விஷயத்தை செய்து வந்தாலே போதும். மாதத்தில் 30 நாளும் உங்களை பிடித்த பீடை, கண்திருஷ்டி, தரித்திரம் அனைத்தும் உங்களை விட்டு நீங்கும்.

amavasai
- Advertisement -

இந்த கண் திருஷ்டிக்கு மட்டும் ஆயுசு முழுக்க நமக்காக நாம் சில பரிகாரங்களை செய்து கொண்டே இருக்க வேண்டும். கண் திருஷ்டிக்காக ஒரே ஒருமுறை பரிகாரத்தை செய்து விட்டு விட்டு விட்டால் அது போதாது. காரணம் கண்திருஷ்டி என்ற எதிர்மறை ஆற்றல் மீண்டும் மீண்டும் நம்மை துரத்திக் கொண்டே தான் இருக்கும். இந்த உலகத்தில் உயிர் வாழும் வரை ஒரு மனிதனுக்கு, மற்றொரு மனிதனால் தொல்லை இருந்து வரும். அந்த தொல்லைதான் பொறாமை, கண் திருஷ்டி, பிணி, பிரச்சினை, எந்த ரூபத்திலும் வரும். கண்திருஷ்டியை கழிக்க உகந்த நாள் வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை. அடுத்தபடியாக மாதம்தோறும் வரக்கூடிய அமாவாசை நாள்.

thrishti

இந்த அமாவாசை தினத்தில் கட்டாயமாக உங்கள் வீட்டிற்கும், உங்கள் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களுக்கும், நீங்கள் தொழில் செய்யும் இடத்திற்கும், உங்கள் தொழிலுக்கும், திருஷ்டி கழித்து தான் ஆக வேண்டும். பின் சொல்லக்கூடிய முறைப்படி மாதம் தோறும் திருஷ்டி கழித்து வந்தால் உங்களுக்கு கண் திருஷ்டியால் பெரிய பாதிப்புகள் வராமல் இருக்கும். முன்னேற்றம் தடைபடாது. அமாவாசை தினத்தில் எப்படி திருஷ்டி கழிப்பது என்று நிறைய முறைகள் நமக்கு தெரிந்திருக்கும். அதில் ஒரு சக்தி வாய்ந்த சுலபமான முறையை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பொதுவாகவே எல்லோர் வீட்டிலும், கடைகளிலும் அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிக்காய் சுற்றி உடைக்கும் வழக்கம் இருக்கும். இந்த திருஷ்டி பூசணிக்காயில் சிறிய துளை போட்டு, அதன் உள்ளே குங்குமம் சில்லறைக் காசுகளைப் போட்டு உடைப்பார்கள் அல்லவா. இதைதான் நாம் கொஞ்சம் வித்தியாசமாக சக்தி வாய்ந்த பரிகாரம் ஆக மாற்ற போகின்றோம்.

sunnambu

அமாவாசைக்கு முந்தைய நாளே ஒரு சிறிய திருஷ்டி பூசணிக்காய் வாங்கிக்கொள்ளுங்கள். அதன் நடுவே சிறிய துளை போட்டு, உள்ளே கொஞ்சமாக மஞ்சள், கொஞ்சம் போல பன்னீர், கொஞ்சம் போல சுண்ணாம்பு, கொஞ்சம் குங்குமம், இந்த 4 பொருட்களையும் சேர்த்து இந்த பூசணிக்காயை வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அல்லது கடையின் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

முந்தைய நாள் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு இதை தயார் செய்து வைத்து விட்டீர்கள். மறுநாள் அமாவாசை. அமாவாசை தினத்தன்று மதியம் 12 மணி நேரத்தில் இந்த பூசணிக்காயை எடுத்து ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அல்லது வீதியில் ஓரமாக இருக்கக்கூடிய இடத்தில் உடைத்து விடுங்கள். அவ்வளவு தான். உங்கள் வீட்டை பிடித்த, நீங்கள் தொழில் செய்யும் இடத்தை பிடித்த பீடை, கண் திருஷ்டி, தரித்திரம் அனைத்தும் இந்த பூசணிக்காயுடன் வெளியே சென்றுவிடும்.

poosani

அந்தக் காலம் முதல் இந்தக்காலம் வரை ஆரத்தியை தயார் செய்வதற்கு மஞ்சளும் சுண்ணாம்பும் தான் தான் பிரதானமாகச் சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் எவ்வளவு பெரிய சந்தோஷமான நிகழ்ச்சி நடந்தாலும் ஆலம் கரைப்பதற்கு மஞ்சளையும் சுண்ணாம்பையும் தான் பயன்படுத்தி வந்தார்கள். நம்முடைய முன்னோர்களுக்கு தெரிந்துள்ளது இந்த சுண்ணாம்பும் மஞ்சளும் எதிர்மறை ஆற்றலை கண்திருஷ்ட்டியை நீக்கக் கூடிய சக்தி கொண்ட பொருட்கள் என்று. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் இந்த இரண்டு பொருட்களிலும் கிருமி நாசினியாகவும் செயல்பட்டு வருகிறது. உங்களுக்கு ஆன்மீக ரீதியாக நம்பிக்கை இருந்தாலும் சரி, அறிவியல் ரீதியாக நம்பிக்கை இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

- Advertisement -