இந்த இரண்டு மலர்கள் உங்கள் கைகளில் இருந்தால் போதும் உங்களை விட பெரிய அதிர்ஷ்டசாலி உலகத்தில் யாரும் இருக்க முடியாது. அனைத்து வகை ஐஸ்வர்யங்களையும் உங்கள் இடம் கொண்டு வந்து சேர்க்கும் தெய்வீக மலர்கள்.

- Advertisement -

நாமெல்லாம் நினைச்சா எங்க நடக்க போகுது அப்படிங்கிற ஒரு ஏக்கம் கலந்த வார்த்தை பேசாத மனிதர்களே இருக்க மாட்டார்கள். இது எல்லா மனிதரும் புலம்பும் பொதுவான ஒரு விசயம் தான். ஆனால் அப்படி எல்லாம் நம் எண்ணத்திற்கும் செயலுக்கும் சக்தி அதிகம் இதை நான் முடிக்க வேண்டும் என்று முதலில் நாம் நினைக்க வேண்டும். அத்தோடு நினைப்பதை நடத்தி முடிக்க, சில விஷயங்களை சாத்தியமாக்க வேண்டுமானால், அதற்கு ஆன்மீகத்தில் நிறைய வழிமுறைகள் உண்டு. நமக்கு தேவையானவற்றை இந்த பிரபஞ்சத்திலிருந்து நாம் பெற என்ன செய்ய ஒரு சில விஷயங்களை நாம் பிந்த்ரா வேண்டும் . அது என்ன என்பது பற்றி தான் இந்த பதிவு.

இந்த பிரபஞ்சம் எட்டுத்திக்குகளை கொண்டது திசைக்கு ஒன்றாக எட்டு திக்கிற்கும் ஒவ்வொரு தேவதைகள் ஆட்சி செய்து கொண்டு இருப்பதாக ஒரு ஐதீகம் நம் வழக்கத்தில் உண்டு. இந்த தேவதைகளின் ஆசீர்வாதமும், அனுகிரகமும் நமக்கு இருந்தால் நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் உங்களுக்கு கைகூடும். ஏன் நாமே சிலரை பார்த்திருப்போம். அவர் ஒரு சிலர் இது நடக்க வேண்டும் என்று நினைத்தாலே அவர்களுக்கு நிச்சயம் அந்த காரியம் கைகூடும். இதை தான் நாம் அவர்கள் அதிர்ஷ்டசாலி என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடுவோம்.

- Advertisement -

அந்த அதிர்ஷ்டத்தை எல்லோராலும் பெற முடியும். அது எப்படி என்று யோசிக்கிறீர்களா? அதற்கு பெரிய அளவில் நீங்கள் எதையும் விலை கொடுத்து வாங்குவதில்லை இரண்டு தாமரை மலர்கள் உங்களிடம் இருந்தால் போதும் வெண்தாமரை, சிவப்புத்தாமரை இந்த இரண்டு தாமரை உங்கள் வசம் இருந்தால் எட்டுத்திக்கின் தேவதைகளின் ஆசியும் உங்களுக்கு கிடைக்கும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த முறையை செய்ய ஞாயிற்றுக்கிழமை மிகவும் உகந்த நாள். ஞாயிற்றுக்கிழமை காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்த பிறகு உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள். அப்போது உங்களின் வலது கையில் வெண்தாமரையும் இடது கையில் சிகப்பு தாமரையும் இருக்கும் படி வைத்துக்கொண்டு இந்த ஒரு வார்த்தையை மட்டும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருங்கள். (தாமரை மலரை முதல் நாளே வாங்கி வைத்து விடுங்கள்) எட்டு திக்கிலும் என்னை ஆளும் தேவதைகளே என்னை ஆசீர்வதியுங்கள். இந்த ஒரு வார்த்தையை மட்டும் திரும்ப திரும்ப உச்சரித்துக் கொண்டே இருங்கள். உங்களால் எத்தனை முறை சொல்ல முடியுமோ அத்தனை முறை இந்த மலர்களை உங்கள் கையில் வைத்துக் கொண்டு சொல்லுங்கள்.

- Advertisement -

நீங்கள் சொல்லி முடித்தவுடன் இந்த மலர்களை உங்கள் பூஜை அறையில் வைத்து, உங்களின் இஷ்ட தெய்வம் குலதெய்வம் , உங்கள் வேண்டுதல்கள் பலிக்க வேண்டும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேற வேண்டுமென்று வேண்டிக் கொண்டு, உங்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள். இந்த மலர் காய்ந்தவுடன் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். வாரம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமையில் இதை செய்து வாருங்கள்.

இந்த தாமரை மலரானது தேவதைகளின் ஆசி பெற்ற ஒரு மலர். இதற்கு பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளும் கட்டுப்படுவதுடன் லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக்கூடிய மஹாலக்ஷ்மி தாயாரின் வசம் எப்பவும் இருக்கும் அற்புத மலர் தான் இந்த தாமரை. இதற்கு அதிக தெய்வ சக்தியும் உண்டு. இந்த மலர் உங்கள் கையில் இருக்கும் போது உங்கள் வாழ்க்கையும் நல்ல முறையில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த முறையில் பிராத்தனை செய்து அதிஷ்டத்தை உங்கள் வசம் ஆக்கி, உங்களின் கனவுகளை பூர்த்தி செய்து வளமான வாழ்க்கையை வாழுங்கள்.

- Advertisement -