இந்த பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கும், பிடித்த வேலை கிடைக்காதவர்களுக்கும் உடனே நல்ல வேலை கிடைக்கும்.

athimaram
- Advertisement -

சமுதாயத்தில் ஒருவருக்கான மரியாதையும், அந்தஸ்தும் அவர்கள் செய்யும் வேலையைப் பொறுத்து தான் அமைகிறது. அதே போல் அவர்களின் எதிர்கால வாழ்க்கையும் அவர்கள் செய்யும் வேலையை சார்ந்தே இருக்கிறது. ஒரு சிலர் அரும்பாடுபட்டு படித்து முடித்து தங்கள் தகுதிக்கான வேலையை தேடிக் கொண்டிருப்பார்கள். அதே போல் இன்னும் சிலர் தன் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும், வேறு வழியில்லாமல் மனதிற்கு பிடிக்காத வேலையை செய்து கொண்டிருப்பார்கள். இவ்வாறு இருப்பதற்கு காரணம் அவர்களுக்கு இருக்கும் உத்தியோக தோஷமாகும். இந்த தோஷத்தை நீக்க செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

athimaram1

அத்திமரம்:
அத்திமரம் சுக்கிரனின் அம்சமாக பார்க்கப்படுகிறது. ஜாதகத்தில் சுக்கிர தோஷம் உள்ளவர்களுக்கு வேலையின்மை, பொருளாதார பிரச்சனை போன்ற நெருக்கடியான சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கும். எனவே சுக்கிரனின் அம்சமாக விளங்கும் அத்தி மரத்தால் செய்த தெய்வ சிலைகளை வீட்டில் வைத்து பூஜித்து வருவதன் மூலமும் நல்ல மாற்றங்களை பெற முடியும். அது மட்டுமல்லாமல் அத்தி மரத்தின் வேரை வைத்து ஒரு எளிய பரிகாரம் மேற்கொள்வதன் மூலமாக உத்தியோக தோஷத்தை உடனே நிவர்த்தி செய்ய முடியும்.

- Advertisement -

பரிகாரம்:
அத்தி மரத்தின் வடக்கு நோக்கி செல்லும் வேர் பகுதியில் இருந்து சிறிய துண்டு வேரினை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பு: அத்தி மர வேரினை கருங்கல் வைத்து மட்டுமே வெட்டி எடுக்கவேண்டும். கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு வெட்டி எடுத்தோம் என்றால் அவற்றிற்கு எந்தப் பலனும் கிடைக்காது.

agal-vilakku-deepam

பின்னர் மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி வைத்து, எடுத்து வந்த சிறிய துண்டு அத்திமர வேரினை அந்த விளக்கினுள் வைத்து விடவேண்டும். நான்கு நாட்கள் அதனை அப்படியே விட்டு விட்டு, பின்னர் ஐந்தாம் நாள் விளக்கில் பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பின்னர் அதனை பூஜை அறையில் வைத்து, உங்களுக்கான இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து, எனக்கு இருக்கும் உத்தியோக தோஷம் தீர்ந்து நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு வெள்ளி தாயத்தில் பூஜை செய்த அத்திமர வேரினை வைத்து, அதனுடன் ஏதேனும் ஒரு வித வாசனை திரவியம் அதாவது அரகஜா, ஜவ்வாது, புனுகு இவற்றில் ஏதேனும் ஒன்றை அதனுடன் சேர்த்து கொண்டு, பின்னர் ஏதேனும் கோவிலில் வாங்கி வந்த திரு நீரையும் அவற்றுடன் சேர்த்து நன்றாக மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.

thayathu

பின்னர் இந்த தாயத்தை ஒரு சிகப்பு கயிறுடன் சேர்த்து, அதனை உடம்பின் தொண்டைக்குழி, நெஞ்சுக்குழி, அல்லது கை புஜத்தில் கட்டிக்கொள்ள வேண்டும். இந்த மூன்று இடங்களில் கட்டிக் கொண்டால் மட்டுமே முழு பலன்களை பெறமுடியும். இதைத்தவிர இடுப்பிலோ, கை மணிக்கட்டிலோ கட்டிக் கொண்டால் இதற்கான முழு பலன் கிடைக்காது. இவ்வாறு பூஜை செய்த இந்த அத்தி மர வேர் தாயத்தை அணிந்து கொள்வதன் மூலம் சுக்கிரதோஷம் நீங்கி உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற நல்லவேலை உங்களைத் தேடி வரும்.

- Advertisement -