இந்த 1 பொருள் உங்கள் பூஜை அறைக்குள் வந்து விட்டால், முழு நிலவு போல உங்களுடைய வாழ்வு என்றென்றும் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டே இருக்கும்.

- Advertisement -

நம்மில் நிறைய பேருக்கு அவ்வளவாக தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றித்தான் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது உங்களுக்கு புதியதான ஒரு தகவலாக கூட இருக்கலாம். அழகு, ஆரோக்கியம், பணம், தெளிவு, சந்தோஷம், புத்தி கூர்மை, இவை அனைத்தும் ஒரு மனிதனுக்கு கட்டாயம் தேவை. இந்த எல்லா விஷயங்களையும் ஒரு சேர நாம் பெற வேண்டும் என்றால் இதற்கான ஒரே வழி சந்திர வழிபாடு. சந்திர பகவானை பௌர்ணமி தினத்தில் தரிசனம் செய்தால் மனம் தெளிவு பெறும். அழகு கிடைக்கும். ஆரோக்கியம் கிடைக்கும். அளவில்லா செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அழகு என்ற உடன் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். சில பேருடை முகம் பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கும். ஆனால் கலை இழந்து கிடைக்கும். முகத்தில் மூதேவி பிடித்தது போல பீடை பிடித்தது போல ஒரு சோகம் இருக்கும். தெளிவாகவே இருக்காது. முகத்தை பிடித்த பீடை விலக சந்திர பகவான் வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பௌர்ணமி தினத்தன்று ஆகாயத்தில் பிரகாசமாக ஒளி வீசும் சந்திர பகவானை கண்கள் குளிர பார்த்து, இரு கைகூப்பி வணங்கி வரங்களைக் கேட்கும்போது, நீங்கள் மனதார சந்தோஷமாக கேட்கும் வரங்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்கும். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். இந்த சந்திர பகவானை நம்முடைய வீட்டிற்குள் அழைத்து நிரந்தரமாக தங்க வைத்து விட்டால் நம்முடைய வாழ்க்கை எவ்வளவு பிரகாசமாக மாறிவிடும். அதற்கு வழி உண்டா என்று கேட்டால், நிச்சயம் உண்டு. அதற்கான பதிவு தான் இது.

சந்திர பகவானுக்கு உண்டான, சந்திரன் யந்திரம் என்று ஒன்று இருக்கிறது. இது உங்களுக்கு செப்பு தகடில் பொறித்த எந்திரமாக கிடைத்தால் அதை அப்படியே வாங்கி நம்முடைய வீட்டு பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு எந்திரமாக இது கிடைக்கவில்லை எனும் பட்சத்தில் இணையதளத்தில் இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை அப்படியே பிரிண்ட் அவுட் எடுத்து சுவற்றில் வீட்டில் ஒட்டி வைத்துக் கொள்ளலாம் தவறு கிடையாது. முடிந்தால் ஃபிரேம் போட்டு பூஜை அறையில் மாட்டிக் கொள்ளலாம். இந்த சந்திர எந்திரம் உங்கள் வீட்டிற்குள் வந்தால் உங்கள் வீட்டிற்குள் இருக்கும் இருள் வெளியே சென்று விடும்.

- Advertisement -

இந்த எந்திரத்திற்கு திங்கட்கிழமை தோறும் உங்களால் முடிந்த ஏதாவது வெள்ளை நிற நிவேதத்தை பிரசாதமாக வைத்து வழிபாடு செய்துவர, உங்களுடைய அழகு வசீகரம் கூடும். செல்வ வளம் அதிகரிக்கும். அறிவாற்றல் பெருகும். மந்தத்தன்மை நீங்கும். இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் பெயர் புகழ் பதவி அனைத்தும் உங்களைத் தேடி வருவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. வெள்ளை நிற நிவேதனம் என்றால் பால், பால் பாயாசம், வெண்பொங்கல், கற்கண்டு கூட வைக்கலாம் தவறு கிடையாது.

சந்திரன் எந்திரம் அல்லவா அது. அதை வைத்து பூஜை செய்யும்போது நமக்கு எவ்வளவு நல்ல பலன் கிடைக்கும் என்று நம்மால் சொல்லவே முடியாது. ஜாதக கட்டத்தில் சந்திரன் சரியாக அமையவில்லை. தோஷம் உள்ளது என்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்தாலும் தோஷ நிவர்த்தி ஆகும்.

நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த யந்திரத்தை கொண்டு வந்து வைத்து வீட்டில் வழிபாடு செய்து பாருங்கள். இருள் நிறைந்த உங்களுடைய உலகம் நிச்சயம் கூடிய சீக்கிரத்தில் முழு  நிலவு போல பிரகாசமாக ஜொலிக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -