நாளை புதன்கிழமையோடு சேர்ந்து வரும் புரட்டாசி அமாவாசை. பொன்னும் பொருளும் குவிய, கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனையிலிருந்து விடுபட இதை மட்டும் செய்ய மறக்காதீங்க.

amavasai
- Advertisement -

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட மகத்துவம் கொண்ட புதன்கிழமை அன்று புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை தினம் வருகின்றது. இந்த அற்புதம் வாய்ந்த நாளில் எல்லோரும் தங்களுடைய முன்னோர்களை நினைத்து, கட்டாயம் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட வேண்டும். இது நமக்கு மட்டுமல்ல நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கும் நன்மை தரக்கூடிய விஷயம். இதை முதலில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். கூடுமானவரை நாளை மதியம் எல்லோர் வீடுகளிலும் முன்னோர்களுடைய வழிபாடு நிறைவடைந்து இருக்கும்.

amavasai1

நாளைய தினம் முன்னோர்களது வழிபாட்டை முடித்து விட்டு, இந்த அமாவாசை தினத்தில் நம்முடைய பணக்கஷ்டம் தீர, கடன் சுமை குறைய, நமக்கு இருக்கக்கூடிய அத்தனை கஷ்டங்களுக்கும் விமோசனம் கிடைக்க, நாம் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். எனக்கு பண பிரச்சனையை கிடையாது. கடன் ஒரு ரூபாய் கூட இல்லை என்று சொல்பவர்கள் வீட்டில் பொன்னும் பொருளும் மேலும் மேலும் சேர வேண்டுமென்று இந்த பரிகாரத்தை செய்து பயனடையலாம்.

- Advertisement -

நாளை மாலை 6 மணிக்குப் பிறகு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அதன் பின்பு இந்த பரிகாரத்தை செய்யலாம். மஞ்சள் நிறத்தில் சதுரமாக இருக்கும் ஒரு துணியை எடுத்துக் கொள்ளுங்கள். துணி புதியதாக இருக்கட்டும். அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை வைத்துக் கொள்ள வேண்டும். மகாலட்சுமியையும் குல தெய்வத்தையும் மனதார வேண்டி உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் சரியாகி விட வேண்டும் என்று, அந்த கல் உப்பை அந்தத் துணியில் வைத்து கொள்ள வேண்டும்.

uppu

அடுத்தபடியாக ஒரு வசம்பை உங்கள் வலது உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உங்களுக்கு என்ன பிரச்சனை சரியாக வேண்டுமோ, அந்த பிரச்சனையை வாய்விட்டு பதினோரு முறை சொல்லுங்கள். கடன் சுமை குறைய வேண்டும். அடமான நகையை மீட்க வேண்டும். சொந்த வீடு வாங்க வேண்டும். சொந்த நிலம் வாங்க வேண்டும். வீட்டில் சண்டை சச்சரவுகள் இருக்கக்கூடாது. யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் அவர்களுடைய உடல் நிலை சரியாக வேண்டும். குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும். குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி உங்களுக்கு எந்த தேவையுள்ளது. அதில் ஒரு தேவையை மட்டும் பதினோரு முறை உச்சரித்து விட்டு அந்த வசம்பை, மஞ்சள் துணியில் இருக்கும் உப்போடு சேர்த்து வைத்து விடுங்கள். அவ்வளவு தான். இப்போது மஞ்சள் துணியில் இருக்கும் உப்பையும் வசம்பயும் சிறிய முடிச்சாக கட்டி மகாலட்சுமி பாதங்களில் வைத்து விடுங்கள்.

vasambu

நாளை அமாவாசை இரவு முழுவதும் இந்த முடிச்சு உங்கள் வீட்டு பூஜையறையில் அப்படியே இருக்கட்டும். அதாவது புதன்கிழமை இரவு முழுவதும் இந்த முடிச்சு உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்க வேண்டும். வியாழக்கிழமை காலை அந்த முடிச்சை அவிழ்த்து அதில் இருக்கும் உப்பை தண்ணீரில் கரைத்து விடுங்கள். உப்பு கரைத்த தண்ணீரை சிங்கிள் கொட்டி விடுங்கள்.

kuladheivam 1

முடிச்சில் இருக்கும் அந்த வசம்பை நெருப்பில் சுட்டு கொஞ்சமாக நெய்யில் குழைத்து தினம் தோறும் அதை நெற்றியில் இட்டு வர வேண்டும். இந்த பரிகாரத்தை மட்டும் முழு நம்பிக்கையோடு செய்து பாருங்களேன். நீங்கள் அமாவாசை தினத்தன்று எதை மனதில் நினைத்து இந்த முடிச்சு முடிந்து வைத்தீர்களோ, அது கூடிய விரைவில் நிறைவேறிவிடும். நம்பிக்கையுள்ளவர்கள் நாளை இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -