நாளை புதன் பகவானின் வருகையால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிகள்.

budhan2
- Advertisement -

புதன் பகவான் இதுநாள் வரை சிம்ம ராசியில் குடியிருந்தார். அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி, அதாவது நாளைய தினம் சிம்ம ராசியில் இருந்து, தனது சொந்த வீடான கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்து அமரப் போகின்றார். இந்த புதன் பெயிற்சியின் மூலம் சில ராசிகளுக்கு பத்திர யோகம் கிடைப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

கன்னி ராசிக்கு வந்து அமர போகும் புதன் பகவான், உச்சம் பெறும்போது, நன்மை அடையக்கூடிய 3 ராசிகள் என்னென்ன பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். அந்த 3 ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு, இந்த பத்திர யோகம் என்றால் என்ன என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா. பேச்சாற்றல், செயலாற்றல், நல்ல சிந்தனை, அறிவாற்றல், இப்படி எல்லா விஷயத்திலும் சகலகலா வல்லவனாக தேர்ச்சி பெறுபவனையே திறமைசாலி என்று சொல்லுவோம்.

- Advertisement -

எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் தன்னை பாதுகாத்துக் கொள்ள சமயோகித புத்தியோடு செயல்படுபவனையும் திறமைசாலி என்று சொல்லுவோம். மேல் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து திறமைகளும் ஒருவனுக்கு கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு, புதன் பகவானின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்க வேண்டும். புதன் பகவானால் ஒருவருக்கு ஏற்படக்கூடிய யோகத்தையே, ‘பத்திர யோகம்’ என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

மிதுனம்

இந்த புதன் பெயர்ச்சியின் மூலம் மிதுன ராசிக்கு மிகப்பெரிய யோகம் காத்துக் கொண்டிருக்கிறது. புதியதாக சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்பவர்கள், இந்த நேரத்தில் தொடங்கினால் பெரிய வெற்றி காணலாம். வேலையில் இதுநாள் வரை வருமானத்தில் பிரச்சனை இருந்திருக்கும். இனி நிரந்தர வருமானம் உங்கள் கைக்கு வந்து சேரும்.

- Advertisement -

பணத்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. கடன் வாங்கி கஷ்டப்பட்டவர்கள் கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்து மனநிம்மதி பெறுவீர்கள். குறிப்பாக மாணவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். ஒரு சில சின்ன சின்ன பிரச்சனைகளில் இருந்தும் தப்பிக்க வேண்டும் என்றால் தினமும் மகாலட்சுமி தாயாருக்கு நெய்விளக்கு ஏற்றவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் நினைத்துப் பார்க்காத நிறைய நல்லது உங்கள் வீட்டு வாசல் கதவை தட்டும். தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள் கூட, இனிவரும் காலகட்டத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். இத்தனை நாட்களாக வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்களுக்கு உயர்ந்த பதவியில் நிறைய சம்பளத்தோடு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும்.

- Advertisement -

இன்னும் வரக்கூடிய சின்ன சின்ன சிக்கல்களில் இருந்தும் தப்பிக்க புதன்கிழமை அன்று பச்சை பயிரை சுண்டல் செய்து கொண்டு போய் நவக்கிரகத்தில் இருக்கும் குரு பகவானுக்கு நிவேதனம் வைத்து, இரண்டு விளக்கு போட்டு வழிபாடு செய்ய வேண்டும். அந்த பச்சைப் பயிரை கோவிலில் வரும் பக்தர்களுக்கு தானம் கொடுக்கவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கழுத்தை நெரித்து வந்த கடன் சுமை படிப்படியாக குறைந்து விடும். இனி புதன் பகவான் உங்களுக்கு கைநிறைய வருமானத்தை ஏதாவது ஒரு ரூபத்தில் கொடுத்துக் கொண்டே இருப்பார். வீண் செலவுகள் குறையும். எந்த முடிவை எடுப்பது என்று தடுமாறிக் கொண்டிருந்த உங்களுக்கு தெளிவான முடிவு எடுக்கக்கூடிய தைரியத்தையும் கொடுப்பார்.

உங்களுடைய பிள்ளைகள் இனி படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த சமயம் சொந்த தொழிலில் நீங்கள் செய்யக்கூடிய முதலீடு இரட்டிப்பு லாபத்தை கொடுக்கும். அப்படியே இன்னும் வரக்கூடிய சின்ன சின்ன சிக்கல்களை நீங்கள் சமாளிக்க வேண்டும் என்றால், புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யவும்.

- Advertisement -