கஷ்டங்கள் தீர அஷ்டமி பரிகாரம்

varahi amman
- Advertisement -

அஷ்டமி என்றதும் நினைவுக்கு வருவது காலபைரவர் தான். இருப்பினும் அஷ்டமி தினத்தில் நாம் வராகி அம்மனையும் வழிபாடு செய்யலாம். அதோடு மட்டுமல்லாமல் குலதெய்வத்தின் வழிபாடு மிகவும் சிறப்புக்குரியது. எந்த ஒரு தெய்வத்திற்குரிய விசேஷமான நாளாக இருந்தாலும் அந்த தினத்தன்று அந்த தெய்வத்தை வழிபடுவதற்கு முன்பாக குலதெய்வத்தை நாம் வழிபட வேண்டும். அப்பொழுதுதான் அந்த தெய்வத்திற்குரிய முழு பலனையும் நம்மால் பெற முடியும். அந்த வகையில் அஷ்டமி தினத்தன்று நம் செய்ய வேண்டிய எளிமையான தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக நம்முடைய வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை நினைத்து ஒரு தீபத்தை நாம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த தீபத்தை நாம் தினமும் ஏற்றுவது சிறப்பு. அப்படி தினமும் ஏற்ற இயலாது என்பவர்கள் அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, பஞ்சமி, பிரதோஷம் போன்ற நாட்களில் குலதெய்வத்தை நினைத்து தீபம் ஏற்றுவது என்பது நல்ல பலனை தரும்.

- Advertisement -

நம்முடைய அன்றாட வழிபாட்டின் பலனை பெற வேண்டும் என்றால் முதலில் நாம் குலதெய்வத்தை தான் வணங்க வேண்டும். சரி இப்பொழுது அஷ்டமி தினத்தன்று செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை தெரிந்து கொள்வோம். பொதுவாக அஷ்டமி என்பது கால பைரவர், வராகி அம்மன் போன்ற உக்கிர தெய்வங்களுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது.

அன்றைய தினத்தில் இந்த தெய்வங்களை வழிபடும் பொழுது அந்த தெய்வத்தின் அருளால் நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் சரி அல்லது வீட்டில் இருந்து கொண்டே வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் சரி. அதற்குரிய முழுமையான பலனை நம்மால் பெற முடியும். இந்த வழிபாட்டுடன் சில தாந்திரீக பரிகாரங்களையும் நாம் செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்கள் தீரும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு தாந்திரீக பரிகாரத்தை பார்ப்போம்.

- Advertisement -

இதற்கு இரண்டே இரண்டு பொருட்கள் வேண்டும். ஒன்று வெற்றிலை மற்றொன்று வெந்தயம். வெற்றிலை என்பது நமக்கு வெற்றிகளை வாரி வழங்கக் கூடியது என்றும், வெந்தயம் என்பது பண ஈர்ப்பு அதிகரிக்க கூடிய ஒரு ஆகர்ஷண பொருள் என்றும் நம்மில் பலருக்கும் தெரியும். அஷ்டமி தினத்தன்று இரவு முதலில் இரண்டே இரண்டு வெந்தயத்தை எடுத்து வலது உள்ளங்கையில் நடுவில் ரேகை செல்லும் அல்லவா? அந்த ரேகையில் வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு வராகி அம்மனிடம் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய எப்பேர்ப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சனையை மனதார கூற வேண்டும். இவ்வாறு வராகி அம்மனிடம் கூறிய பிறகு உங்கள் மூச்சுக்காற்று இந்த வெந்தயத்தில் படும்படி விட வேண்டும். பிறகு இந்த இரண்டு வெந்தயத்தை எடுத்து நல்ல கிளியாத ஒரு வெற்றிலையில் வைத்து அதை மடித்து உங்களுடைய தலையணைக்கு கீழ் வைத்து இரவு படுத்து உறங்க வேண்டும்.

- Advertisement -

மறுநாள் காலையில் இதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய பிரச்சனைகளும், கஷ்டங்களும், தீய சக்திகளும் அனைத்துமே விலகி நமக்கு நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:கொடுத்த பணத்தை திரும்ப பெற வரமிளகாய் பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தில் விருப்பம் இருப்பவர்கள் முழு மனதுடன் குல தெய்வத்தையும் வாராகி அம்மனையும் நினைத்து இந்த பரிகாரத்தை செய்து கஷ்டங்களிலிருந்து விடுபடலாம்.

- Advertisement -