வேகவேகமாக உங்களுடைய முடியை வளரச்செய்யும் வாழைப்பழ ஹர் பேக். 3 மாதத்தில் எல்லா முடிகளும் ஒரே சீராக வளர்ந்து நிற்கும்.

vaazhaipazham
- Advertisement -

தலையில் ஆங்காங்கே முடிகள் துண்டு துண்டாக உடைந்து காணப்படுகிறது. எல்லா முடிகளும் சீராக வளர வில்லை. அதேசமயம் முடியின் மேல் பகுதியில் இருக்கக்கூடிய அடர்த்தி கீழ்ப்பகுதி வரை ஒரே சீராக இல்லை. கீழ் பகுதியில் முடி எலிவால் போல மெலிந்து காணப்படுகிறது என்பவர்கள் முடியை வலுவோடு போஷாக்காக வளர்ப்பதற்கு இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தலாம். தொடர்ந்து 3 மாதம் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தும் போதும். உங்களுடைய முடி வளர்ச்சியில் நல்ல வித்தியாசம் தெரியும். துண்டுதுண்டாக உங்கள் தலை முடியில் இருக்கக்கூடிய முடிகள் அனைத்தும் நீளமாக வளரத் தொடங்கிவிடும்.

இந்த ஹேர் பேக் தயார் செய்ய நமக்கு பழுத்த வாழைப்பழம், தேங்காய் பால், முட்டையின் வெள்ளைக் கரு இந்த மூன்று பொருட்கள் தேவை. முதலில் அரை மூடி அளவு தேங்காயைத் துருவி மிக்ஸியில் போட்டு அரைத்து நன்றாக பிழிந்து தேங்காய் பால் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1 வாழைப்பழத்தை தோலை நீக்கிவிட்டு வாழைப்பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டுக் கொள்ளுங்கள். இந்த வாழைப்பழத்தை அரைக்க எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தேங்காய் பாலை ஊற்றி மிக்ஸியை ஓட விடுங்கள். வாழைப்பழம் தேங்காய் பாலுடன் சேர்ந்து நன்றாக அரைபட்டு விடும். நமக்கு வாழைப்பழ விழுது கிடைத்திருக்கும். (உங்களுக்கு ரொம்பவும் பெரிய முடியாக இருந்தால் 2 வாழைப்பழங்களை கூட சேர்த்து கொள்ளலாம் தவறு கிடையாது.

இதை அப்படியே ஒரு பவுலில் மாற்றிக்கொள்ளுங்கள். இந்த பேக்குடன் 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் எந்த எண்ணெயை வேண்டுமென்றாலும் நாம் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம். இதோடு ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை ஊற்றி நன்றாக அடித்து கலக்கி இந்த பேக்கை அப்படியே தலையில் அப்ளை செய்ய வேண்டியது தான்.

- Advertisement -

முதலில் பேக்கை தலைமுடியில் வேர்க்கால்களில் படும்படி நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள். முடியை ஒவ்வொரு பாகமாக பிரித்து மண்டை ஓட்டில் ஹேர் பேக் படும்படி அப்ளை செய்துவிட்டு, முடியின் நுனி வரை நீளவாக்கில் அப்படியே பேக்கை தடவி விடுங்கள். 20 நிமிடங்கள் பேக் தலையில் நன்றாக ஊறும். அதன் பின்பு ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு தலையை நன்றாக அலசி விடுங்கள்.

ஒருமுறை இந்த பேக்கை பயன்படுத்திய உடனேயே உங்களுடைய முடி அடர்த்தியானது போல ஒரு ஃபீல் இருக்கும். வாரத்தில் 2 நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்தலாம். மூன்று மாதங்கள் மட்டும் இந்த பேக்கை வாரத்தில் இரண்டு நாட்கள் பயன்படுத்துங்கள் போதும். அப்படி இல்லை என்றால் மாதத்திற்கு 2 முறை போட்டால் 6 மாதத்திற்கு போடலாம். முடியை அடர்த்தியாக வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் எந்த வித பயமும் இல்லாமல் இந்த பேக்கை பயன்படுத்தி பாருங்கள். நிச்சயமாக நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -