அழியாத செல்வமும், பெயரும் புகழும் நம்முடனே கடைசி வரை வரும். முருகப் பெருமானை நினைத்து இந்த ஒரு வரி மந்திரத்தை சொன்னால்!

murugan-om
- Advertisement -

பெயர், புகழ், பணம் இவைகளை சம்பாதிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இவையெல்லாவற்றையும் எப்படியோ கஷ்டப்பட்டு சேர்த்து விட்டோம். ஆனால், சேர்த்த செல்வங்களை, சேர்த்த புகழை, சேர்த்து வைத்திருக்கும் பெயரை நம் கடைசி மூச்சு இருக்கும் வரை காப்பாற்ற வேண்டும். அதில் தான் சாமர்த்தியமே அடங்கியுள்ளது. நாம் சில பேரை பார்த்து இருப்போம். சில வருடங்களிலேயே ரொம்பவும் கஷ்டப்பட்டு புகழின் உச்சிக்கே சென்று இருப்பார்கள். அடுத்த ஒருசில வருடத்தில் அவர்கள் இருக்கும் இடமே தெரியாது. காணாமல் போயிருப்பார்கள்.

நிறைய பிரபலங்களின் வாழ்வில் இப்படிப்பட்ட சம்பவம் நடப்பது சாதாரணமான விஷயம். ஒருவருக்கு பெயரும் புகழும் பதவியும் செல்வமும் நிலைத்து இருக்க ஆன்மீக ரீதியாக என்ன வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றிய ஒரு சிறிய தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

வெற்றி கடவுள் என்றாலே அது முருகப்பெருமானை தான் குறிக்கின்றது. அந்த வெற்றியை நம்மிடமே நிலைத்து நிற்கச் செய்ய முருகப்பெருமானை தினம் தினம்  எப்படி வழிபாடு செய்ய வேண்டும். தினமும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு முல்லை பூ, அல்லது அரளிப் பூ கொண்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். ஒரு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபமேற்றி வைத்து விடுங்கள்.

முருகப்பெருமானுக்கு முன்பு ஒரு சிறிய கிண்ணத்தை வைத்து விட்டு அதில் குங்கும அர்ச்சனை செய்யலாம். அப்படி இல்லை என்றால் அரளி பூவால் அர்ச்சனை செய்யலாம். அப்படி இல்லை என்றால் முல்லைப் பூவால் அர்ச்சனை செய்யலாம். உங்களுக்கு எந்த பொருள் கிடைக்கின்றதோ ஒவ்வொரு நாள், ஒவ்வொரு பொருளை வைத்து அர்ச்சனை செய்தாலும் சரி.

- Advertisement -

அர்ச்சனை செய்யும்போது முருகப்பெருமானின் சக்திவாய்ந்த இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். ‘ஓம் ஐம் சம் சரவண பவாய நமஹ!’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து அர்ச்சனை செய்து உங்களுடைய வாழ்க்கையில் வெற்றி நிலையாக நிலைத்து நிற்க வேண்டும் என்று முருகப் பெருமானை வேண்டிக் கொள்ளுங்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு உண்மையாக சேர்த்து வைத்திருக்கும் பெயர் புகழ் சொத்து அந்தஸ்து எல்லாமே கடைசி வரை உங்களுடன் நிலையாக இருக்கும். அதற்கு அந்த முருகப்பெருமானே பொறுப்பு. நம்பிக்கையோடு இந்த வழிபாட்டு முறையை செய்து வருபவர்களுக்கு வாழ்க்கையில் மேலும் மேலும் செல்வமும் பெயரும் புகழும் உயர்ந்து கொண்டே செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை உச்சரித்து நல்ல பலனை பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -