புதன் பகவானால் புதாதித்ய யோகம் பெற்று வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல போகும் 4 ராசிக்காரர்கள்.

Budhan
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவ கிரகங்களில் புதன் பகவான் என்பவர் திருமாலின் அம்சம் கொண்டவராக கருதப்படுகிறார். எனவே தான் பொருளாதார ரீதியிலான லாபத்தை தருகின்ற காரியங்களை புதன்கிழமைகளில் செய்கின்றனர். இந்த புதன் பகவான் என்பவர் சூரிய பகவானுடன் சேரும் பொழுது ஏற்படக்கூடிய யோகமே “புதாதித்ய யோகம்” எனப்படும். அந்த வகையில் புதிதாக பிறந்துள்ள சோபகிருது வருடத்தின் சித்திரை மாதத்தில் புதாதித்ய யோகத்தினால் மேன்மையான பலன்களை பெறக்கூடிய ராசிக்காரர்கள் யார் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு பிறந்திருக்கின்ற சோபகிருது வருடம் சிறப்பான பலன்களை தரப் போகிறது. அதிலும் தற்போதைய சித்திரை மாதத்தில் புதாதித்ய யோகத்தால் இந்த ராசியினருக்கு பல வகைகளில் தன வரவு உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் சிறப்பான வெற்றிகளை பெறும். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி, உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களையும், ஒரு சிலர் பதவி உயர்வுகளையும் பெறுவீர்கள், தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்ததற்கு மேலான லாபங்கள் கிடைக்கும். செல்வ சேமிப்பு உயரும்.

- Advertisement -

கடகம்
கடக ராசியினருக்கு பிறந்திருக்கின்ற சித்திரை மாதத்தில் புதாதித்ய யோகத்தால் எதிர்பார்த்த தன லாபம் ஏற்படும். வெளிநாடு சென்று அதிக வருமானம் ஈட்டும் யோகம் சிலருக்கு உண்டாகும். ஊதியம் குறைந்த பழைய பணியிலிருந்து, வருமானம் அதிகம் உள்ள புதிய பணிக்கு சிலர் மாறுவார்கள். வீண் விரயங்கள் குறைந்து, செல்வ சேமிப்பு அதிகரிக்கும். கூடுதலான வருவாய்க்கான ஆதாரங்கள் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து வருமானம் பெருகும்.

சிம்மம்
சோபகிருது வருடத்தின் முதல் மாதமான சித்திரை முழுவதும் சிம்ம ராசியினருக்கு புதாதித்ய யோகம் இருப்பதால் தொழில், வியாபார ரீதியில் நல்ல லாபங்கள் இருக்கும். கூடுதலான தொழில், வியாபாரங்களில் ஈடுபடும் அமைப்பும் ஏற்படும்.வெளியூர் பயணங்களால் லாபம் இருக்கும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு பெறுவார்கள். சிலருக்கு எதிர்பாராத தன வரவு ஏற்படும். குடும்பத்துடன் சிலர் வெளியூர் பயணங்களுக்கு சென்று மகிழ்வார்கள். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

தனுசு
தனுசு ராசிக்கு இந்த சித்திரை மாதத்தில் நிகழ்கின்ற புதாத்திய யோகத்தால் தொட்டதெல்லாம் துலங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவார்கள். சிலருக்கு நல்ல வருமானம் உள்ள இடங்களில் பணி மாறுதல் ஏற்படும். நீங்கள் கொடுத்த கடன் தொகை அனைத்தும் வட்டியுடன் உங்களிடம் வந்து சேரும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். தொழில், வியாபாரங்களில் கூட்டாளிகளால் நல்ல லாபங்கள் கிடைக்கும். சிலருக்கு வாழ்க்கைத் துணை வழியிலும் வருமானம் உண்டாகும்.

- Advertisement -