இளமையை நிரந்தரமாக தக்கவைத்துக்கொள்ள தூங்கும் போது 2 சொட்டு இந்த எண்ணெயை முகத்தில் தடவிக் கொண்டால் போதும்.

face4
- Advertisement -

நம்முடைய முகம் பார்ப்பதற்கு எப்போதுமே பொலிவாக இருக்க வேண்டும். தோலில் சீக்கிரமே சுருக்கம் விழக்கூடாது. அதேசமயம் கோல்டன் க்லோ என்று சொல்லுவார்கள் அல்லவா, அந்த ஆரஞ்சு நிறம் நம்முடைய முகத்தோடு நிரந்தரமாக இருக்க வேண்டும், மேக்கப் போடாமலேயே மேக்கப் போட்ட லுக் கிடைக்க வேண்டும் என்றால் வீட்டில் இருந்தபடியே என்ன செய்வது என்பதைப் பற்றிய ஒரு குறிப்பை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

உதாரணத்திற்கு உங்களுக்கு ஒரு மாதம் கழித்து நிச்சயதார்த்தமோ, திருமணமோ அல்லது வேறு ஏதாவது சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். உங்களுடைய முகம் நேராக பார்க்கும் போதும் தங்கம் போல ஜொலிக்க, போட்டோசூட்டிலும் தங்கம் போல ஜொலிக்க, என்ன செய்யலாம். மேக்கப்பை போட்டு அப்பிக் கொள்ளக்கூடாது. லைட் மேக்கப்பில் கூட அப்படியே இரண்டு கணத்திலும் கிளார் அடிக்க இந்த டிப்ஸ் ஒன்று போதும்.

- Advertisement -

இதற்கு நமக்கு இரண்டு பொருள் கட்டாயம் தேவை. பாதாம் எண்ணெய் – 100ml, கேரட் – 2. கட்டாயமாக பாதாம் எண்ணெயை பயன்படுத்தினால் தான் முழுப்பலனும் கிடைக்கும். 2 கேரட்டை நன்றாகக் கழுவி தோல் சீவி துருவிக் கொள்ளுங்கள். அதன் பின்பு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து துருவிய கேரட்டை போட்டு, எடுத்து வைத்திருக்கும் பாதாம் எண்ணெயை ஊற்றி அடுப்பை பற்ற வைத்து சிம்மில் வைத்து விடுங்கள்.

கேரட்டும் எண்ணெயுடன் சேர்த்து நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும். சலசலப்பு சத்தம் முழுமையாக அடங்கி கேரட் அனைத்தும் சுருங்கி கருப்பு நிறம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். இதை அப்படியே 8 மணி நேரம் போல நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்புதான் ஒரு வட்டியின் மூலம் வடிகட்டி எண்ணெயை மட்டும் தனியாக எடுத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த எண்ணெய் வெளியில் வைத்தாலே இரண்டு மாதங்களுக்கு கெட்டுப்போகாது. இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுகி விட்டு இந்த எண்ணெயிலிருந்து 4 சொட்டு எடுத்து முகத்தில் ஆங்காங்கே புள்ளிகள் புள்ளிகளாக வைத்து அப்படியே தேய்த்து மசாஜ் செய்து விட்டு விடுங்கள். மறுநாள் காலை எழுந்து எப்போதும் போல முகத்தை கழுவிக் கொள்ளலாம்.

நம்பவே மாட்டீங்க 30 நாட்களில் கன்னம் இரண்டும் அப்படியே தங்க கலரில் மின்னும். நீ என்ன யூஸ் பண்ற. உன்னுடைய முகத்தில் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிகிறது என்று உங்களுடன் பழகுபவர்கள் நிச்சயம் கேட்பார்கள். அந்த அளவிற்கான வித்தியாசத்தை தரக்கூடிய குறிப்புதான் இது. எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. நிறையபேருக்கு ஒரு சந்தேகம் வரும். ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தலாமா என்று.

முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சனை உள்ளவர்கள் மிக மிகக் குறைந்த அளவில் எண்ணெய் உங்களுடைய முகத்தில் தேய்த்துக் கொள்ளலாம். 4 சொட்டு சாதாரணமாக இருப்பவர்கள் முகத்தில் தேய்த்துக் கொண்டால், ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் 2 சொட்டு பயன்படுத்துங்கள் போதும். ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் இந்த எண்ணெயை இரவு முகத்தில் தடவிவிட்டு காலையில் எழுந்து முகத்தை கழுவும் போது கடலைமாவு பயன்படுத்தி முகத்தை கழுவி விடுங்கள். அவ்வளவு தான். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -