வாழையடி வாழையாக நம்முடைய பரம்பரை தழைக்க, பூஜை அறையில் இந்த 1 பொருளை வாங்கி வைத்து வழிபாடு செய்தாலே போதும்.

poojai
- Advertisement -

இந்த பிறவியில் நமக்கு இருக்கக்கூடிய ஆசை என்றால் அது என்னவாக இருக்கும். நம்முடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். நம்முடைய பரம்பரை வாழையடி வாழையாக தழைத்து அடுத்தடுத்த தலைமுறைக்கு தலைதூக்கி நிற்க வேண்டும். நம் குடும்பத்தின் பெயரை சொல்லுவதற்கு, நம்முடைய ரத்தத்தில் ஒரு வாரிசு இந்த பூமியில் வந்து, நம்முடைய குலப் பெருமையை சொல்ல வேண்டும். பெரும்பாலும் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த ஆசை கட்டாயம் இருக்கும்.

vazhai-kandru

நாம் நட்டுவைத்த வாழைமரம் சாய்வதற்கு முன்பாக அந்த வாழை மரத்திற்கு பக்கத்திலேயே ஒரு புது வாழை கன்று வளர்ந்து நிற்குமாம். இதனால்தான் நம்முடைய முன்னோர்கள், நம்முடைய பரம்பரை வாழையடி வாழையாக வளர வேண்டும் என்று வாழ்த்துவார்கள். சரி இப்போது தலைப்பிற்கு வருவோம்.

- Advertisement -

வாழையடி வாழையாக நம் குலம் தழைக்க வேண்டும் என்றால் எந்த பொருளை நம் வீட்டில் வாங்கி வைக்க வேண்டும். வாழைக்கன்று மரத்தை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தால் அந்த வாழைக்கன்று வருவது போல நம்முடைய குலம் வளரும். ஆனால் எல்லோருக்கும் இது சாத்தியமில்லை. எல்லோராலும் மரம் நட்டு வளர்க்க முடியுமா என்றால் அது கேள்விக்குறிதான்.

vazhaimaram

ஆனால் எல்லோராலும் பித்தளையில் விற்கக்கூடிய இந்த வாழை மரத்தை வாங்கி வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய முடியும். இதோ மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள். பித்தளையில் இருக்கும் வாழைமரத்தை  பூஜை அறையில் வைத்து தினம்தோறும் வழிபாடு செய்து வந்தோமேயானால் நம்முடைய பரம்பரை வாழையடி வாழையாக தழைக்கும். குடும்பம் செழித்தோங்கும். (வாழையடி வாழையாக என் குடும்பம் தழைக்க வேண்டும் என்ற வார்த்தையை பூஜை அறையில் தினமும் உச்சரிக்க வேண்டும்.)

- Advertisement -

பூஜை பாத்திரங்கள் விற்கக்கூடிய கடைகளில் இந்த வாழை மரங்கள் பித்தளையில் கிடைக்கின்றன. இதை வாங்கி உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பித்தளையில் இருக்கும் வாழை மரம் ஜோடியாக, அதாவது இரண்டாக வீட்டில் வைக்கவேண்டும். தனியாக ஒன்று வாங்கி வைக்கக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

maailai

அந்த காலத்தில் எல்லாம் நம்முடைய முன்னோர்கள் பூஜை அறையில் சுவற்றில் ஆணி அடித்து மாவிலைத் தோரணம் பித்தளையில் ஒன்று வாங்கி மாட்டி, அந்த மாயிலை தோரத்திற்கு இரண்டு பக்கத்திலும் இந்த வாழை மரக்கன்றுகளை மாட்டி வைத்திருப்பார்கள். இதை சுவற்றில் மாட்டி வைப்பது மிக மிக சுலபம் தான். பூஜை அறைக்கு நடுவில் வைத்துக் கொள்ளுங்கள். பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். வீட்டிற்கு நன்மை தரக்கூடிய இந்த 2 (பித்தளையில் மாயிலைத் தோரணம், பித்தளையில் வாழை மரம்) பூஜை பொருளை உங்களுடைய வீட்டிலும் வாங்கி வைத்து நலம் பெற வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -