கை வைக்காமல் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்யணுமா? நேரம் இல்லாத பொழுது பூஜை பாத்திரங்களை இப்படி செய்யுங்கள், உங்கள் பொன்னான நேரம் மிச்சமாகும்!

brass-vessels-cleaning
- Advertisement -

பூஜை பாத்திரங்கள் கொஞ்சமாக வைத்திருப்பவர்கள் ரொம்பவே சுலபமாக அதை சபினா அல்லது பிதாம்பரி பவுடர் போட்டு தேய்த்து கழுவி விடுவார்கள். ஆனால் வேலைப்பாடுகள் அதிகம் உள்ள பித்தளை பூஜை பாத்திரங்கள் மற்றும் கனமான பித்தளைப் பொருட்கள் என்று ஏகப்பட்ட பொருட்களை குவித்து வைத்து இருப்பவர்களுக்கு அவற்றை சுத்தம் செய்வதற்கு அதற்கென தனியாக மணிக்கணக்கில் நேரம் ஒதுக்க வேண்டி இருக்கும்.

எவ்வளவு பித்தளை பொருட்கள் நீங்கள் வைத்திருந்தாலும், ஒரு மணி நேரத்தில் அத்தனை பித்தளை பாத்திரங்களையும் பளபளன்னு மின்னச் செய்ய இந்த ஒரு விஷயத்தை சிலருக்கு தெரிந்திருந்தாலும் பலருக்கு தெரிவதில்லை! எனவே இப்படி ட்ரை பண்ணி பாருங்க இனி உங்களுடைய நேரமும் மிச்சமாகும். பித்தளை பூஜை பாத்திரங்கள் பளபளக்க சுலபமான வழி என்ன? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

எவ்வளவு பித்தளை பூஜை பாத்திரங்களை நீங்கள் வைத்திருந்தாலும் அதை முதலில் ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது உங்களிடம் இருக்கும் சாதாரண நியூஸ் பேப்பரைக் கொண்டு அதில் வைக்கப்பட்டிருக்கும் மஞ்சள், குங்குமம், எண்ணெய் பசை போன்றவற்றை துடைத்து எடுக்க வேண்டும். முதலில் விளக்கில் இருக்கும் திரிகளை எடுத்துவிட்டு அதில் இருக்கும் எண்ணெயை டிஷ்யூ பேப்பர் அல்லது பேப்பரில் தொட்டுக் கொண்டு துடைத்து எடுத்துவிடுங்கள்.

பின்னர் ஒரு காட்டன் துணி அல்லது டிஷ்யூ பேப்பரில் நீங்கள் மஞ்சள், குங்குமம் வைத்து இருக்கும் இடத்தில் எல்லாம் தண்ணீரை தொட்டு துடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது எல்லா பொருட்களும் சுத்தம் ஆகிய பின்பு ஒரு வாயகன்ற அடி கனமான பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு எலுமிச்சைப் பழ அளவிற்கு புளியை நன்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜை பாத்திரங்களின் மீது ஒரு எலுமிச்சையை இரண்டாக வெட்டி எல்லா இடங்களிலும் படும்படி நன்கு தேய்த்து விடுங்கள்.

- Advertisement -

பிறகு புளி கரைத்த அந்த பாத்திரத்தை அப்படியே எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கொதிக்கின்ற புளித் தண்ணீரில் எல்லா பாத்திரங்களையும் மூழ்கும் படி போட்டு விடுங்கள். பத்து நிமிடம் அப்படியே பாத்திரங்களை போட்டு கொதிக்க விடுங்கள். எலுமிச்சை பழத்தின் தன்மையும், கொதித்த புளி தண்ணீர் உடைய வீரியமும் சேரும் பொழுது பித்தளை பாத்திரத்தில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் அதிலேயே நீங்கிவிடும். பிறகு அடுப்பை அணைத்து அப்படியே விட்டுவிடாமல் கொதி நிலையில் இருக்கும் பொழுதே ஒவ்வொரு பாத்திரத்தையும் ஒரு இடுக்கி அல்லது கரண்டியால் அழுத்தி பிடித்து எடுத்து வெளியில் வையுங்கள்.

ஓரளவுக்கு சூடு ஆறியதும் சுத்தமான காட்டன் துணியால் துடைத்து விடுங்கள். அவ்வளவுதாங்க நீங்கள் கை வைத்து கஷ்டப்பட்டு தேய்க்காமலேயே, எந்த செயற்கை பொருளையும் பயன்படுத்தாமல் வீட்டில் இருக்கும் புளி மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு எத்தகைய பூஜை பித்தளைப் பாத்திரங்களும் ரொம்பவே சுலபமாக ஒரு மணி நேரத்திற்குள் சுத்தம் செய்து அசத்தி விடலாம். நன்கு துடைத்து எடுத்த பின்பு நீங்கள் மஞ்சள், குங்குமம் வைத்தால் மிகவும் அழகாக இருக்கும். வாரம் ஒரு முறை இப்படி செய்து வைத்தால் விடாப்பிடியான கருப்பு நிற கரைகள் இண்டு, இடுக்குகளில் சேராமல் இருக்கும். இதற்காக நிறைய நேரம் செலவிட வேண்டிய அவசியமில்லை, தெரியாதவர்கள் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -