வீட்டில் அதிர்ஷ்டம் தரும் ஒலிகள் என்னென்ன? இந்த சத்தம் எல்லாம் வீட்டில் கேட்டால் துரதிஷ்டம் நீங்கி அதிர்ஷ்ட கதவு திறக்குமாம்!

lakshmi-laughing-valayal
- Advertisement -

வீடு எப்பொழுதும் அமைதியாக இருப்பது நல்லது கிடையாது. வீட்டில் இருப்பவர்களின் மகிழ்ச்சி சத்தங்களால் மட்டுமே உறுதி செய்யப்படுகிறது. வீட்டில் அதிர்ஷ்டம் தரக்கூடிய சப்தங்கள் என்னென்ன? இதனால் உண்டாகக் கூடிய பலன்கள் என்னென்ன? வீட்டில் துரதிர்ஷ்டத்தை துரத்தக்கூடிய ஒலிகள் எப்படி இருக்க வேண்டும்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வீட்டில் ஒலிக்க வேண்டிய முதல் சத்தம் சிரிப்பொலி ஆகும். மகிழ்ச்சியான இல்லங்களில் லட்சுமி குடி இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. அழுகை சத்தம் இல்லாமல் சிரிப்பு சத்தம் கேட்கும் இல்லங்களில் மகாலட்சுமி மகிழ்ச்சியுடன் குடியிருப்பாளாம். இதனால் தான் அழுகை இருக்கும் இல்லங்களில் தன வரவு தடைபடுகிறது. கணவனால் மனைவி அழுவதும், பெற்றோர்களால் பிள்ளைகள் அழுவதும் கூடாது. எப்பொழுதும் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து விட்டுக் கொடுத்து அன்னோன்யமாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அப்போது தான் வருமானமும் அதிகரிக்கும் அதனால் அதிர்ஷ்டமும் வந்து சேரும்.

- Advertisement -

வீட்டில் கேட்க வேண்டிய மற்றொரு சட்டம் வளையல் ஓசை ஆகும். பெண்களை கண்ணாடி வளையல் அணிந்து கொள்ள சொல்வதும் இதனால் தான். வளையல் அணியாத பெண்கள் முந்தைய காலத்தில் கிடையாது ஆனால் இப்பொழுது வளையல் ஒரு இடைஞ்சலாக இருக்கிறது என்று யாரும் போடுவது கூட கிடையாது. மெட்டல் வளையல்களை காட்டிலும் கண்ணாடி வளையலில் இருந்து உருவாகக்கூடிய சத்தம் குடும்பத்திற்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம். எப்பொழுதும் வளையலோசை குடும்பத்தில் கேட்டுக் கொண்டே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

அதே போல மரக்கலன்களில் இருந்து இசைக்கப்படும் இசை, ஒலிக்கப்படும் ஒலி போன்றவையும் குடும்பத்திற்கு அதிர்ஷ்டத்தை கொடுக்குமாம். வீடுகளில் மரத்தினால் ஆன இசை ஒலிகளை எழுப்பக்கூடிய அலங்காரங்களை செய்யலாம். மரத்தினால் ஆனா இசை கருவிகளையும் வாங்கி அழகிருக்கு வைக்கலாம். இப்படி அமைக்கப்படும் இல்லங்களில் குபேர வாசம் இருக்கும். இவர்களுக்கு தங்கு தடை இல்லாத வருமானம் இருக்கும்.

- Advertisement -

குடும்பத்தில் சில்லறை நாணயங்கள் உடைய சத்தமும் கேட்க வேண்டும். குறிப்பாக பூஜை அறையில் இந்த சத்தம் கேட்குமாறு வைத்திருந்தால் மகாலட்சுமி வாசம் குறைவில்லாமல் இருக்கும். துரதிர்ஷ்டங்கள் நீங்கி அதிர்ஷ்டங்கள் வருவதற்கு சில்லரை நாணயங்களை ஒரு கண்ணாடி பவுலில் போட்டு பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். நாணயங்களைக் கொண்டு விக்ரஹங்களுக்கு அர்ச்சனை செய்வது, அன்றாட செலவுக்கு அதிலிருந்து நாணயங்களை எடுத்து பயன்படுத்துவது போன்றவை தொடர்ந்து செய்து வந்தால் அந்த குடும்பத்தில் அதிர்ஷ்டம் வரும் என்கிற நம்பிக்கையும் உண்டு.

இதையும் படிக்கலாமே:
இந்த பரிகாரம் எல்லாம் முன்கூட்டியே தெரிந்திருந்தால் வாழ்க்கையில் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு இருக்கவே வேண்டாம். ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் ஒரே முற்றுப்புள்ளி வைக்க இதோ ஆன்மீகம் சொல்லும் எளிய பரிகாரங்கள்.

குடும்பத்தில் மழலை செல்வத்தின் சத்தம் கேட்டால் குறைவில்லாத அதிர்ஷ்டம் வரும் என்பது எல்லோரும் அறிந்ததே! பிள்ளை பேரு உண்டாவது என்பதே இன்று மிகப்பெரிய விஷயமாக மாறிவிட்டது. குழந்தை செல்வம் கிடைக்காதா? என்று மருத்துவமனை படிகளையும், ஆலய படிகளையும் அதிகம் ஏறுவோர் உண்டு. இந்த மழலை செல்வத்தின் ஓசை கேட்டுக் கொண்டே இருக்கும் இல்லங்களில் துரதிர்ஷ்டங்கள் ஓடிவிடும். சகல சௌபாக்கியங்களும் உண்டாக எப்பொழுதும் மழலை செல்வத்தின் ஓசை கேட்க வேண்டும். குழந்தைகளை அழ வைக்காமல் அவர்களை சிரிக்க வைத்து அந்த ஓசையை வீடும் முழுக்க நிரப்ப வேண்டும், இதனாலும் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.

- Advertisement -