6 வாரங்கள் தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு இந்த பூவால் அர்ச்சனை செய்தால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வது உறுதி. சண்டை சச்சரவுடன் வாழும் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.

- Advertisement -

பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வேண்டும். செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும். தொழிலில் அதிக லாபம் பெற வேண்டும். திருமணம் நடக்க வேண்டும். இப்படியாக ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு தேவைகளும், ஒவ்வொரு வேண்டுதல்களும் இருக்கத்தான் செய்கிறது. இறைவனிடம் வைக்கும் பிரார்த்தனை அத்தனையும் நிறைவேற, வைக்கக்கூடிய வேண்டுதலுக்கு உடனடியாக பலன் கிடைக்க, ஆன்மீக ரீதியாக ஒரு சில பரிகாரங்கள் உங்களுக்காக சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வாழ்க்கையில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதோ அந்தப் பிரச்சினைக்கு உண்டான எளிய பரிகாரத்தை செய்து பயனடையலாம்.

பழமையான சிவன் கோவில்களில் இருக்கும் துர்க்கை அம்மனுக்கு வாரம்தோறும் வரக்கூடிய செவ்வாய் கிழமையில் முல்லைப் பூவை கொண்டு அர்ச்சனை செய்து வர நீண்ட நாட்கள் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். ஒரே வீட்டில் எலியும் பூனையுமாக கணவன் மனைவி வாழ்ந்தாலும், அவர்களுக்குள் சண்டை சச்சரவு இல்லாமல் சந்தோஷமாக வாழ தொடங்குவார்கள். தொடர்ந்து 6 வாரம் செவ்வாய்க்கிழமை இந்த பூஜையைச் செய்ய வேண்டும்.

- Advertisement -

காரிய தடை விலக இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள். நீங்கள் நல்ல காரியத்திற்கு செல்லும் போது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிற கயிறு அல்லது ஒரு விரலி மஞ்சளை கையில் எடுத்துச் செல்லுங்கள். நிச்சயமாக நீங்கள் செல்லும் காரியம் உங்களுக்கு வெற்றியை தரும்.

பெற்றோர்கள் வாரம்தோறும் வரக்கூடிய புதன்கிழமைகளில், நவகிரகங்களில் இருக்கும் புதன் பகவானுக்கு தாமரைப் பூவை வாங்கி கொடுத்து பிள்ளைகளின் பெயரை சொல்லி அர்ச்சனை செய்துவர, பெற்றோர் சொல் பேச்சு கேட்காத பிள்ளைகள் கூட, நல்லபடியாக மாறி விடுவார்கள். தொடர்ந்து 27 வாரம் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வாரம்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கும் மகாவிஷ்ணுவுக்கும் மரிக்கொழுந்து சாத்தி பூஜை செய்துவர வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். பணவரவு அதிகரிக்கும். தொழிலில் நிறைய லாபம் பார்க்கலாம்.

தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து கிழக்கு பார்த்தவாறு நின்று கொண்டு உள்ளங்கைகள் சிறிது தண்ணீரை ஊற்றி அந்த தண்ணீரை, ஒலி எழுப்பி சத்தத்தோடு உறிஞ்சி மூன்று முறை குடித்தால் தீராத நோயும் சீக்கிரமே தீரும். நோய் நொடி இல்லாதவர்கள் இதை செய்தால் உங்களை ஆயுசுக்கும் எந்த நோயும் அண்டாது. (கோவிலில் தீர்த்தம் கொடுத்தால் வாங்கி கையால் உறிஞ்சி குடிப்போம் அல்லவா அதேபோல)

உங்களுடைய பிள்ளைகளுக்கு திருமணம் நடப்பதற்கு காலதாமதம் ஏற்படுகிறதா. வளர்பிறை பஞ்சமி திதியில் விடியற்காலை 4 மணியிலிருந்து 5 மணிக்குள் சந்திர பகவானை பார்த்து ‘என்னுடைய பிள்ளைக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும்’ என்று சொல்லுங்கள். 6 வார பஞ்சமி திதி அன்று இதுபோல செய்து வர சீக்கிரத்திலேயே உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல வரன் தேடி வரும்.

- Advertisement -