நாம் சிவபெருமானுக்கு ஒரு குறிப்பிட்ட பொருளை கொண்டு அபிஷேகம் செய்வதன் மூலமாக குறிப்பிட்ட பலனை அடைய முடியும். அந்த வகையில் சிவனுக்கு எந்தெந்த பொருளை கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பலனை பெறலாம் என்று பார்ப்போம் வாருங்கள்.
1.எலுமிச்சம்பழச் சாறு:
எலுமிச்சம் பழச்சாறினால் அபிஷேகம் செய்தால், எதிரிகள் அச்சம் நீங்கி, பகைமைகள் விலகும்.
2.விபூதி அபிஷேகம்:
விபூதியால் அபிஷேகம் செய்தால், இன்ப வாழ்க்கையும் மோட்சமும் கிடைக்கும்.
3.வலம்புரிச் சங்கு அபிஷேகம்:
சிவபெருமானுக்கு மிகவும் உவப்பானது வலம்புரிச் சங்கினால் செய்யப்பெறும் அபிஷேகம். வலம்புரிச் சங்கில் மகாலட்சுமியும் குபேரனும் வாசம் செய்வதாக ஐதீகம். வலம்புரிச் சங்கினால் அபிஷேகம் செய்தால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைப்பதுடன், தீவினைகள் நீங்கி, நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.
4.கரும்புச் சாறு:
கரும்புச் சாறினால் அபிஷேகம் செய்தால், நோய்நொடிகள் நீங்கி, ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம்.
5.இளநீர்:
இளநீரால் அபிஷேகம் செய்தால், இன்பமான வாழ்வு கிடைக்கும்.
6.பஞ்சாமிர்தம்:
பழங்கள், தேன், கற்கண்டு ஆகியவை சேர்த்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால், உடலும் உள்ளமும் வலிமைபெறும்.
7.தேன்:
தேனால் அபிஷேகம் செய்தால், இசை வல்லமை கிடைக்கும்.
8.பால்:
பாலால் அபிஷேகம் செய்தால், நோய்நொடிகள் நீங்கும்; ஆரோக்கிய உடல் நலத்துடன் ஆயுள் நீடிக்கும்.
9.தயிர்:
தயிரால் அபிஷேகம் செய்தால், நல்ல குழந்தைகளைப் பெறலாம்.
10.நெய்:
நெய்யால் அபிஷேகம் செய்தால், முக்தியைத் தரும்.
கோயிலாக இருந்தால், அர்ச்சகரிடம் கொடுத்து அபிஷேகம் செய்யச் சொல்லலாம். முறைப்படி வீட்டிலேயே சிவலிங்கம் வைத்து பூஜை செய்பவர்கள், அவரவர் விரும்பும் பலனுக்கு ஏற்ற அபிஷேகப் பொருள்களைக்கொண்டு அபிஷேகம் செய்யலாம்.