அள்ள அள்ள குறையாத செல்வம் சேர அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் 10 எளிய பரிகாரங்கள்! இதை செய்தாலே வாழ்வில் பணக் கஷ்டமே வராது தெரியுமா?

lakshmi-cash
- Advertisement -

அள்ள அள்ள குறையாத செல்வங்கள் சேர சிறு எளிய பரிகாரங்கள் ஆன்மீக நூல்களில் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயங்களை கடைபிடிப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான உயர்வு உண்டாகும், அவர்கள் செய்யும் செயல் வெற்றியாகும், இதனால் பணம் பெருகும். வருமானம் உயரும், அதிர்ஷ்டம் வந்து சேரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அப்படியான அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கக்கூடிய எளிய பரிகாரங்கள் பத்தினை தான் இந்த ஆன்மீகம் பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

  1. வாழ்க்கையில் ஏதோ ஒரு முக்கியமான நாள், நீங்கள் வெற்றி பெறும் நாளாக இருக்கும். அதற்கான முயற்சிகளில் நீங்கள் ஈடுபட்டு கொண்டு இருக்கலாம். அது வேலை, படிப்பு, தொழில் என்று எந்த விஷயமாக இருந்தாலும் பரவாயில்லை. இத்தகு முக்கிய நாட்களில் நீங்கள் அணிந்து கொண்டிருக்கும் சட்டை பையில் சிகப்பு நிற ஸ்வஸ்திக் படம் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். இதனால் அதிர்ஷ்டம் உங்களை தேடி வருவதாக நம்பிக்கை உண்டு.

2. வீட்டில் தங்கம் சேர, குறைவில்லாத செல்வம் அதிகரிக்க பூஜை அறையில் ஒரு மஞ்சள் துணியை எடுத்து அதில் உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு தங்கத்தை வைத்து முடிச்சு போட்டு முடிந்து யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் மறைவாக வைத்து விடுங்கள். பூஜை அறையில் மஞ்சள் துணியில் தங்கத்தை முடிந்து வைத்தால் தங்கம் சேரும், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

3. வீட்டில் சுபிட்சம் பெருக, மகாலட்சுமியின் அருள் கிடைக்க வெள்ளிக்கிழமையில் எப்பொழுதும் சிறிதளவு கோமியத்தை வீடு முழுவதும் தெளித்துக் கொள்ளுங்கள். கோமாதாவில் இருந்து கிடைக்கக்கூடிய இந்த கோமியம் ஆன்மீக ரீதியாக தெய்வீக அம்சம் பொருந்தியது. இதை வீட்டில் தெளிப்பதால் செல்வ வளமானது பெருகும், அதிர்ஷ்டம் வருமாம்.

4. திருமணமான பெண்கள் கைராசி பெறவும், குடும்பத்தில் நல்ல பெயர் எடுக்கவும், பொறுமையாக இருக்கவும், அதிர்ஷ்டகரமான விஷயங்களை பெறவும் சுமங்கலி பெண்கள் மாமியாரிடமிருந்து வெள்ளி நாணயம் ஒன்றை பரிசாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை பத்திரமாக பாதுகாத்து வாருங்கள். இதனால் அதிர்ஷ்ட மழை உங்களைத் தேடி வரும்.

- Advertisement -

5. பெண்கள் சிறு வைர மூக்குத்தி அணிவது அதிர்ஷ்டத்தை தரும் என்று சாஸ்திர நூல்கள் குறிப்பிடுகிறது. வசதி உள்ளவர்கள் நிறைய செலவு செய்து கூட வைரம் வாங்கி அணிந்து கொள்வார்கள். வசதியற்றவர்கள் குறைந்த செலவில் சிறிய அளவிலான வைரம் அணிந்து கொண்டாலும் நலம் தான்.

6. பணம் பெருகவும், நம்மிடம் இருக்கின்ற பணம் வீண் விரயம் ஆகாமல் தடுத்து, பணம் புழங்க செய்யவும் கூடிய சக்தி குங்கும பூவிற்கு உண்டு. இந்த குங்குமப்பூவை அரைத்து தினமும் சிறிய அளவில் நெற்றியில் வைத்துக் கொண்டு வந்தால் நிறைவான செல்வம் நம்மிடம் சேருமாம்.

- Advertisement -

7. நம்மைப் பிடித்த தரித்திரங்கள், பீடைகள் நீங்கினால் தான் நம்மிடம் அதிர்ஷ்டம் வந்து சேரும். நமக்கு வர வேண்டிய அதிர்ஷ்டத்தை தடுத்து நிறுத்தக்கூடிய இந்த தீய சக்திகளை நம் உடம்பிலிருந்து விரட்டி அடிக்கவும், நம் மனதில் இருந்து துரத்தி அடிக்கவும் மாதம் ஒரு முறையாவது நாம் குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் சுத்தமான பசும்பால் சேர்த்து குளிக்க வேண்டும்.

8. தொழிலில் அதிக லாபத்தை காணவும், வியாபார வெற்றி அடையவும், வெற்றி மேல் வெற்றி குவியவும் நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம், ஒரு சிறிய அளவிலான சதுர டாலர் ஒன்றை வெள்ளியில் அணிந்து கொள்ளலாம். இப்படி செய்ய தொழிலில் வெற்றி பெறலாம். உங்களை சுற்றி இருக்கும் போட்டியாளர்களை எளிதில் வெற்றி கொள்ளலாம்.

9. குடும்பத்தில் தோஷங்கள் இருப்பின் நீங்கள் கோவிலுக்கு அடிக்கடி செல்ல வேண்டும். அப்படி செல்ல முடியாவிட்டாலும், மாதம் ஒரு முறையாவது ஏதாவது ஒரு அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று அங்கு விளக்கு ஏற்றும் எண்ணெயை தானம் செய்து வாருங்கள். இதனால் உங்களுடைய குடும்ப தோஷம் நீங்கி செல்வம் பெருகும்.

இதையும் படிக்கலாமே:
பல நாள் விற்க்காத சொத்தைக் கூட, பல மடங்கு லாபத்தோடு விற்க இந்த ஒரு விளக்கு ஏற்றினாலே போதும்.

10. பகைவர்களை வெற்றி கொண்டு, வழக்குகளில் வெற்றி அடைய மற்றும் சுற்றி இருக்கும் சூழ்ச்சிகளை முறியடித்து, வாழ்க்கையில் வெற்றி பெற, பொருளாதார முன்னேற்றம் அடைய, வருமானம் பெருக ஞாயிற்றுக்கிழமையில் பைரவருக்கு மது படைத்து வழிபடலாம் ஆனால் இதனை நாம் அருந்தக்கூடாது.

- Advertisement -